அஸ்­கி­ரிய மகாநா­யக்க தேர­ருக்கு எதி­ராக இரண்டு முறைப்­பா­டுகள்

ஆராய பொலிஸ் சட்டப்பிரிவிடம் கையயளித்தது பொலிஸ் தலைமையகம்

0 581

முஸ்­லிம்­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்தி அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் வரக்­கா­கொட ஸ்ரீ ஞான­ரத்ன தேரர் அண்­மையில் வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்கள் தொடர்பில் இரு முறைப்­பா­டுகள் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரின் கருத்­துக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கக் கோரியே இந்த முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. 

இந்­நி­லையில் அவ்­விரு முறைப்­பா­டு­களும் பொலிஸ் தலை­மை­ய­கத்தால் பொலிஸ் சட்டப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. அண்­மையில் கண்டி – தொடம்­வல கித்­சி­றி­மெவன் ரஜ­மகா விகா­ரையில் இடம்­பெற்ற சமய நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு அஸ்­கி­ரிய மக­ாநா­யக்க தேரர் உரை­யாற்­றி­யி­ருந்தார். அதில் அவர் வெளிப்­ப­டுத்­தி­ய­தாகக் கூற­ப்படும் சில சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்கள் தொடர்பில் மாற்­றுக்­கொள்­கைக்­கான நிலை­யத்தின் பணிப்­பாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து கடந்த 21 ஆம் திகதி எழுத்­து­மூலம் முறைப்­பா­ட­ளித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் கடந்த 24 ஆம் திகதி தெஹி­வ­ளையைச் சேர்ந்த மொஹம்மட் பஸால் நிஸார் என்­பவர் பொலிஸ் நிவா­ரணப் பிரிவில் முறையிட்டிருந்தார். அதன்படியே இவ்விரு முறைப்பாடுகளும் தற்போது பொலிஸ் சட்டப் பிரிவிடம் ஆராய்வதற்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.