வைத்தியர் ஷாபியின் மனு ஆகஸ்ட் 6 இல் பரிசீலிப்பு

உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானம்

0 603

தன்னை கைது செய்து பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்­துள்­ளமை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தென அறி­விக்­கு­மாறு கோரி, குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மீறல் மனுவை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள உயர் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது. இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான புவ­னேக அலு­வி­ஹார, எல்.டி.பி. தெஹி­தெ­னிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சூர­சேன ஆகியோர் முன்­னி­லையில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போதே இவ்­வாறு எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இம்­ம­னுவை பரி­சீ­லிக்க நீதி­ய­ர­சர்கள் தீர்­மா­னித்­தனர்.
நேற்­றைய தினம் இவ்­வ­டிப்­படை உரிமை மீறல் மனு விசா­ர­ணைக்கு வந்­த­போது, மனு­தா­ர­ரான வைத்­தியர் ஷாபி சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மன்றில் பிர­சன்­ன­மானார். சட்­டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் துஷித் முத­லிகே மன்றில் ஆஜ­ரானார்.

இந்­நி­லையில் மனு ஆரா­யப்­பட்­ட­போது தனது கருத்­தினை முன்­வைத்த சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் துஷித் முத­லிகே,

“பிர­தி­வா­தி­க­ளுக்கு சரி­யாக அறி­வித்­தல்கள் கிடைக்­க­வில்லை. எனவே பிர­தி­வா­தி­க­ளுக்கு உரிய முறையில் அறி­வித்­தலை வழங்க உத்­த­ர­விட்டு, இம்­ம­னுவை பரி­சீ­லிக்க வேறு திக­தி­யொன்றை நிர்­ண­யிக்­கவும்” என கோரினார்.
இதன்­போது மனு­தாரர் சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, தற்­போது தனது சேவை பெறுநர் தடுப்­புக்­கா­வலில் இல்லை எனவும் அவரை நீதிவான் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கவும் கூறினார்.

இந்­நி­லை­யி­லேயே இம்­ம­னுவை பரி­சீ­லிப்­பதை ஆகஸ்ட் 6 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்த மூவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழு, மீள பிர­தி­வா­தி­க­ளுக்கு அது­கு­றித்து அறி­வித்தல் வழங்­கு­மாறு மனு­தாரர் தரப்­புக்கு உத்­த­ர­விட்­டது.

முன்­ன­தாக குரு­நாகல் பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­பலால், பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குரு­நாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்­சிறி ஜயலத், சி.ஐ.டி. பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர, பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, பாது­காப்பு செயலர் ஜெனரல் ஷாந்த கோட்­டே­கொட மற்றும் சட்­டமா அதிபர் ஆகி­யோரை பிர­தி­வா­தி­க­ளாகப் பெய­ரிட்டு வைத்­தியர் ஷாபி அடிப்­படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்­தி­ருந்தார்.

தான் வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­துள்­ள­தாகக் குற்றம் சுமத்தி கைது செய்­யப்­பட்டு பயங்­கர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை சட்ட விரோ­த­மா­ன­தென அறி­விக்­கு­மாறும், எந்த நியா­ய­மான கார­ணி­க­ளு­மின்றி தான் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அது சட்டவிரோதமானதெனத் தீர்ப்பளிக்குமாறும், மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, பாதுகாப்பு செயலரின் அனுமதியுடன் தடுப்புக்காவல் அனுமதிக்கு இடைக்கால தடையத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.எப்.எம்.பஸீர்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.