ஸாகிர் நாயிக்கை மலேசியாவிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை

0 707

இந்­தி­யாவைச் சேர்ந்த முஸ்லிம் பிர­சா­ரகர் ஸாகிர் நாயிக்­கிற்கு மலே­சி­யாவில் நிரந்த வதி­விட அனு­மதி வழங்­கு­வது தொடர்பில் அந் நாட்டின் அமைச்­ச­ரவை கலந்­து­ரை­யா­டி­யுள்ள நிலையில் பல்­லின மக்கள் வாழும் நாட்டில் இன ரீதி­யான கூரு­ணர்வை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கருத்­தினை வெளி­யிட்டார் எனக் குற்­றம்­சாட்டி அவர் நாட்டை விட்டு வெளி­யேற்­றப்­பட வேண்டும் என நான்கு அமைச்­சர்கள் கோரி­யுள்­ளனர்.

சுமார் மூன்று ஆண்­டு­க­ளாக மலே­சி­யாவில் வாழ்ந்து வரும் ஸாகிர் நாயிக், தென்­கி­ழக்­கா­சிய நாடான மலே­சி­யாவில் வாழும் இந்­துக்கள், இந்­திய சிறு­பான்மை முஸ்­லிம்­களை விட நூறு மடங்கு அதி­க­மான உரி­மை­களைக் கொண்­டுள்­ளனர். சில வேளை­களில் அவர்கள் மலே­சிய அர­சாங்­கத்­தை­விட இந்­திய அர­சாங்­கத்தின் மீதே நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் எனத் தெரி­வித்­த­தை­ய­டுத்து சர்ச்­சையில் சிக்­கினார்.

இனம் மற்றும் மதம் ஆகி­யன மலே­சி­யாவில் கூரு­ணர்­வு­மிக்க பிரச்­சி­னை­க­ளாகும். அங்கு 32 மில்­லியன் மக்­களைக் கொண்­ட­மைந்து சுமார் 60 வீத­மாகக் காணப்­ப­டு­ப­வர்கள் முஸ்­லிம்­க­ளாவர். மீத­முள்­ளோரில் பெரும்­பான்­மை­யினர் சீனர்­களும் இந்­தி­யர்­க­ளு­மாவர். இந்­தி­யர்­களுள் பெரும்­பான்­மை­யினர் இந்­துக்­க­ளாவர்.

”நாங்கள் எமது நிலைப்­பாட்­டினை வெளிப்­ப­டுத்­தி­விட்டோம், அதா­வது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் . அத்­துடன் ஸாகிர் நாயிக் தொடர்ந்தும் மலே­சி­யாவில் இருக்க அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டாது” என தொலைத் தொடர்­பாடல் மற்றும் பல்­லூ­டக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

எமது கரி­ச­னைகள் தொடர்பில் பிர­தமர் கருத்­திற்­கொள்ள வேண்டும். இந்தப் பிரச்­சினை தொடர்பில் மிக விரை­வாக தீர்­மா­ன­மொன்றை எடுப்­ப­தற்­காக எமது நிலைப்­பாட்­டினை அவ­ரது கவ­னத்­திற்கு விடு­கின்றோம் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

நாயிக்கின் கருத்­துக்கள் பல்­லின மக்கள் வாழும் நாட்டில் பிளவை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் முஸ்­லிம்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் அமைந்­துள்­ளன என மலே­சிய மனி­த­வள அமைச்சர் எம்.குல­சே­கரன் தெரி­வித்­துள்ளார்.

நிரந்­தர வதி­விட அந்­தஸ்த்தைப் பெறும் அரு­கதை நாயிக்­கிற்கு இல்லை எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவில் தனக்­கெ­தி­ராக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை தொடர்ச்­சி­யாக மறுத்­து­வரும் ஸாகிர் நாயிக், குல­சே­கரன் மற்றும் ஏனைய மலே­சிய அமைச்­சர்­க­ளி­னாலும் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­துள்ளார்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டையில் இந்துச் சிறு­பான்­மை­யினர் நியா­ய­மான முறையில் நடத்­தப்­ப­டு­கின்­றனர் என மலே­சிய அர­சாங்­கத்தை புகழ்ந்து பேசிய விடயம் திரி­பு­ப­டுத்­தப்­பட்டு அர­சியல் இலா­ப­ம­டை­வ­தற்­கா­கவும் இனங்­க­ளுக்­கி­டையே முறு­கலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் தவ­றாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளது என கடந்த புதன்­கி­ழமை ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்ட அறிக்­கையில் ஸாகிர் நாயிக் தெரி­வித்­துள்ளார்.

மலே­சியா ஸாகிர் நாயிக்கின் கருத்­தினைப் புறந்­தள்ளி அவரை மலே­சி­யாவில் இருக்க அனு­ம­தித்தால் அது இன, மத பிள­வுக்கே இட்டுச் செல்லும் என நீர், காணி மற்றும் இயற்­கை­வள அமைச்சர் சேவியர் ஜெய­குமார் தெரி­வித்­துள்ளார்.

மலே­சி­யா­வி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கும் இடையே வேற்­று­மை­யினை விதைக்கும் நோக்கில் அர­சுக்­கெ­தி­ரான கருத்­துக்­களை வெளி­யிடும் நபர்கள் எமக்குத் தேவை­யில்லை என எனவும் ஜெய­குமார் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, ஸாகிர் நாயிக் கொல்­லப்­படும் ஆபத்து காணப்­ப­டு­வதால் அவர் இந்­தி­யா­வுக்கு திருப்பி அனுப்­பப்­ப­ட­மாட்டார் என மலே­சியப் பிர­தமர் மஹாதிர் மொஹ­மட்டை மேற்­கோள்­காட்டி மலே­சிய அர­சாங்க செய்தி முக­வ­ர­க­மான பெர்­னாமா தெரி­வித்­துள்­ளது. வேறு ஏதா­வது ஒரு நாடு அவரை ஏற்­றுக்­கொள்ள விரும்­பினால் அதனை நாம் வர­வேற்­கின்றோம் எனவும் அவர் தெரி­வித்­த­தாக பெர்­னாமா மேலும் தெரி­வித்­துள்­ளது.

ஸாகிர் நாயிக்கின் கருத்­துக்­களைக் கண்­டித்­துள்ள மலே­சிய இரா­ணுவ மற்றும் பொலிஸில் சேவை­யாற்­றி­ய­வர்­களில் ஒரு குழு­வி­னரின் அமைப்­பான தேசிய தேசப்­பற்று அமைப்பு, மலே­சி­யா­வி­லுள்ள பல இந்­திய இனத்­த­வர்கள் மலேசிய நாட்டின் பாதுகாப்புப் படைகளில் சேவையாற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

பல்வேறுபட்ட சமய சமூகத்தவர்கள் மற்றும் குழுக்களிடையே எதிர்ப்புணர்வை தூண்டுவதற்கு அல்லது தூண்ட முயற்சிப்பதற்கு தன்னைப் பின்தொடர்வோரை ஊக்கப்படுத்தி உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாயிக்கின் இஸ்லாமிய ஆய்வு நிலையத்தை இந்தியா தடை செய்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.ஐ.அப்துல் நஸார்)

vidivelli

Leave A Reply

Your email address will not be published.