விக்­கிலீக்ஸ் ‘ஜூலியன் அசாஞ்சே’ கைது

0 477

விக்­கிலீக்ஸ் துணை நிறு­வுனர் ஜூலியன் அசாஞ்சே லண்­டனில் உள்ள ஈகு­வடோர் நாட்டின் தூத­ர­கத்தில் நேற்று கைது செய்­யப்­பட்டார்.

தான் சுவீ­ட­னுக்கு நாடு கடத்­தப்­ப­டு­வதை தடுக்க ஏழாண்­டு­க­ளுக்கு முன்பு தூத­ர­கத்தில் தஞ்சம் கோரி­யி­ருந்தார் அசாஞ்சே. அசாஞ்­சேவை கைது செய்த காவல்­துறை, அவரைக் காவலில் வைத்­தி­ருப்­ப­தா­கவும் அவர் விரைவில் வெஸ்ட்­மி­னிஸ்டர் மாஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டுவார் எனத் தெரி­வித்­தனர்.

சர்­வ­தேச விதி­களை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறி­யதால், அவ­ருக்கு தாங்கள் தஞ்சம் வழங்­கி­யதை திரும்பப் பெறு­வ­தாக ஈகு­வடோர் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரி­வித்தார்.

ஆனால் இது தொடர்­பாக விக்­கிலீக்ஸ் வெளி­யிட்ட செய்­தியில், சர்­வ­தேச சட்­ட­வி­தி­களை மீறி அசாஞ்­சேக்கு தஞ்சம் வழங்­கப்­பட்­டதை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஈகு­வடோர் ரத்துச் செய்­த­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

பிரிட்­டனின் உள்­துறைச் செயலர் சஜித் ஜாவிட் வெளி­யிட்ட ட்விட் செய்­தியில், ”ஜூலியன் அசாஞ்சே தற்­போது பொலிஸ் காவலில் உள்ளார் என்­பதை நான் உறுதி செய்கிறேன். பிரிட்டனின் சட்டநடைமுறையை அவர் எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.