2020 ஹஜ் யாத்திரை: 1800 விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைப்பு

0 555

2020 ஆம் ஆண்டு ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்­வற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் எதிர்­பார்த்­த­ளவு ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பய­ணத்தை இது­வரை உறுதி செய்­யா­ததால் திணைக்­களம் மேலும் 1800 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 2020 ஆம் ஆண்­டுக்கு 3500 ஹஜ் பய­ணி­களின் பயண உறு­தியை எதிர்­பார்த்து அதற்­கான கடி­தங்­களை அனுப்பி வைத்தும், இது­வரை சுமார் 1800 பேரே தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார்.

இதே­வேளை, திணைக்­களம் மேலும் 1800 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு பய­ணத்தை உறுதி செய்­யு­மாறும் பதி­வுக்­கட்­ட­ண­மாக மீள கைய­ளிக்கும் வகையில் 25 ஆயிரம் ரூபாய் கட்­ட­ணத்தைச் செலுத்தி அதற்­கான ரசீ­தினை திணைக்­க­ளத்தில் சமர்ப்­பிக்கும் படியும் கோரி­யுள்­ளது.

25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்­தாத விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு ஹஜ் வாய்ப்பு கிடைக்­க­மாட்­டா­தென்றும் குறிப்­பிட்­டுள்­ளது. எதிர்­வரும் 31 ஆம் திக­திக்கு முன்பு ஹஜ் விண்ணப்பதாரிகள் பதிவுக்கட்டணம் செலுத்தி தங்கள் பயணத்தை உறுதிசெய்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.