மனித உரிமை ஆணைக்குழுவின் யதார்த்தமான கண்டறிதல்கள்

0 751

நாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­செ­யல்கள் அனைத்தும் வீரியம் மிக்­க­வை­யாக அமைந்­த­மைக்கு பாது­காப்பு பிரி­வி­னரும் கார­ண­மாக இருந்­துள்­ளனர் என்ற குற்­றச்­சாட்டு ஒவ்வொரு வன்­செ­யல்­களின் பின்பும் சுமத்­தப்­பட்டு வந்­துள்­ளது. வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் வாக்கு  மூலங்­களும் வன்­மு­றை­க­ளின்­போது பதிவு செய்­யப்­பட்ட காணொ­லி­களும் இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தற்கு முன்பே அவை தொடர்பில் பொலி­ஸா­ருக்கும் இரா­ணுத்­தி­ன­ருக்கும் அறி­விக்­கப்­பட்ட போதிலும் அது விட­யத்தில் பாது­காப்பு பிரி­வினர் அச­மந்தப் போக்­கி­லேயே செயற்­பட்­டுள்­ளனர். அளுத்­கம, அம்­பாறை மற்றும் கண்டி – திகன பகு­தி­களில் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­வ­தற்கு முன்பே அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. என்­றாலும் பொலிஸார் உரிய நேரத்தில் உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­காத கார­ணத்­தி­னா­லேயே உயிர்ச் சேதங்­களும் சொத்து அழி­வு­களும் ஏற்­பட்­டன.

அண்­மையில் குரு­ணாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­களும் இதே பாணி­யி­லேயே நடந்­தே­றி­யுள்­ளன.

வடமேல் மாகா­ணத்­தில முஸ்லிம் கிரா­மங்­களை இலக்கு வைத்தும், மினு­வாங்­கொடை பகு­தியில் வர்த்­தக நிலை­யங்­களை இலக்­கு­வைத்தும் வன்­மு­றை­யா­ளர்­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில் அவை இடம்­பெற சில­மணி நேரத்­துக்கு முன்­பாக பொலி­ஸா­ருக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்தும் அவற்­றைத்­த­டுக்க எந்த நட­வ­டிக்­கையும் அவர்­களால் எடுக்­கப்­ப­ட­வில்லை’ என மனித உரிமை ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளமை கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளது.

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவி கலா­நிதி தீபிகா உடு­கம, பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் அந்தக் கடி­தத்தில் வன்­மு­றை­களை சீர்­செய்ய இன்­று­வரை உருப்­ப­டி­யான எந்த நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்றும் தாமும் தனது குழு­வி­னரும்  வன்­மு­றைகள் நடந்த இடங்­க­ளுக்கு நேரில்­சென்று தகவல் திரட்­டி­ய­தா­கவும் இதன்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மேல­தி­க­மாக அந்தக் கிரா­மங்­களைச் சேர்ந்­த­வர்கள், கிராமத் தலை­வர்கள், பொலிஸார், இரா­ணுவ வீரர்கள் எனப் பல­ரிடம் கருத்­துப்­ப­திவு செய்­த­தா­கவும் அதி­லி­ருந்தே இந்த விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

மேலும் வடமேல் மாகா­ணத்தில் பதி­வான வன்­மு­றைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் கோரி­யுள்ளார்.

வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட பொலி­ஸா­ரினால் பெரும் எண்­ணிக்­கை­யி­லான சந்­தேக நபர்கள் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்கள். இவர்கள் அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர். மினு­வாங்­கொ­டையில் இவ்­வாறு கைதான 32 பேர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

பலர் பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­மையை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர், பதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு எழு­தி­யுள்ள கடிதம் உறு­திப்­ப­டுத்­து­கி­றது. குளி­யாப்­பிட்­டிய, பிங்­கி­ரிய பகு­தி­களில் கைது செய்யப் பட்­ட­வர்கள் அந்­தந்த பொலிஸ் நிலை­யங்­களால் பிணையில் விடு­விக்கப்பட்­டுள்­ளார்கள் என்­பதும் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

கொஸ்­வத்த பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் பதில் பொலிஸ்மா அதி­பரின் உத்­த­ர­வுக்­க­மைய விடு­விக்­கப்­பட்­ட­தாக அந்தப் பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி பதி­விட்­டுள்­ள­மை­யையும் மனித உரி­மைகள் ஆணைக்­குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

வன்­முறைத் தாக்­கு­தல்கள் தொடர்பில் பொலி­ஸா­ருக்கும், இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்தும் அவற்­றைத்­த­டுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, வன்செயல்கள் சில பகுதிகளில் அவர்களின் முன்னிலையிலே அரங்கேற்றப்பட்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் பாரதூரமான விடயமாகும். வன்செயல்களுக்கு அவர்கள் இடமளித்திருக்கிறார்கள். சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்தபோதே வன்முறைகள் நடந்தேறியிருக்கின்றன. எனவே பாதுகாப்பு அமைச்சும் நாட்டின் தலைவரும் இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் இந்நிலைமை தொடராதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.