முகத்திரை தடைதொடர்பான வர்த்தமானியின் பிரதியை கைவசம் வைத்திருங்கள்

0 893

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் அபாயா அணிந்து வெளியில் கட­மை­க­ளுக்­காக செல்­லும்­போதும் வைத்­தி­ய­சா­லைகள், அரச நிறு­வ­னங்­க­ளுக்கு செல்­லும்­போதும் அநா­வ­சிய கெடு­பி­டி­க­ளி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­வ­தற்கு முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடை குறித்து அர­சாங்கம் வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலின் தமிழ், சிங்­கள பிர­தி­களை தம்­முடன் எடுத்துச் செல்­லு­மாறு முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­யகம் வெளி­யிட்­டுள்ள அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாலாவி, புத்­த­ளத்தை மைய­மாகக் கொண்டு செயற்­பட்டு வரும் முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­யகம் குறிப்­பிட்ட அர­சாங்க வர்த்­த­மா­னியின் பிர­தி­களை புத்­தளம் பிர­தே­சத்தில் விநி­யோ­கித்து வரு­வ­தா­கவும் நாட்டின் ஏனைய பகு­தி­களில் அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்­தலின் தமிழ், சிங்­கள பிர­தி­களை விநி­யோ­கிப்­ப­தற்கு முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களும் அர­சியல் தலை­மை­களும் ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்­டு­மெ­னவும் அவ் அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­ய­கத்தின் தலைவி ஜுவை­ரியா இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்;

‘புத்­தளம் பகு­தியில் எமது பெண்­க­ளுக்கு மத்­தியில் புர்கா, நிகாப் தொடர்­பான தடை குறித்த அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்­தலின் தமிழ், சிங்­கள பிர­தி­களை விநி­யோ­கித்து வரு­கிறோம். ஹிஜாப், பர்தா என்­ப­ன­வற்­றுக்கு தடை­யில்லை என்­பதை படங்­க­ளுடன் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம்.

நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் முஸ்லிம் பெண்­களின் நலன்­க­ரு­தியும் அநா­வ­சிய கெடு­பி­டி­க­ளி­லி­ருந்து தவிர்ந்து கொள்­வ­தற்கும் குறிப்­பிட்ட அர­சாங்க வர்த்­த­மா­னியின் பிர­திகள் தமிழ், சிங்­கள மொழி­களில் விநி­யோ­கிக்­கப்­பட வேண்டும். ஒவ்வோர் பள்ளிவாசல்கள் மூலமும் இவற்றை விநியோகிக்கலாம். முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் தலைமைகளும் தாமதமின்றி இம்முயற்சியில் இயங்க வேண்டும்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.