ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்தை அர­சு­டை­மை­யாக்க வேண்டும்

எதி­ரணி ஆத­ரிக்கும் என்­கிறார் மஹிந்த

0 528

மட்­டக்­க­ளப்பில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்தை  முழு­மை­யாக அர­சு­டை­மை­யாக்­கு­வற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். இவ்­வி­ட­யத்தில் எதிர்த் தரப்­பினர் முழு­மை­யான ஆத­ரவு வழங்­குவோம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

களனி ரஜ­மஹா விகா­ரையில் நேற்று இடம்­பெற்ற வெசாக் தின வழி­பாட்டில் ஈடு­பட்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மட்­டக்­க­ளப்பில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் அர­சாங்கம் தற்­போது ஒழுங்­கு­ப­டுத்தல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தை முழு­மை­யாக அர­சு­டை­மை­யாக்க வேண்டும். இதற்கு எதிர்க்­கட்­சி­யினர் முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­குவோம். விரை­வான நட­வ­டிக்­கை­களை தற்­போது மேற­்கொள்­ளா­விடின் எதிர்­கா­லத்தில் மாறு­பட்ட விளை­வுகள் ஏற்­ப­டலாம்.

அடிப்­ப­டை­வா­தி­களின் அச்­சு­றுத்­த­லினால் தேசிய வெசாக் பண்­டி­கை­யினை கொண்­டா­டாமல் இருக்க முடி­யாது. அனை­வரும் தைரி­ய­மாக செயற்­பட வேண்டும். நிலை­மை­களை வெற்றி கொள்ள வேண்டும். பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை பாட­சா­லை­க­ளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த அனை­வ­ரது ஒத்­து­ழைப்பும் அவ­சியம். பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் தமது பிர­தேச பாட­சா­லை­களில் நாளை மறு­தினம் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வுள்­ளார்கள். பெற்­றோரின் அச்சம் போக்­கப்­பட வேண்டும். யுத்த காலத்தில் பொது மக்கள் வழங்கிய ஆதரவினை தற்போதும் வழங்க வேண்டும். நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படவில்லை. மக்களின் தேவைகளை அறிந்தே செயற்படுகின்றோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.