ரிஷா­துக்கு எதி­ரான பிரே­ரணை கார­ணி­களை ஆராய பாரா­ளு­மன்­றக்­குழு

0 499

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக கொண்­டு­வரும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் கார­ணி­களை ஆராய பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைத்து விசா­ரணை நடத்­தவும்  மூன்­று­வார காலத்தின் பின்னர் பிரே­ர­ணையை விவா­தத்­திற்கு  எடுப்­ப­தற்­கான நாள் குறிப்­பிட முடியும் என கட்சித் தலைவர் கூடத்தில் அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. எனினும் இதற்கு கடு­மை­யான எதிர்ப்பை மஹிந்த அணி­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்­றினை பிர­தான எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் முன்­வைத்­துள்ள நிலையில் பிரே­ரணை குறித்து நேற்று கட்சித் தலைவர் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது. இது­கு­றித்து ஆராய நேற்று பிற்­பகல் 3 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் கூடிய வேளையில் உட­ன­டி­யாக இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை சபைக்கு கொண்­டு­வர வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன, விமல் வீர­வன்ச ஆகியோர் கோரிக்கை விடுத்­துள்­ளனர். எனினும் தாம் முன்­வைத்த இந்த பிரே­ர­ணையின்  உள்ள கார­ணிகள் இன்­னமும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத கார­ணி­க­ளாக உள்ள நிலையில் இது குறித்து விசா­ரணை நடத்த முதலில் பாரா­ளு­மன்ற தெரி­விக்­கு­ழுவை அமைக்க வேண்டும் எனவும் மூன்று வார­காலம் விசா­ரணை நடத்தி அதன்­பின்னர் இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து விவாதம் நடத்த ஒரு நாளை வழங்க முடியும் என சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்ல கூறி­யுள்ளார். இதற்கு தமது கடு­மை­யான எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­திய விமல், தினேஷ் எம்.பியினர் அர­சாங்கம் தொடர்ந்தும் மோச­மான நடந்­து­கொள்­வ­தாக கூறி­யுள்­ளனர். இந்த விட­யத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி எந்தக் கார­ணியும் கூறாது அமை­தி­யாக இருந்­துள்­ளது.

இறு­தி­யாக அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை சபையில் விவா­திக்க எந்த தீர்­மா­னமும் இல்­லாது கட்சி தலைவர் கூட்டம் முடி­வுக்கு வந்­துள்­ளது. இது­கு­றித்து நேற்று சபையில் எதிர்க்­கட்சி உறுப்­பினர் விமல் வீர­வன்ச கடுமையாக விமர்சனங்களை முன்வைத்ததுடன் பிரேரணையை அடுத்த வாரமே எடுத்துகொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தை சுற்றிவளைக்கவும் தயங்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.