இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்க மாட்டார்கள்

காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம்

0 663

இலங்கை முஸ்­லிம்கள் எந்த வடி­வத்­தி­லான பயங்­க­ர­வா­தத்­தி­னையும் ஆத­ரிக்­க­மாட்­டார்கள். அத்­தோடு ஓர் அமை­தி­யான இலங்­கையை உரு­வாக்க என்றும் பாடு­பட ஆயத்­த­மாக உள்­ளார்கள். சமா­தா­னத்­தையும் சக வாழ்­வையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக தோளோடு தோள் நின்று உழைக்க நாம் ஆயத்­த­மாக உள்ளோம் என காத்­தான்­குடி சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் தெரி­வித்­துள்­ளது.

நாட்டில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் தொடர்பில் காத்­தான்­குடி சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அமைப்பின் தலைவர் எம்.பி.எம். பிர்­தெளஸ் (நளீமி), செய­லாளர் எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் ஆகியோர் இணைந்து வெளி­யிட்­டுள்ள இவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
எம் தாய் நாடான இலங்கை தாங்­கொண்­ணாத பெரும் துயரை எதிர்­கொண்­டுள்ள ஒரு தருணம் இது. நாட்டின் பல இடங்­களில் இடம்­பெற்ற மிலேச்­சத்­த­ன­மான பயங்­க­ர­வாத தற்­கொலைத் தாக்­கு­தல்­க­ளுக்கு எமது கிறிஸ்­தவ சகோ­தர சகோ­த­ரி­களும், இன்னும் சில வெளி­நாட்டு அப்­பாவி மக்­களும் உயி­ரி­ழந்த பெரும்­சோ­கத்தை எம் நாடு எதிர்­கொண்­டி­ருக்­கி­றது. பயங்­க­ர­வா­தத்தின் கோரப்­ப­சிக்கு ஆளா­கிய அத்­தனை உயிர்­க­ளையும், இன்னும் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்­றுக்­கொண்டு துன்­பங்­கொண்­டி­ருக்கும் உயிர்­க­ளையும் நினைத்து, எங்கள் கனத்த இத­யத்­தோடு பேசு­கிறோம். அவ்­வு­யிர்­க­ளுக்­கா­கவும் அவர்­களை இழந்த குடும்­பத்­தா­ருக்­கா­கவும், ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­விப்­ப­தற்­காக இவ்­வ­றிக்­கை­யினை வெளி­யி­டு­கிறோம். சிகிச்சை பெறும் அனை­வரும் விரைவில் குண­ம­டை­யவும் பிரார்த்­திக்­கிறோம்.

இலங்கை முஸ்­லிம்கள் எப்­போதும், சமா­தா­னத்தை விரும்­பு­பவர்­க­ளா­கவும் நாட்­டிற்கு விசு­வா­ச­மா­ன­வர்­க­ளா­கவும் இருந்­துள்­ளனர். எமது மக்கள் பள்­ளி­வா­சலில் தொழு­து­கொண்­டி­ருக்­கும்­போது படு­கொலை செய்­யப்­பட்­ட­போதும், எங்கள் சொத்­துக்கள் சேத­மாக்­கப்­பட்­ட­போதும், சொந்த நிலத்தில் வீடு­க­ளி­லி­ருந்து துரத்­தப்­பட்­ட­போதும் அவர்கள் அமை­தி­யா­கவும் சமா­தா­ன­மா­க­வுமே எதிர்­வி­னை­யாற்­றி­யுள்­ளனர். அப்­போது நாங்கள் எமது நாட்­டிற்­கெ­தி­ரா­கவோ, நாட்டு மக்­க­ளுக்­கெ­தி­ரா­கவோ செயற்­ப­ட­வில்லை. வன்­மு­றையை கையி­லெ­டுத்துச் செயற்­ப­ட­வில்லை.

கிழக்கில் வாழும் முஸ்­லிம்கள், குறிப்­பாக காத்­தான்­குடி முஸ்­லிம்கள் கடந்த யுத்த காலங்­களில் மிக இக்­கட்­டான, துன்­ப­க­ர­மான நிலை­களின் போது கூட இந்த நாட்­டிற்கு ஆத­ர­வான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருந்­தார்கள். மட்­டு­மல்­லாது, சகோ­தர பௌத்த, இந்து, கிறிஸ்­தவ சமூ­கங்­க­ளுடன் நல்­லு­றவை மீள ஏற்­ப­டுத்­து­வதில் தாம­த­மின்றி செயற்­பட்­டார்கள் என்­ப­தையும் ஞாப­கப்­ப­டுத்திக் கொள்ள விரும்­பு­கின்றோம்.

ஆனால், கொச்­சிக்­கடை, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு பிர­தேச கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளிலும் பிர­சித்த ஹோட்­டல்­க­ளிலும் இடம்­பெற்ற அண்­மைய குண்­டுத்­தாக்­கு­தல்கள் எம்­மீது அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. நாங்கள் மிகவும் வெட்­கப்­ப­டு­கிறோம். ஒரு­படி மேலாக, மிகச் சொற்ப எண்­ணிக்­கை­யான ஒரு சில தீவி­ர­வாத சக்­திகள் காத்­தான்­கு­டி­யி­லி­ருந்தும் இப்­ப­யங்­க­ர­வாத செயற்­பாட்டில் தொடர்­புற்­றி­ருப்­ப­தாக கேள்­விப்­ப­டு­கையில் ஒரு­வித மன உளைச்­ச­லையும் நாம் உணர்­கிறோம்.

காத்­தான்­குடி அதன் வர­லாற்றின் எந்தக் கட்­டத்­திலும், இவ்­வ­கை­யான தீய­சக்­தி­களை ஏற்­றுக்­கொள்­ளவோ, அனு­ம­திக்­கவோ இல்லை. இத்­தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக சந்­தே­கிக்­கப்­படும் ஸஹ்ரான் ஹாஸிம் என்­பவர் காத்­தான்­குடி ஜாமி­யதுல் பலாஹ் கல்­லூ­ரி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்ட ஒரு மாணவன். அவ­ரது பிழை­யான நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக அவர் கல்­லூரி நிர்­வா­கத்தால் 2005 இல் விலக்கி அனுப்பப்­பட்டார்.

அதன் பின்னர் அவர் சுய­மாக தனது தீவி­ர­வாத தூண்டல் பேச்­சுக்­களை நடாத்தி வந்தார். காத்­தான்­கு­டியின் மிக முக்­கிய அமைப்­புக்கள் அவரைக் கண்­டித்து, தீவி­ர­வாத வெறுப்புப் பேச்சை நிறுத்­து­மாறு வலி­யு­றுத்­தினர். இச்­செ­யற்­பாட்டைத் தொட­ர­வேண்­டா­மென காத்­தான்­குடி மக்கள் சார்பில் அவர் மீது அழுத்­த­மாக வேண்­டுகோள் விடுத்­தனர். மேலும் அவ­ரது பிர­சார நிலை­யத்தில் ஒலி­பெ­ருக்கி பாவ­னைக்­கான அனு­மதி கொடுக்­க­வெண்­டா­மென்­று­கூட பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டு­களும் செய்­யப்­பட்­டன.

2017 இல் ஸஹ்­ரா­னு­டைய தீவிரப் பேச்­சுக்கள் கார­ண­மாக வெடித்த வன்­மு­றைகள், குழு மோதல்கள் கார­ண­மாக அவ­ரது தீவி­ர­வாத செயற்­பாட்டு சகாக்கள் கைது செய்­யப்­பட்டு , மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்­றத்­தினால் 6 மாத­ம­ளவில் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டார்கள். அவ்­வே­ளையில் ஸஹ்ரான் இப் பிர­தே­சத்­தை­விட்டு தப்­பி­யோடி ஒளிந்­தி­ருந்தான், ஆனாலும் அண்­மைய இந்த துக்­க­கர நிகழ்வு வரையும் அவன் கைது செய்­யப்­ப­டா­ம­லி­ருந்­தமை கவ­லை­ய­ளிப்­ப­தா­யுள்­ளது.

மறைவில் ஓர் அடை­யாளம் காணப்­ப­டாத பிர­தே­சத்தில் இருந்­து­கொண்டு, தன் விஷ­மப்­பி­ர­சா­ரத்தை சமூக வலைத்­த­ளங்கள் ஊடாகத் தொடர்ந்தான். நாட்டின் சமா­தா­னத்­திற்கும், பாது­காப்­பிற்கும் பெரும் ஆபத்­தாக அமை­வ­தாக அத்­த­கைய தீவி­ர­வாத சிந்­த­னை­யுள்ள பேச்­சுக்கள் அடை­யாளம் காணப்­பட்­ட­போது, நாங்கள் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு அவை குறித்து தெரி­வித்­தி­ருத்தோம். எத்­த­னையோ முறைப்­பாட்டு மனுக்கள் பல பொறுப்­பு­வாய்ந்த சமூ­கத்தின் முக்­கி­யஸ்­தர்­களால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டன. ஆனாலும் அவ­னது செயற்­பா­டு­களை நிறுத்த போது­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றே எண்­ணத்­தோன்­று­கின்­றது. இப்­ப­டி­யொரு புறக்­க­ணிப்பு நிலை, அவனைக் கைது செய்­யாமை என்­ப­வற்றை எம்மால் புரிந்து கொள்ள முடி­யா­மலும் கவ­லை­ய­ளிப்­ப­தா­கவும் உள்­ளது.

இப்­ப­யங்­க­ர­வா­தத்தின் கடூரம் பற்றி நாங்கள் எவரும் சரி­யாக கணிப்­பிட்­டுக்­கொள்ள தவ­றி­விட்­டதன் கார­ண­மா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளது மிகக் கவ­ன­மான திட்­ட­மி­டல்­க­ளையும், கூட்­டுச்­சேர்க்­கை­க­ளையும் எம்மால் சரி­யாக விளங்­கிக்­கொள்­ள­மு­டி­யாமல் போய்­விட்­டதன் கார­ண­மா­க­வுமே இன்­றைய நிலை­களை நாம் எதிர்­கொள்ள வேண்டி ஏற்­பட்­டுள்­ளது என்றே நாங்கள் எண்­ணு­கிறோம்.

இப்­போது அவன் நம் எல்­லோ­ருக்கும் ஒரு பெரும் அபா­யமாய் மாறி­விட்டான். அவன் கொல்­லப்­பட்டு விட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது போன்ற மிலேச்­சத்­த­னங்கள், தீவி­ர­வாத நட­வ­டிக்­கைகள் எதிர்­கா­லத்தில் இன்னும் நடை­பெற்­று­வி­டாமல் தடுக்க நாம் மிகக் கவ­ன­மா­கவும், எச்­ச­ரிக்­கை­யு­டனும் இருக்­க­வேண்­டிய தேவை­யி­ருக்­கி­றது. உலகின் பல பாகங்­களில் செயற்­பட்­டு­வரும் ஒரு தீவி­ர­வாத அமைப்பு இத்­தா­கு­தல்­க­ளுக்கு உரிமை கோரி­யுள்ள நிலையில் எமக்கு இன்னும் மேல­தி­க­மான கவனம் தேவை. இவ்­வ­கை­யான அசா­தா­ரண சூழ­லினை இன்னும் சில சமூக விரோத சக்­திகள் தமக்குச் சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்டு சமூ­கங்­க­ளுக்­கி­டையில், இன மோதல்­களைத் தூண்­டி­விட்டு நாட்டின் இன ஒற்­று­மைக்கும் இன ஐக்­கிய சக­வாழ்­விற்கும் தீங்கு விளை­விக்­கலாம்.

பொறுப்­பு­வாய்ந்த சிவில் சமூக நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கை சமூகத்திற்கு ஒரு செய்தியைக் கூறிக் கொள்ள நாங்கள் விரும்புகின்றோம். இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்கமாட்டார்கள். அத்தோடு ஒரு அமைதியான இலங்கையை உருவாக்க என்றும் பாடுபட ஆயத்தமாக உள்ளார்கள். சமாதானத்தையும் சக வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்காக தோளோடு தோள் நின்று உழைக்க நாம் ஆயத்தமாக உள்ளோம்.

இன்று அவதியுறுகின்ற எமது கிறிஸ்தவ சகோதரர்களின் இன்றைய மனோநிலை அவர்களுடைய வலிகளை நாங்கள் நன்கு உணர்ந்து கொள்கிறோம். மரணித்தவர்களினது குடும்பங்களுக்காகவும் தற்போது வைத்தியசாலைகளில் முடங்கிக் கிடக்கின்ற சகோதரர்களுக்காகவும் இறைவனை வேண்டுகின்ற அதேவேளை, கிறிஸ்தவ சமூகம் இத்தகைய இக்கட்டான நிலையிலும் கூட தனது சமூகக் கட்டுக்கோப்பையும் உயரிய மனிதப் பண்புகளையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை நன்றியுடன் அவதானிக்கின்றோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.