நிகாப் அணிய தடை: பதவியை இராஜினாமா செய்த பெண் வைத்தியர்

0 542

ஹோமா­கமை ஆதார வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றும் முஸ்லிம் பெண் டாக்டர் ஒருவர் நிகாப் அணிந்து கட­மைக்குச் சென்ற போது நிகாபை கழற்றி விட்டு கட­மைக்கு வரும்­படி அறி­விக்­கப்­பட்­டதால் அவர் தனது வைத்­திய தொழி­லி­லி­ருந்தும் விலகிக் கொள்­வ­தற்குத் தீர்­மா­னித்து தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை ஹோமா­கமை வைத்­தி­ய­சாலை அதி­கா­ரிக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஹோமா­கமை வைத்­தி­ய­சாலை அதி­கா­ரி­யொ­ருவர் விளக்­க­ம­ளிக்­கையில், குறிப்­பிட்ட முஸ்லிம் பெண் டாக்டர் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் ஒரு நாள் நிகாப் அணிந்து கட­மைக்கு வந்­துள்ளார். அன்று அவர் வெளி­நோ­யாளர் பிரிவில் கட­மையை ஆரம்­பிக்க முற்­பட்­ட­போது அங்­கி­ருந்த நோயா­ளர்கள் அந்த டாக்­ட­ரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள மறுப்புத் தெரி­வித்­துள்­ளனர். அத்­தோடு வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யி­லி­ருந்த ஊழி­யர்­களும் நிகாப் அணிந்து கட­மை­யாற்­று­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

பின்பு வைத்­தி­ய­சாலை பிர­தம அதி­கா­ரி­யினால் குறிப்­பிட்ட டாக்­டரின் தந்தை வைத்­தி­ய­சா­லைக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு சம்­பவம் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. அத­னை­ய­டுத்து டாக்டர் தந்­தையின் பொறுப்பில் விடப்­பட்டார். பின்பு டாக்டர் தந்­தை­யுடன் வெளி­யேறிச் சென்றார்.

அவ்­வாறு தந்­தை­யுடன் சென்ற குறிப்­பிட்ட டாக்டர் எந்­த­வித அறி­வித்­த­லு­மின்றி மே மாதம் 2 ஆம் திகதி வரை கட­மைக்கு சமு­க­ம­ளிக்­க­வில்லை. மே மாதம் 2 ஆம் திகதி தொலை­பேசி தொடர்­பினை ஏற்­ப­டுத்தி தான் சுக­யீ­ன­மாக இருப்­ப­தாக அறி­வித்­துள்ளார்.

பின்பு குறிப்­பிட்ட டாக்டர் தான் வைத்­திய சேவை­யி­லி­ருந்தும் விலகிக் கொள்­வ­தாகக் குறிப்­பிட்டு இரா­ஜி­னாமா கடி­தத்தை ஹோமா­கமை வைத்­தி­ய­சாலை வைத்­திய அதி­கா­ரிக்கு அனுப்பி வைத்­துள்ளார் எனவும் வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக ஹோமா­கமை ஆதார வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அதி­காரி டாக்டர் ஜே. ஹெட்டி ஆரச்­சியைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

இவ்­வா­றான ஒரு சம்­பவம் எமது வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்­றுள்­ளது. அந்தச் சம்­ப­வத்தின் பின்பு குறிப்­பிட்ட டாக்டர் இது­வரை கட­மைக்கு சமு­க­ம­ளிக்­க­வில்லை. பின்பு அவர் தனது சேவையிலிருந்தும் வில­கிக்­கொள்ள வேண்­டு­மெனத் தெரி­வித்து கடி­த­மொன்­றினை அனுப்­பி­வைத்­துள்ளார். என்­றாலும் அவ­ரது இரா­ஜி­னாமா கடிதம் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.