மாவனெல்லை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு தேரரால் அச்சுறுத்தல்

நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கபீர் கடிதம்

0 720

அண்­மையில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து மக்­களின் மன­நி­லை­யினை சாதக மாகக்­கொண்டு சந்­தர்ப்­ப­வாத அர­சியல் மற்றும் சம­யத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சில குழுக்கள் தங்கள் நல­னுக்­காக வன்­செ­யல்­களைத் தூண்டும் செயற் பாடு­களில் இறங்­கி­யுள்­ளன. இதற்­காக சமூக வலைத்­த­ளங்கள் மற்றும் வழி­களைக் கையாண்டு தக­வல்­களைப் பரப்­பு­கின்­றன. இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மாவ­னெல்லை நகர் மற்றும் சூழ­வுள்ள பகு­தி­களில் அச்­சு­றுத்­தல்­களை ஏற்­ப­டுத்தி யுள்­ளது. எனவே மாவ­னெல்லை நக­ரிலும் சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும் பாது­காப்­பினைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி வேண்­டிக்­கொள்­கிறேன் என நெடுஞ்­சா­லைகள் வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­த­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அமைச்சர் கபீர் ஹாசிம் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­த­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ‘எனது தொகு­தி­யான மாவ­னெல்­லையில் பல்­வே­று­பட்ட இன மற்றும்  மத நம்­பிக்கை கொண்ட மக்கள் சமா­தா­ன­மாக வாழ்­கி­றார்கள். இப்­ப­கு­தியைச் சேர்ந்த தெவ­ன­கல ஸ்ரீ ரஜ­மகா விகா­ரையின் அதி­பதி மெதி­ரி­கி­ரியே புன்­னி­ய­சார தேரர் முகநூல் பதி­வி­னூ­டாக சமூக வலைத்­த­ளத்தில் மே மாதம் 19 ஆம் திகதி மாவ­னெல்­லையில் பாரி­ய­ளவில் ஒன்று கூடு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளார். இந்த பாரி­ய­ள­வி­லான ஒன்­று­கூ­டல் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கலாம்.

மத­கு­ரு­வினால் பரப்­பப்­பட்டு வரும் இவ்­வா­றான தக­வல்கள் வெறுப்பு உணர்­வினைத் தூண்டும் என்­பது எனது கவ­னத்­திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே கேகாலை மாவட்டத்திலுள்ள மாவனெல்லை நகர் மற்றும் சூழவுள்ள பகுதிகளுக்கு இராணுவ பாதுகாப்பினை வழங்கி வன்செயல்கள் நிகழாவண்ணம் தடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.