அச்சம் நீக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

0 655

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நாட்டின் பல பகு­தி­க­ளிலும் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 360ஐ எட்­டி­யுள்­ளது. காய­ம­டைந்த சுமார் 160 பேர் தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லை­களில் தங்கி சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இத் தாக்­கு­தலைத் தொடர்ந்து நாட்டின் இயல்பு நிலை முற்­றாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. வீதிகள் வெறிச் சோடிக் காணப்­ப­டு­கின்­றன. மக்கள் அச்­சத்தில் உறைந்து போயுள்­ள­துடன் வெளியில் நட­மா­டவும் தயங்­கு­கின்­றனர். இத் தாக்­கு­தல்­களால் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்ட மக்கள் மாத்­தி­ர­மன்றி இலங்கைப் பிர­ஜைகள் அனை­வ­ருமே தினமும் கண்ணீர் சிந்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். நினைத்துப் பார்க்கக் கூட முடி­யா­த­ளவு கொடூரம் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது.
இந்தத் தாக்­கு­தல்­களை நடாத்­தி­யது முஸ்லிம் பெயர் தாங்­கிய குழு­வி­னரே என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான மக்கள் இலங்கை முஸ்­லிம்­களை சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கத் தொடங்­கி­யுள்­ளனர். இஸ்­லா­மிய கலா­சார ஆடை­க­ளுடன் முஸ்­லிம்­களைக் கண்டால் அச்­சப்­ப­டு­கின்ற நிலை தோற்றம் பெற்­றுள்­ளது. குரு­நாகல் நகரில் நேற்று முன்­தினம் பஸ் நிலை­யத்தில் நின்ற நான்கு அரபுக் கல்­லூரி மாண­வர்கள் பொலி­சாரால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு 24 மணி நேர­மாக தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். பல இடங்­களில் முஸ்­லிம்கள் அச்­சு­றுத்­தப்­பட்ட சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

குறிப்­பாக அகதி அந்­தஸ்துக் கோரி நீர்­கொ­ழும்பில் தற்­கா­லி­க­மாக தங்­கி­யுள்ள பாகிஸ்­தானைச் சேர்ந்த சுமார் 500க்கும் அதி­க­மானோர் அவர்கள் தங்­கி­யி­ருந்த வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­மாறு பணிக்­கப்­பட்­டுள்­ளனர். இதன் கார­ண­மாக தற்­போது பாது­காப்புத் தரப்­பி­னரின் உத­வி­யுடன் சக­லரும் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு வேறு இட­மொன்­றுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளனர்.
இதற்­கப்பால் சில இடங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அசம்­பா­வி­தங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. பல கடைகள் தாக்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சல்கள் மீதும் கல் வீச்­சுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. ஆக, இத் தாக்­கு­தல்­களின் பிர­தி­ப­லிப்­புகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் திரும்­பி­யுள்­ளன. இதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு எது­வு­மில்லை.

இந்த நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வகையில் எந்­த­வி­த­மான அசம்­பா­வி­தங்­க­ளிலும் முஸ்­லிம்கள் ஈடு­பட்­டி­ருக்­காத சந்­தர்ப்­பத்­தி­லேயே முஸ்­லிம்கள் மீது பல தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன. ஆனால் இன்று முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு சிலரால் தெற்­கா­சி­யா­வி­லேயே இது­வரை இடம்­பெற்­றி­ரா­த­ளவு பாரிய தாக்­குதல் ஒன்று நடாத்­தப்­பட்­டுள்­ளது. இதன் பின்­னரும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக பெரும்­பான்மை மக்­களின் கோபப்­பார்வை திரும்­பாது என எம்மால் எதிர்­பார்க்­கா­ம­லி­ருக்க முடி­யாது. இந்த யதார்த்­தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்­காக இந்த நாட்டின் சட்­டத்தை யாரும் கையி­லெ­டுத்து செயற்­ப­டவும் அனு­ம­திக்க முடி­யாது. அர­சாங்கம் இந்த விட­யத்தில் இது­வரை ஆரோக்­கி­ய­மான நகர்­வு­க­ளையே எடுத்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்ற நாள் முதல் இரவு வேளை­களில் ஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. சமூக வலைத்­த­ளங்கள் முற்­றாக தடை செய்­யப்­பட்­டுள்­ளன. சந்­தே­கத்­துக்­கி­ட­மா­ன­வர்கள் கைது செய்­யப்­ப­டு­கின்­றனர். வெடி­பொ­ருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு அழிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த விழிப்பு நிலையும் பாது­காப்பு முன்­னேற்­பா­டு­களும் தொடர வேண்டும். அதே­நேரம் நாட்டு மக்­களைக் குடி­கொண்­டுள்ள அச்­சத்தை நீக்­கவும் பாது­காப்பை முற்­றாக உறு­திப்­ப­டுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.
ஏலவே போது­மான தக­வல்கள் கிடைத்­தி­ருந்தும் இவ்­வா­றா­ன­தொரு தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் பாதுகாப்புத் தரப்பினரும் அரசாங்கத்தினரும் தோல்வியுற்றுள்ளனர். இதற்காக பாதுகாப்புச் செயலாளரும் பொலிஸ் மா அதிபரும் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய யார் புதிதாக பொறுப்பான பதவிகளுக்கு வந்தாலும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதுவே இன்றைய இலங்கையின் அவசரமானதும் அவசியமானதுமான தேவையாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.