ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வா­தத்தை ஆயு­தத்­தா­லேயே ஒழிக்­கலாம்

அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டு

0 768

 

அண்மையில் இடம்­பெற்­றுள்ள தொடர்­குண்டுத் தாக்­கு­தலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு உரிமை கோரா­தி­ருந்­தி­ருந்தால் இன்று நாட்டில் பலர் மீது வீண்­பழி சுமத்­தப்­பட்­டி­ருக்கும் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தத்தை ஆயுதம் மூல­மாக மட்­டுமே இல்­லா­தொ­ழிக்க முடியும் எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அவ­ச­ர­கால சட்ட ஒழுங்­கு­வி­திகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,
கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தை அடுத்து உண்­மை­யான குற்­ற­வா­ளியை கண்­ட­றி­யாது அர­சியல் ரீதியில் சேறு­பூசும் நிலை­மையே காணப்­பட்டு வரு­கின்­றது. கடந்­த­கால வர­லா­று­களை பேசிக்­கொண்டு இப்­போது குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் அல்­லது தப்­ப­வைக்கும் நட­வ­டிக்­கை­களை கையா­ளக்­கூ­டாது. யார் குற்­ற­வாளி என்­பதை போலவே எங்கு இந்த தவறு இடம்­பெற்­றது என்­ப­தையும் கண்­ட­றிய வேண்டும். அதேபோல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு இப்­போது இந்த தாக்­கு­த­லுக்குப் பொறுப்­புக்­கூ­றி­யுள்­ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு இதற்கு பொறுப்­புக்­கூ­றாது இருந்­தி­ருந்தால் இன்று எமது நாட்­டுக்குள் வேறு எவரோ பழியை ஏற்­றி­ருக்க நேர்ந்­தி­ருக்கும்.

ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு உரு­வாக்­கப்­பட்ட போது மத்­திய கிழக்கில் இருந்து நாற்­ப­தா­யி­ரத்­துக்கும் அதி­க­மான இளை­ஞர்கள் இந்த அமைப்பில் இணைந்­தனர். இலங்­கையில் இருந்தும் பலர் இணைந்­து­கொண்ட தக­வல்கள் இருந்­தன. அதேபோல் வெளி­நாட்­ட­வ­ருக்கு தாக்­குதல் நடத்த எமது சுற்­று­லாத்­து­றையை தடுப்­பது நோக்­க­மல்ல, மாறாக மேற்கு நாடு­களில் அவர்­களின் நோக்­கத்தை நிறை­வற்ற இங்கு இவ்­வாறு செய்­துள்­ளனர். ஐ.எஸ். இன் நோக்கம் உலகம் முழு­வதும் நிறை­வேற்­றப்­பட்டு வரு­கின்­றது. அவர்கள் நோக்கம் உல­கத்தை மோச­மாக அழிக்­க­வேண்டும் என்­ப­தாகும். தாம் வழி­படும் மதம் அல்­லாது ஏனையே மதத்­த­வரை கொன்று குவிக்க வேண்டும் என்ற நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளனர். இதனை நாம் பேச்­சு­வார்த்தை மூல­மாக தடுக்க முடி­யாது. ஆயுதம் மூல­மா­கவே இதனை எம்மால் தடுக்க முடியும். விடு­த­லைப்­பு­லி­களை அழித்­தது போன்ற செயற்­பாடு அல்ல இது. பிர­பா­க­ர­னுடன், ஜே.வி.பியுடன் செய்த யுத்­த­மாக இதனை கருத கூடாது. ஆகவே இதற்­காக எமது பாது­காப்பு செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்த வேண்டும். இந்த தாக்­கு­தலை செய்த நபர் மத போத­க­ராக இங்கு வந்து நாட்­டினை நாச­மாக்­கி­யுள்ளார்.
நபர்கள் வருதல், ஆயுதம் வருதல், பணம் வருதல் என்ற கார­ணியை கண்­ட­றிய வேண்டும். இன்று கோடீஸ்­வர வேஷத்தில் வந்து நாட்­டினை நாச­மாக்கும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. ஆகவே இவற்றை வெற்­றி­கொள்ள அனை­வரும் இணைந்து செயற்பட வேண்டும். ஜனநாயகத்தை பலப்படுத்த முன்வரும் அனைவரும் இதில் தலையிட வேண்டும். அதேபோல் எந்த தலை­யீ­டுகள் இல்­லாத பாது­காப்பு தரப்பை பலப்­ப­டுத்த வேண்டும். நாம் நாட்டுக்காக சிந்திக்க வேண்டும். மாறாக அரசியல் கொள்கை இதில் அவசியம் இல்லை என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.