குளியாபிட்டிய: சந்தேக நபர்களை அடையாளம் காண முடியாத நிலை

0 577

குளி­யா­ப்பிட்டிய நகரில் வன்­செ­யல்­களில் ஈடு­ப­ட்டு, வர்த்­தக நி­லை­யங்­க­ளைத் தாக்கி சேதம் விளை­வித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டு­ள்ள 11 சந்­தேக நபர்­களை அடை­யாளம் காணும் முக­மாக நடாத்­தப்பட்ட அடை­யாள அணி­வ­கு­ப்பின் போது முறைப்­பாட்­டா­ளர்­க­ளினால் சந்­தேக நபர்­களை அடை­யாளம் காணு­வ­தற்கு முடி­யா­மற்­போ­ன­து.

இந்த அடை­யாளம் காணும் அணி­வ­குப்பு நேற்று முன்­தினம் குளியாப்­பிட்டிய நீதி­மன்ற வளவில் இடம் பெற்­றது. குளி­யாப்­பிட்டிய நீதி­மன்ற நீதிவான் ஜனனி எஸ். விஜே­துங்க முன்­னி­லையில் நடை­பெற்­றது.

சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­க­ப்­பட்­டி­ருந்த 4 முறைப்பா­டுகள் தொடர்பில் இந்த அடை­யாள அணி­வ­குப்பு நடத்­தப்­பட்­டது. குற்றச்சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மேலும் 9 சந்­தேக நபர்­களை அடை­யாளம் காணு­வ­தற்­கான அடை­யாள அணி­வ­குப்பு எதிர்­வரும் 30, 31 ஆம் திக­தி­க­ளிலும் ஜுன் 3 ஆம் திக­தி­க­ளிலும் நடத்­தப்­படும் என நீதிவான் உத்­த­ர­விட்டார்.  அன்­றைய தினம் சந்­தேக நபர்­­களை உடலை மறைத்து ஆஜர்­ப­டுத்­து­மாறும் அவர் உத்­த­ர­விட்டார்.  கடந்த 12 ஆம் திகதி இடம்­பெற்ற வன்­செ­யல்களில்­ சம்­பந்­தப்­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­ய­ப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­க­ப்­பட்­டி­ருந்த இந்த சந்­தேக நபர்­கள் பலத்த பாது­காப்­புடன் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். அடை­யாளம் காணப்­ப­டாத சந்­தேக நபர்கள் 11 பேரையும் எதிர்­வரும் ஜுன் 10 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்கும்படியும் நீதிவான் உத்­த­­ர­விட்டார்.
-Vidiveli

Leave A Reply

Your email address will not be published.