நாட்­டுக்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­தரும் முஸ்லிம் வர்த்­த­கர்­களின் பங்­க­ளிப்பு மகத்­தா­ன­தாகும்

நிதி­ய­மைச்சர் மங்­கள பாரா­ளு­மன்­றத்தில் உரை

0 620

இந்­நாட்­டி­லுள்ள 90 வீதத்­திற்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் எங்­க­ளு­டன்தான் இருக்­கி­றார்கள். பயங்­க­ர­வா­திகள் பதுங்­கி­யி­ருக்கும் இடங்கள் அவர்­களால் காட்டித் தரப்­பட்­ட­தா­லேயே தான் எமது இரா­ணு­வத்­தி­னரால் மிக விரைவில் பயங்­க­ர­வா­தி­களைக் கைது செய்­யவும் நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரவும் முடிந்­தது என்று நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்றக் கூட்­டத்­தொ­டரில் அவ­ருக்கு ஒதுக்­கப்­பட்ட நேரத்தில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது;

வங்­கு­ரோத்து அடைந்­துள்ள எதிர்க்­கட்­சி­யி­னரே நாட்டில் மீண்டும் கல­வ­ர­நிலை ஒன்றைத் தோற்­று­விக்­க முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள். சிங்­கள – முஸ்லிம் மோதல் ஒன்றை ஏற்­ப­டுத்­தவே இவர்கள் தூப­மிட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். மிகச் சிறு குழு­வொன்று செய்த வேலையை இவர்கள் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் பயங்­க­ர­வா­தி­க­ளாக காட்­டவே எத்­த­னிக்­கி­றார்கள்.

மகசோன் பல­காய அணி­யினர் இனக்­க­ல­வ­ரத்தை தூண்டிக் கொண்டு நாட்டை அழிக்கும் வேலை­யையே செய்து கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்­கள்தான் பயங்­க­ர­வா­திகள்.

அண்­மையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­செ­யலால் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கே பாரிய அடி­வி­ழுந்­துள்­ளது. அழித்து  தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட மிகப் பாரிய தொழிற்­சாலை உரி­மை­யாளர் முஸ்­லி­மாக இருந்­த­போ­திலும் அங்கு 95 வீதத்­திற்கும் மேலாக சிங்­கள ஊழி­யர்­களே தொழிலில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். நான் கேள்­விப்­பட்ட வகையில் மூன்றே மூன்று பேர்தான் முஸ்லிம் தொழி­லா­ளர்கள் அங்கு உள்­ளனர். இவர்கள் அனை­வ­ருக்கும் இன்று தொழில் இல்லை. இதே­போன்­றுதான் இந்­நாட்டில் முஸ்­லிம்­களால் நடத்­தப்­படும் பெரிய நிறு­வ­னங்­களில் எல்லாம் பெரும்­பா­லான சிங்­கள தொழி­லா­ளர்­களே வேலைக்­க­மர்த்­தப்­பட்­டுள்­ளார்கள். 4800 பேர் வேலை செய்யும் ப்ராண்டிக்ஸ் நிறு­வ­னத்தில் 75 வீதம் சிங்­க­ளவர், 1200 பேர் பணி­யாற்றும் ஹமீ­தியா நிறு­வ­னத்தில் 80 வீதம் பேர் சிங்­க­ள­வர்கள். எமரல்ட் நிறு­வ­னத்தில் 90 வீதம் சிங்­க­ள­வர்கள். மெலிபன் தொழிற்­சா­லையில் 90 வீதத்­திற்கு மேல் சிங்­க­ள­வர்கள் உள்­ளார்கள். இவ்­வாறு சிங்­களத் தொழில் நிறு­வ­னங்­களில் அதி­க­மானோர் வேலை பார்க்கும் அதே நிலையில் முஸ்லிம் நிறு­வ­னங்­க­ளிலும் அதே அளவு சிங்­கள தொழி­லா­ளர்­க­ளா­லேதான் நிரம்பி வழி­கின்­றதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இவை தாக்­கப்­ப­டும்­போது சிங்­க­ள­வர்­க­ளுக்கே பாதிப்பு ஏற்­ப­டு­கி­றது.

இந்­நாட்டின் அந்­நியச் செல­வா­ணியை ஈட்டித் தரு­வதில் முஸ்லிம் வர்த்­த­கர்கள் பாரிய பங்­க­ளிப்புச் செய்­கி­றார்கள். சிலோன் டீ நிறு­வ­னத்தை ஈண்டு குறிப்­பி­டலாம். இது முஸ்லிம் வர்த்­த­க­ருக்­கு­ரி­யதே. இத்­த­கைய நிறு­வ­னங்­களைத் தாக்­கி­ய­ழிப்­பதன் மூலம் நாட்­டுக்­குத்தான் நாசத்தை விளை­விக்கச் செய்­கி­றார்கள்.

2015 ஆம் ஆண்டு அத­ல­பா­தா­ளத்­தி­லி­ருந்த நாட்டை நாம் ஒரு­வாறு கரை சேர்த்துக் கொண்டு வந்தோம். 2016, 2017 இல் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்­பட்டு எமது பொரு­ளா­தா­ரத்­திற்கு பெரும் சவா­லாக அமைந்­தது. தொடர்ந்தும் நாம் ஈடு­கொ­டுத்து முன்­னேறி வரும்­போது 2018 ஒக்­டோபர் 26 களில் யாப்பை மீறி ஆட்சி மாற்றம் கொண்டு வரப்­பட்­டதால் மீண்டும் பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ச்­சியை எதிர்­கொண்டோம். பின்னர் நீதி­மன்றத் தீர்ப்­பின்­படி நாம் பத­விக்கு வந்து சீரா­கும்­போது ஏப்ரல் 21 தற்­கொலைத் தாக்­குதல் ஏற்­பட்டது. இதனால் முன்னர் நிகழ்ந்த பொரு­ளா­தாரப் பாதிப்பை விடவும் பாரிய வீழ்ச்சி நிலைக்குத் தள்­ளப்­பட்டோம். நல்ல வரு­மானம் ஈட்டித் தந்த உல்­லாசப் பய­ணத்­து­றைக்கும் பாரிய நஷ்­டத்­தையே உண்டு பண்­ணி­யுள்­ளது. தொடர்ந்து எதிர்க்­கட்­சி­யினர் நாட்டை வீழ்த்தும் வேலை­க­ளி­லேதான் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

எதிர்க்­கட்சித் தலை­வரின் விஜே­ரா­ம­வி­லுள்ள வாசஸ்­த­லத்­திற்குச் செல்லும் பாதை­களை மூடி அவர் பெரும் பீதி­யி­லேயே உள்ளார். எமது பிர­த­மரின் வாசஸ்­த­லத்தைப் பாருங்கள் அது சுதந்­தி­ர­மாக விடப்­பட்­டுள்­ளது.

இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்றே நோக்குகின்றனர். ஆனால் இஸ்லாம் சாந்தியும் சமாதானமும் ஒருங்கமைந்த அமைதியை விரும்பும் ஒரு மதமாகும்.

இந்­நாடு சகல மக்­க­ளுக்கும் உரிய நாடு என்­ப­தற்­காக எதிர்க்­கட்­சி­யினர் என் மீது சேறு பூசு­கி­றார்கள். நான் பௌத்த விரோதி என்று பிர­சாரம் செய்­கி­றார்கள். நான் எனது நிதி­ய­மைச்­சி­லி­ருந்து பெருந்­தொகைப் பணத்தை பௌத்த விகா­ரை­களின் அபி­வி­ருத்­திக்கே ஒதுக்­கி­யுள்ளேன். கிறிஸ்தவ, ஹிந்து, முஸ்லிம் வணக்கஸ்தலங்களுக்கு அதைவிட குறைந்த பணத்தையே ஒதுக்கியுள்ளேன். நான் பௌத்த மத விரோதியல்ல பௌத்த தர்மத்தைப் பறைசாற்றும் முன்மாதிரிமிக்க பௌத்தன். பௌத்த மதக் கோட்பாட்டின் படி சகல இன மக்களையும் அனுசரித்து வாழ்பவன். நாட்டை நேசிப்பவன். எனவே ஒரு சில குற்றவாளிகளின் செயற்பாட்டுக்காக முழு இனத்தின் மீது விரலை நீட்டுவதை விட்டு விட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு கைகோர்க்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.