அதிகாரப்பகிர்வு குறித்து பேசும் தார்மீகத்தை இந்தியா இழந்துள்ளது

அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

0 699

காஷ்­மீரின் சிறப்பு அதி­கா­ரத்தை இரத்துச் செய்து ஏனைய மாநி­லங்­களைப் போன்று இந்­திய ஆட்சிக் கட்­ட­மைப்­பிற்குள் உள்­வாங்கும் பிர­தமர் நரேந்­திர மோடியின் அதி­ரடி அறி­விப்பின் ஊடாக இந்­தியா ஒற்­றை­யாட்­சிக்குள் நகர்­வ­தா­கவே உணர முடி­கின்­றது என தெரி­வித்­துள்ள அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, இலங்­கையில் அதி­காரப் பகிர்வு குறித்து இதன்­பிற்­பாடு பேசு­வ­தற்­கான தார்­மீக உரி­மை­யினை இந்­தியா இழந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், இந்­திய அர­சாங்­கத்­தினால் அண்­மையில் காஷ்மீர் தொடர்பில் முக்­கிய தீர்­மா­ன­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதா­வது, காஷ்­மீ­ருக்­கான விசேட நிலை­மையை இரத்துச் செய்து பொது­வான ஒரு பிராந்­தி­ய­மாக இந்­தியா அறி­வித்­தது. இந்­திய அர­சி­ல­ய­மைப்பின் 370ஆவது பிரிவின் கீழ் இந்­தி­யாவின் ஏனைய மாநி­லங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டாத விசேட சிறப்­பு­ரிமை காஷ்­மீ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் காஷ்­மீ­ருக்கு பிரத்­தி­யே­க­மான தேசியக் கொடி, பாரா­ளு­மன்றம், சுயாட்சி அதி­கா­ரங்கள் கிடைக்­கப்­பெற்­றன.

இந்­தி­யா­வுக்கு சுதந்­திரம் வழங்­கப்­பட்ட போது காஷ்மீர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் நோக்­கிலே வெள்­ளை­யர்கள் அன்று அவ்­வா­றா­ன­தொரு தீர்வுத் திட்­டத்தை முன்­வைத்­த­துடன், இந்­திய தேசிய காங்­கிரஸ் அதனை ஏற்­றுக்­கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. இதற்கு எதி­ராகக் கடு­மை­யான எதிர்ப்­புக்­களை இந்­துக்கள் வெளி­யிட்­டி­ருந்­தார்கள். இவ்­வா­றா­ன­தொரு வர­லாற்றுப் பின்­ன­ணியில் இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆட்­சி­ய­தி­கா­ரத்­திற்கு வந்­துள்ள நரேந்­திர மோடி தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­வாறு காஷ்­மீ­ருக்­கான சிறப்பு அந்­தஸ்தை இரத்துச் செய்­துள்ளார்.

இதன் பிர­காரம் இந்­தி­யாவின் ஏனைய மாநி­லங்­களைப் போன்று காஷ்­மீரும் இந்­தி­யாவின் ஒரு மாநி­ல­மாக கரு­தப்­பட வேண்­டிய வகையில் அறி­விக்­கப்­பட்­டது. தேர்­தலில் வாக்­கு­று­திக்­க­மைய தான் இந்த தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ள­தாக இந்­திய ஜனா­தி­ப­திக்கு அறி­விக்­கப்­பட்­டது. மறு­புறம் காங்­கிரஸ் உள்­ளிட்ட பெரும்­பா­லான கட்­சிகள் அந்த தீர்­மா­னத்­திற்கு எதி­ராக செயற்­ப­டு­வதை தவிர்த்துக் கொண்­டன.

இந்­தி­யாவின் இந்த செயற்­பாட்டின் கார­ண­மாக இலங்­கைக்கு முக்­கி­ய­மான சில விட­யங்கள் குறித்து அவ­தானம் செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இலங்­கையின் தமிழ் பிரி­வி­னை­வா­திகள் பெரும்­பாலும் மாகாண சபை முறை­மை­யினை நடை­மு­றைப்­ப­டுத்தி காஷ்மீர் போன்று சிறப்பு அதி­கா­ரங்­க­ளுடன் சுயாட்­சியை கோரினர். தற்­போது அந்த நிலைப்­பாட்டை மீறும் வகையில் இந்­தியா செயற்­பட்­டுள்­ளது. இதனால் இலங்­கையில் அதி­காரப் பகிர்வு தொடர்பில் இந்­தி­யா­விற்கு கருத்­து­ரைப்­ப­தற்­கான தார்­மீக உரிமை கிடை­யாது.

பொரு­ளா­தார ரீதியில் பிராந்­தி­யத்தில் வலு­வான இராஜ்­ஜி­ய­மாக இந்­நியா முன்­ன­கர்­கையில் அரச கட்­ட­மைப்பை கூடி­ய­ளவில் ஒற்­றை­யாட்­சிக்குள் கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றமை இயற்­கை­யான ஒரு விட­ய­மாகும். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் தற்­போ­தைய செயற்­பா­டு­களும், இந்நியா முழுவதிலும் பயன்படுத்தும் அதிகாரங்களை கவனத்தில் கொள்ளும்போது ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவே அவரைக் கருத முடிகின்றது.

இலங்கை இரத்துச் செய்ய முயற்சிக்கும் நிறைவேற்று அதிகாரத்தை, இந்நிய பிரதமர் நரேந்திர மோடி கையிலெடுத்து செயற்படுகின்றார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.