மியன்மாரில் ரொய்ட்டர் ஊடகவியலாளர்கள் பொது மன்னிப்பில் உள்வாங்கப்படவில்லை

சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு

0 558

மியன்­மாரில் மேற்கு ராக்கைன் மாநி­லத்தில் மனித உரிமை மீறல் தொடர்பில் தகவல் வெளி­யிட்­ட­மை­யினால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ரொய்ட்டர் செய்தித் தாப­னத்தின் இரு ஊட­க­வி­ய­லா­ளர்­களும் விரைவில் வழங்­கப்­ப­ட­வுள்ள பொது­மன்­னிப்பில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என அவர்­க­ளது சட்­டத்­த­ர­ணிகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தனர்.

ஏப்ரல் மாத நடுப்­ப­குதி புது வரு­டத்­தி­னை­யொட்டி இரு சுற்று ஜனா­தி­பதி பொது மன்­னிப்பில் 16,000 கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக மியன்மார் அண்­மையில் அறி­வித்­தது.

மேலும் விடு­த­லைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தாக அறி­வித்த ஜனா­தி­பதி செய­லகம் மேல­திக தக­வல்கள் எத­னையும் வெளி­யி­ட­வில்லை.

மியன்மார் இரா­ணு­வத்­தி­னரால் 10 ரோஹிங்ய முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டதை அறிக்­கை­யிட்­டதைத் தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ரொய்ட்டர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான 31 வய­தான வா லோன் மற்றும் 27 வய­தான கியவ் ஓஒ ஆகியோர் மீது நாட்டின் உத்­தி­யோ­க­பூர்வ இர­க­சிய சட்­டத்­தினை மீறி­ய­தாக மியன்­மா­ரினால் குற்றம் சாட்­டப்­பட்­ட­டி­ருந்­தது.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வரும் யங்­கூ­னி­லுள்ள பிர­சித்­த­மில்­லாத இன்­சியின் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சட்­டத்­த­ரணி ஹின் மஉங் ஸவ் தெரி­வித்தார்.

மியன்­மாரில் அர­சியல் கைதிகள் என்று எவரும் கிடை­யாது நாட்டில் நடை­மு­றையில் இருக்கும் சட்­டங்கள் மற்றும் கிரி­மினல் செயற்­பா­டு­க­ளுக்­கான குற்­ற­வியல் சட்­டக்­கோவை ஆகி­வற்றின் கீழ் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களே இருப்­ப­தாக இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள உள்­துறை விவ­கார அமைச்சு கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று அறி­வித்­தது.

எவ்­வா­றெ­னினும் 2016 இல் தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரை குறைந்­தது 45 அர­சியல் கைதிகள் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்­டுள்­ளனர் என தாய்­லாந்தின் மேற்கு மாயே சொட் நகரைத் தள­மாகக் கொண்ட (பர்மா) அர­சியல் கைதி­க­ளுக்கு உதவும் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

மேலும் 94 பேர் விசா­ர­ணைக்­காகக் காத்­தி­ருக்கும் அதே­வேளை 225 பேர் விசா­ணை­யினை நடத்­த­வுள்ள நிலையில் பிணையில் விடு­விக்கப்பட்­டுள்­ள­தா­கவும் மேற்­படி அரச சார்­பற்ற மனித உரிமை அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இரா­ணு­வத்­தையும் அர­சாங்­கத்­தையும் அமை­தி­யாக விமர்­சிப்­ப­வர்கள் தொட­ராக அண்­மையில் கைது செய்­யப்­பட்­ட­மை­யினை அடுத்து அமை­தி­யான கருத்து வெளி­யீட்டை குற்றச் செய­லாக்கும் சட்­டத்தை அகற்ற வேண்டும் என நியூ­யோர்க்கைத் தள­மாகக் கொண்ட மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் அந்த நாட்டுப் பாரா­ளு­மன்­றத்­திடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தது.

இரா­ணுவ ஆட்சி இருந்த போது ஆங் சாங் சுகியும் தற்­போ­தைய பல சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களும் கருத்துச் சுதந்­தி­ரத்­திற்­காக உரத்துக் குரல் கொடுத்­தனர் எனினும் ஜன­நா­யத்­திற்­கான தேசிய லீக் அர­சியல் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த போதிலும், நடைமுறையிலுள்ள விமர்சகர்களை சிறையில் அடைக்கும் துஷ்பிரயோகச் சட்டங்களை நீக்குவதற்கோ அல்லது திருத்துவதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.