சவூதி ‘சிலோன் ஹவுஸ்’ விவகாரம்: கொடுக்கல் வாங்கல்கள் எனது பதவிக் காலத்தில் இடம்பெறவில்லை

முன்னாள் அமைச்சர் ஹலீம் திட்டவட்டம்

0 669

‘புனித மக்கா நகரின் ஹரம் ஷரீப் பள்­ளி­வாசல் அபி­வி­ருத்திப் பணி­களின் போது அப்­ப­கு­தியில் அமைந்­தி­ருந்த இலங்­கையின் ‘சிலோன் ஹவுஸ்’ எனும் கட்­டடம் சவூதி அர­சாங்­கத்­தினால் சுவீ­க­ரிக்­கப்­பட்டு நஷ்ட ஈடாக சுமார் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் வழங்­கப்­பட்­ட­தா­கவும் அந்தப் பணத்­துக்கு என்ன நடந்­தது என்று தெரி­ய­வில்லை என்றும் இந்த கொடுக்கல்,வாங்­க­லுடன் முன்னாள் அமைச்சர் ஒருவர் சம்­பந்­தப்­பட்­டுள்ள தாகவும் பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது’இது தவ­றான பிர­சா­ர­மாகும். இந்தக் கொடுக்கல்,வாங்­கல்கள் எனது பத­விக்­கா­லத்தில் இடம்­பெ­ற­வில்லை. நஷ்­ட­ஈ­டாக எவ்­வ­ளவு வழங்­கப்­பட்­டது என்­பது எனக்­குத்­தெ­ரி­யாது. ஆனால் அஸீ­ஸி­யாவில் கட்­ட­ட­மொன்று கொள்­வ­னவு செய்­யப்­பட்டு ‘சிலோன் ஹவுஸ்’ என்ற பெயரில் இயங்கி வரு­கி­றது. அதை சவூ­தி­யி­லுள்ள சாதிக் ஹாஜியார் பரி­பா­லித்து வரு­கிறார் என முன்னாள் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

ஹரம் ஷரீப் பாதை அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­காக இலங்­கையின் முன்னாள் புத்­தி­ஜீ­வி­களால் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட கட்­ட­டத்­துக்­கான நஷ்ட ஈட்­டினைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சாதிக் ஹாஜி­யாரே மும்­மு­ர­மாக செயற்­பட்­டி­ருக்­கிறார். சவூதி நீதி­மன்றில் நஷ்ட ஈட்­டுக்­காக சட்­டத்­த­ர­ணிகள் ஊடாக வாதா­டி­யி­ருக்­கிறார். ‘சிலோன் ஹவுஸ்’ தொடர்­பாக எனது பத­விக்­கா­லத்தில் சாதிக் ஹாஜி­யா­ருடன் கலந்­து­ரை­யாடி யிருக்­கிறேன். விசா­ரித்­தி­ருக்­கிறேன்.

பெற்­றுக்­கொண்ட நஷ்­ட­ஈட்டின் மூலம் அஸீ­ஸி­யாவில் கொள்­வ­னவு செய்த கட்­டடம் மூலம் கிடைக்கும் வரு­மானம் மத்­ரஸா நடத்­து­வ­தற்கும் இலங்கை மாண­வர்கள் உயர்­கல்வி பெறு­வ­தற்கும் செல­வ­ழிக்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறினார்.

சாதிக் ஹாஜி­யாரின் முயற்­சி­யி­னாலே நஷ்­ட­ஈடு கிடைத்­துள்­ளது. அவ­ரது முயற்­சியை நாம் பாராட்­ட­வேண்டும். அஸீ­ஸி­யா­வி­லுள்ள சிலோன் ஹவுஸ் கட்­ட­டத்தில் இலங்­கை­யி­லி­ருந்து செல்லும் வறிய ஹாஜி­க­ளுக்கு தங்­கு­மிட வச­திகள் வழங்­கு­வ­தா­கவும் அவர் கூறினார்.

இதனைப் பரி­பா­லிக்க சாதிக் ஹாஜி­யாரை உள்­ள­டக்­கிய பணிப்­பாளர் சபை­யொன்றை நிய­மிப்­ப­தற்கு எனது பத­விக்­கா­லத்தில் முயற்­சி­களை மேற்­கொண்டேன். இது தொடர்­பாக சவூ­தி­யி­லி­ருந்த அப்­போ­தைய தூத­ரு­டனும், கொன்­சி­யு­ல­ரி­டமும் கலந்துரையாடினேன். என்றாலும் இதுவரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அன்று இதற்கென சாதிக் ஹாஜியாரை உள்ளடக்கி பணிப்பாளர் சபையொன்று நியமிக்கப்பட்டிருந்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்காது என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.