நீதிமன்ற தடை உத்தரவுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும்

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்ட பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது…

‘ஒபெக்’ கிலிருந்து விலகும் கத்தாரின் திடீர் அறிவிப்பு

பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’ அமைப்பிலிருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளமையானது கச்சா எண்ணெய் சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளிடையே நிலவும் முறுகல் நிலையை இது மேலும் மோசமாக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி அந்த நாட்டுடன் சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும்,  பொருளாதார பாதிப்பையும்…

ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகல்

பெற்றோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகிக் கொள்ளவுள்ளதாக கட்டாரின் சக்திவள அமைச்சர் சாத் ஷெரிதா அல்-காபி திங்கட்கிழமையன்று அறிவித்தார். உலக எண்ணெய் உற்பத்தியில் நாற்பது வீதத்தினை கட்டார் பெற்றோலியம் என்ற நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உறுதிப்படுத்தியதையடுத்தே எண்ணெய் உற்பத்தி செய்யும் 15 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தோஹாவில் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அல்-காபி கட்டாரின் விலகிக் கொள்ளும் தீர்மானம் எதிர்வரும்…

நாட்டில் அரசாங்கம் இல்லை; நான் மட்டுமே அதிகாரத்தில் அடுத்த 24 மணி நேரம் முக்கியமானது என்கிறார் ஜனாதிபதி

நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து தற்போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை, ஜனாதிபதி நான் மட்டுமே அதிகாரத்தில் உள்ளேன். அடுத்த 24 மணி நேரத்தில் எனக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. ஆகவே அரசாங்கத்தை அமைத்துவிட்டு உடனடியாக பாதுகாப்பு சபையை கூட்டி தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்வு பெற்றுத் தருகின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான…