முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

0 437

முஸ்லிம் அமைச்­சர்கள் கூட்­டாகப் பதவி வில­கி­யமை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அதே­வேளை மீண்டும் அமைச்சுப் பத­வி­களை ஏற்றுக் கொள்­ளு­மாறு வற்­பு­றுத்­தவும் முடி­யாது. ஆனால் பதவி விலகிப் பிரிந்து செல்­வதால் தீர்­வி­னைக்­காண முடி­யாது என்­பதால் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும் என்று அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்­து­பீட மகா­நா­யக்க தேரர்கள் பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­க­ளிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் அஸ்­கி­ரிய , மல்­வத்து பீட மகா­நா­யக்க தேரர்கள் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கண்­டியில் இடம்­பெற்­றது. இந்த சந்­திப்பில் முஸ்லிம் அமைச்­சர்கள் அனை­வரும் கூட்­டாக பதவி வில­கி­யமை குறித்து மகா நாயக்க தேரர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்ட போதே இவ்­வி­டயம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
இது குறித்து அஸ்­கி­ரிய பீட அநு­நா­யக்க மெத­கம ஸ்ரீ தம்­மா­னந்த தேரர் தெரி­வித்­த­தா­வது,

பதவி வில­கு­வ­தாக முஸ்லிம் அமைச்­சர்கள் அனை­வரும் எடுத்த தீர்­மானம் எமக்கு சந்­தோ­ஷ­ம­ளிக்­க­வில்லை. அவ்­வாறு பதவி விலகி தனித்து செயற்­ப­டு­வதால் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினைக் காண முடியும் என்று நாம் நினைக்­க­வில்லை. எனவே, இந்த விட­யத்தில் முஸ்லிம் தலை­வர்கள் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலா­சாரம் என்­பது அனை­வ­ருக்கும் பொது­வா­னது. எனவே இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யிலும் ஒற்­றுமை பேணப்­பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலை­வர்கள் வழி­காட்­டி­க­ளாக இருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் பிர­ஜைகள் எனும்­போது சிங்­கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகு­பாடு கிடை­யாது. அனை­வரும் இலங்­கையர் என்ற ஒரே பார்­வை­யி­லேயே பார்க்­கப்­ப­டு­கின்­றனர். அவர்கள் அனை­வரும் ஒரு அர­சாங்­கத்தின் கீழ் உள்­ள­டங்­கு­கின்­றனர். எனவே, கட்­சிகள் வேறா­யினும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினால் மாத்­தி­ரமே மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­மு­டியும் என்­பதை அவர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டினோம் என்றார்.

சந்­திப்பில் கலந்து கொண்ட ஏனைய தேரர்கள் குறிப்­பி­டு­கையில்,
நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களின் பின்னர் சிங்­கள – முஸ்லிம் மக்கள் மத்­தியில் நம்­பிக்­கை­யின்மை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலைமை சரி செய்­யப்­ப­டு­வ­தற்கு குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்றுக் கொடுப்­ப­தற்கு சகல முஸ்லிம் தலை­வர்­களும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மகா­நா­யக்க தேரர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

முஸ்லிம், சிங்­கள மக்­க­ளுக்­கி­டையே நம்­பிக்­கை­யின்மை ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு நாம் நடு­நி­லை­யி­லி­ருந்து தீர்­வு­காண வேண்டும். எனவே நாம் ஒற்­று­மை­யாக செயற்­ப­டா­விட்டால் ஏற்­ப­டப்­போகும் பாரிய சிக்கல் நிலை­மைக்கு அனை­வரும் பொறுப்­புக்­கூற வேண்டியேற்படும். அதே நேரம் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளின்றி உங்களுக்கு பாராளுமன்றத்திற்குச் செல்ல முடியாது. எனவே குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அதே நேரம் சிங்கள மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.