முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் பிர­தேச அர­சி­யல்­வா­திகள்

விசா­ர­ணை­களில் அம்­பலம்; சுற்­றித்­தி­ரிந்த 3 டிபண்­டர்கள் குறித்தும் ஆராய்வு

0 559

வடமேல் மாகா­ணத்தில் முஸ்லிம் கிரா­மங்­களை  இலக்கு வைத்து  கடந்­த­வாரம் இடம்­பெற்ற வன்­மு­றை­களின் போது, குரு­ணாகல் மாவட்­டத்தில் சுற்றித் திரிந்­த­தாக கூறப்­படும் சந்­தே­கத்­துக்கு இட­மான மூன்று டிபண்­டர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. வன்­மு­றைகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் சிறப்பு விசா­ரணைக் குழுக்­களின் விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த டிபண்டர் வண்­டிகள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந் நிலை­யி­லேயே அது தொடர்பில் விசா­ர­ணை­யா­ளர்­களின் அவ­தானம் திரும்­பி­யுள்­ள­தாக பொலிஸ் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். இந் நிலையில்  இந்த வன்­மு­றைகள் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில், வன்­மு­றையின் பின்னால் அர­சியல் செல்­வாக்கு உள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  பிர­தேச அர­சி­யல்­வா­தி­கள்­வா­திகள் பலர் இத­னுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக  தக­வல்கள் சில வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில்  அவை  தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் இந்த வன்­மு­றைகள் குறித்து பிர­தான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் கொழும்பு தெற்­குக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த டி சில்­வாவின் கீழ் இடம்­பெறும் விசா­ர­ணை­களில், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ர­விடம் நேற்று முன் தினம் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

ஒல்கொட் மாவத்­தையில் உள்ள கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லக கட்­டிடத் தொகு­தியில் உள்ள கொழும்பு தெற்கு பொலிஸ் அத்­தி­யட்சர் அலு­வ­ல­கத்­துக்கு  அழைக்­கப்­பட்டு அவ­ரிடம் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன்­போது மூன்­றரை மணி நேர வாக்கு மூல­மொன்று தயா­சிறி ஜய­சே­க­ர­வினால்  வழங்­கப்­பட்­டுள்ள நிலையில், அந்த வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களின் உன்­மைத்­தன்மை குறித்து உறுதி செய்ய சிறப்பு பொலிஸ் குழு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லக தக­வல்கள் உறுதி செய்­தன.

இத­னி­டையே வன்­மு­றைகள் தொடர்பில் சிறப்பு பொலிஸ் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்டு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள ஊழல் எதிர்ப்பு படை­ய­ணியின் நட­வ­டிக்கை பணிப்­பாளர் நாமல் குமா­ர­விடம்  சி.ஐ.டி. தொடர்ந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. நாமல் குமா­ர­வுக்கும் முன்னாள்  உளவுத் துறை பிர­தானி ஒரு­வ­ருக்கும்  இடை­யி­லான சந்­திப்­பொன்­றினை மையப்­ப­டுத்­தியும்,  வன்­மு­றைகள் இடம்­பெற்ற சமயம் நாமல் குமார அவ்விடத்துக்கு சென்றமையை மையப்படுத்தியும் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும் தற்போது வன்முறை சூழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும் வட மேல் மாகாணத்தில் பொலிஸ்,  முப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே­வேளை, பாரா­ளு­மன்ற உருப்­பி­ன­ருடன், ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்தில் இருந்து அவ­ரது வாக­னத்தில் சந்­தேக நபர்­களை அழைத்­துக்­கொண்டு பிங்­கி­ரிய பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்­ற­தாக கூறப்­படும் பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் தொடர்­பிலும்  சிறப்பு பொலிஸ் குழு அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.

விக்­ர­ம­சிங்க எனப்­படும் குறித்த பொலிஸ் பரி­சோ­த­கரை விசா­ரிக்­கவும், அப்­போது பிராந்­தி­யத்தின் உயர் அதி­கா­ரி­க­ளாக செயற்­பட்ட உதவி பொலிஸ் அத்­தி­யட்சர், பொலிஸ் அத்­தி­யட்சர் ஆகி­யோரின் விளக்­கங்­களைப் பெறவும் விசாரணையாளர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.