புத்தரின் புனித தந்தத்தை காண கண்டிக்கு வரும் பௌத்தர்களை அரவணைக்கும் முஸ்லிம்கள்!

புத்­தரின் புனித தந்த தாது, இலங்­கையின் பௌத்­தர்­களால் மிகுந்த பக்­தி­யுடன் வழி­ப­டப்­படும் ஒரு புனிதப் பொரு­ளாகும். 16 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு, இவ்­வ­ருடம் இந்த புனித தாது பொது­மக்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வதால், பக்­தர்­க­ளி­டையே மிகுந்த உற்­சாகம் காணப்­ப­டு­கி­றது. இந்த தரு­ணத்தில் கண்­டிக்கு அதிக எண்­ணிக்­கை­யி­லான மக்கள் வருகை தந்­தி­ருக்­கும்­போது, அதற்­கான ஏற்­பா­டு­களை அரச அதி­கா­ரிகள், இரா­ணுவம் மற்றும் சிவில் சமூ­கமும் முன்­னெ­டுக்­கின்­றன. குறிப்­பாக, முஸ்லிம் சமூ­கத்­தி­ட­மி­ருந்து வழங்­கப்­படும்…

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக கைதான இளைஞரை புனர்வாழ்வளிக்குமாறு உலமா சபை கூறவில்லை

இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஸ்டிக்கர் ஒட்­டி­ய­தற்­காக கைது­செய்­யப்­பட்டு தடு­தது வைக்­கப்­பட்­டுள்ள இளைஞர் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையை மேற்­கோள்­காட்டி பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் புத்­திக மன­துங்க வெளி­யிட்­டி­ருக்கும் கருத்தை உலமா சபை முற்­றாக மறுப்­ப­தாக அதன் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. அத்­துடன், பலஸ்­தீன விவ­கா­ரத்தில் அர­சாங்கம் தனது நிலைப்­பாட்டை தெளி­வாக வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் உலமா சபை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. தனித்து போட்டி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தனித்து போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அக் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். மேல் மற்றும் மத்­திய மாகாண கட்­சியின் மத்­திய குழுவும் தனித்து போட்­டி­யி­டவே விரும்பம் தெரி­வித்­துள்­ளன. எனினும், எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

பத்தாவது பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

இலங்கை ஜன­நா­யக சோசலிச குடி­ய­ரசின் 10 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளாக கடந்த திங்­க­ளன்று 5 பேர் பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்­டனர். இத­னை­ய­டுத்து, அனைத்து கட்­சி­களின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் அடங்­க­லாக 225 பேருக்கான பாரா­ளு­மன்ற கதிரைகள் பூர்த்­தி­யா­கின. இதற்கமைய புதிய ஜன­நா­யக முன்­னணி மற்றும் ஐக்­கிய மக்கள் கூட்­டணி என்­பன தேசியப் பட்­டியல் பிர­தி­நி­தி­களை நிய­மித்த பிறகு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தொகை 22 ஆக உயர்­வ­டைந்­தது.