முஸ்லிம் சமய விவகார அமைச்சின் நடமாடும் சேவை அநுராதபுரத்தில்

0 595

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் இணைந்து நடாத்­தி­வரும் நட­மாடும் சேவையின் மூன்­றா­வது கட்டம் எதிர்­வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் பிற்­பகல் 3 மணி வரை அநு­ரா­த­புரம் ஸாஹிராக் கல்­லூ­ரியில் இடம்­பெ­ற­வுள்­ளது.

அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சம­ய­வி­வ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்­ந­ட­மாடும் சேவையில் அநு­ரா­த­புர மாவட்ட அர­சியல் பிர­தி­நி­தி­களும் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

இந்­ந­ட­மாடும் சேவை­களில் அநு­ரா­த­புர மாவட்ட பள்­ளி­வா­சல்கள், அரபு மத்­ர­ஸாக்கள் மற்றும் அரபுக் கல்­லூ­ரி­களின் பதி­வு­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. அத்­தோடு மௌல­வி­மார்­க­ளுக்­கான அடை­யாள அட்­டைகள் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

பள்­ளி­வா­சல்கள், அரபு மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களின் பதி­வு­க­ளுக்­கான விண்­ணப்­பங்­களை மக்கள் முன்­கூட்­டியே பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென அமைச்சர் ஹலீமின் இணைச் செய­லாளர் ரமீம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். தேவை­யான விண்­ணப்­பங்­க­ளையும், அறி­வு­றுத்­தல்­க­ளையும் அநு­ரா­த­புரம் மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து பெற்­றுக்­கொள்ள முடி­யு­மெ­னவும் அவர் கூறினார்.

இந்­ந­ட­மாடும் சேவையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், வக்பு சபையின் பிர­தி­நி­திகள், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் அதி­கா­ரிகள் கலந்து கொண்டு சேவை­களை வழங்­க­வுள்­ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.