மத்ரஸாக்களுக்கு புதிய பாடத்திட்டம்

பங்களாதேஷின் உதவியுடன் நடவடிக்கை

0 652

நாட்டில் இயங்­கி­வரும் அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்குப் பொருத்­த­மான புதிய பாடத்­திட்­ட­மொன்று வடி­வ­மைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்தப் பாடத்­திட்­டத்தை தயா­ரிப்­ப­தற்கு பங்­க­ளா­தேஷின் மத்­ரஸா கல்விச் சபையின் உதவி பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து வருகை தர­வுள்ள மத்­ரஸா கல்விச் சபையின் நிபு­ணர்கள் இருவர் இலங்­கையின் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செய­லா­ளர்கள் மற்றும் உயர் அதி­கா­ரி­களைச் சந்­தித்து இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்தி அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்­ளனர்.

கல்வி அமைச்சும், வெளி­வி­வ­கார அமைச்சும் இணைந்து இதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளன.

இந்தப் பணி­க­ளுக்­காக பங்­க­ளாதேஷ் மத்­ரஸா கல்விச் சபையைச் சேர்ந்த கலா­நிதி மொஹமட் ஹுசைன் மஹ்மூத் பாரூக் மற்றும் கலா­நிதி மஹ்சூம் பில்லா ஆகிய இரு­வரும் நாளை 27 ஆம் திகதி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ளனர். அவர்கள் இரு­வரும் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருந்து இந்தப் பணி­களில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

நாளை இலங்கை வருகை தரும் பங்­க­ளாதேஷ் மத்­ரஸா கல்விச் சபையைச் சேர்ந்த கல்வி நிபு­ணர்கள் 28 ஆம் திகதி முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சரின் தலைமை யிலான குழு­வி­னரைச் சந்­தித்து மத்­ரஸா பாடத்­திட்டம் தொடர்பில் கலந்­துரை யாட­வுள்­ளனர். அத்­தோடு அன்­றைய தினமே கல்வி அமைச்சின் செய­லாளர் உட்­பட அதி­கா­ரி­களைச் சந்­திக்­க­வுள்­ளனர். 30 ஆம் திகதி பயிற்சிப் பட்­ட­றை­யொன்றும் இத்­தி­ஹாதுல் மதாரிஸ் அமைப்­புடன் கலந்­து­ரை­யா­ட­லொன்றும் இடம்­பெ­ற­வுள்­ளது.

இக்­க­லந்­து­ரை­யாடல் மற்றும் பயிற்சிப் பட்­ட­றையில் பங்­க­ளாதேஷ் கல்­வி­ய­லா­ளர்­க­ளுடன் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் அதி­கா­ரிகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். இத்­தி­ஹாதுல் மதாரிஸ் நிறு­வனம், இலங்­கையின் மத்­ரஸா கல்வி மற்றும் அக்­கல்வி பாடத்­திட்டம் தொடர்­பான பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைக்­க­வுள்­ளது. எதிர்­வரும் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை பங்­க­ளாதேஷ் மத்­ரஸா கல்­வி­ய­லா­ளர்கள் இரு­வரும் நாட்டின் பல பாகங்­க­ளி­லு­முள்ள மத்­ர­ஸாக்­க­ளுக்கு கல்வி கள விஜ­யத்­தினை மேற்­கொள்­ள­வுள்­ளனர்.

எதிர்­வரும் 5 ஆம் திகதி மத்­ரஸா சீர்­தி­ருத்­தங்கள் தொடர்­பி­லான பயிற்­சிப்­பட்­ட­றை­யொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்தப் பயிற்சிப் பட்­ட­றைக்கு கல்வி அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் அதி­கா­ரிகள், உல­மாக்கள், மத்­ர­ஸாக்­களின் நிர்­வா­கிகள் அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பங்­க­ளா­தேஷின் கல்வி நிபுணர்கள் இருவரும் இலங்கை மத்ரஸாக்களுக்குப் பொருத்தமான பாடத்திட்டம் தொடர்பில் அறிக்கையொன்றினைத் தயாரித்து எதிர்வரும் 7 ஆம் திகதி பிரதமர் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரிடம் கையளிக்கவுள்ளனர்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

vidivelli

Leave A Reply

Your email address will not be published.