எகிப்தில் மனித உரிமை செயற்­பாட்­டாளர் ஐந்து ஆண்­டு­களின் பின்னர் விடு­தலை

0 479

ஆர்ப்­பாட்­டத்தை தூண்­டி­யமை மற்றும் பங்­கேற்­றமை ஆகிய குற்­றச்­சாட்டின் கீழ் ஐந்து ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு தண்­ட­னைக்­காலம் முடி­வ­டைந்­ததைத் தொடர்ந்து எகிப்­திய ஜன­நா­ய­க­சார்பு செயற்­பாட்­டா­ள­ரான அலா அப்தெல் பத்தாஹ் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்ளார் என  அவ­ரது சட்­டத்­த­ர­ணியும் குடும்­பத்­தி­னரும் தெரி­வித்­துள்­ளனர்.

செல்­வாக்­கு­மிக்க வலைப்பூ எழுத்­தா­ளரும் மென்­பொருள் பொறி­யி­ய­லா­ள­ரு­மான அலா அப்தெல் பத்தாஹ், ஜனா­தி­பதி ஹொஸ்னி முபா­ரக்கின் 30 ஆண்டு கால ஆட்­சியை முடி­வுக்குக் கொண்­டு­வந்த 2011 ஆம் ஆண்டு எழுச்­சியை ஆரம்­பத்தில் முன்­னெ­டுத்த இளம் எகிப்­தி­யர்­களின் தலைமைக் குர­லாக விளங்­கினார்.

அலா விடு­விக்­கப்­பட்­டுள்ளார் என அவ­ரது சகோ­த­ரி­களுள் ஒரு­வ­ரான மோனா சியீப் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தனது முக­நூ­லிலும், டுவிட்­ட­ரிலும் பதிவிட்­டி­ருந்த அதே­வேளை அலா அப்தெல் பத்தாஹ்  விளை­யா­டு­வது போன்ற காணொ­லி­யொன்­றினை அவ­ரது மற்­று­மொரு சகோ­த­ரி­யான சானா சியீப் தனது முக­நூலில் பதி­விட்­டி­ருந்தார்.

“இறை­வ­னுக்கு நன்றி. அலா அப்தெல் பத்தாஹ் தற்­போது வீட்டில் இருக்­கின்றார்” என அவ­ரது சட்­டத்­த­ரணி காலித் அலி அவ­ரது முகநூல் பதி­வொன்றின் மூலம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அப்தெல் பத்­தா­ஹிற்கு ஆத­ர­வாக உரு­வாக்­கப்­பட்ட முகநூல் பக்­கங்­களில் அவர் சிரிப்­பது, நண்­பர்­களை கட்­டி­ய­ணைத்து கை குலுக்­கு­வது போன்ற காணொ­லிகள் பதி­வேற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன.

கெட்ட பெயரைச் சம்­பா­தித்துக் கொண்­டுள்ள டோரா சிறைச்­சா­லை­யி­லி­ருந்து அவர் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும் அவ­ருக்கு முழு­மை­யான சுதந்­திரம் வழங்­கப்­ப­ட­வில்லை. அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு உள்ளூர் பொலிஸ் நிலை­யத்­தி­லேயே இரவு வேளை­களில் உறங்க வேண்டும் என்­ப­தோடு தொடர்ச்­சி­யாக பொலிஸ் கண்­கா­ணிப்பின் கீழேயே அவர் இருப்பார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.