சவூதி நலன்புரி நிலையங்களில் இலங்கை பணியாளர்கள் நன்றாக நடத்தப்படுகின்றனர்

ஹெக்டர் அப்புஹாமி எம்.பி. தெரிவிப்பு

0 488

தொழில் நிமித்தம் சவூதி அரே­பி­யா­விற்குச் சென்று பிரச்­சி­னைகள் கார­ண­மாக நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ள இலங்­கை­யர்கள் சிறந்த முறையில் நடத்­தப்­ப­டு­வ­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு, விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி தெரி­வித்தார்.  குறித்த நிலை­யங்­களில் அவர்­க­ளுக்குத் தேவை­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்­லை­யென சில ஊட­கங்கள் முன்­வைத்த குற்­றச்­சாட்­டையும் அவர் மறுத்தார்.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்குத் தேவை­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்லை என சில ஊட­கங்கள் அண்­மையில் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தன. அது­கு­றித்து ஆராய்­வ­தற்கு வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் இரு அதி­கா­ரிகள் உள்­ள­டங்­க­லாக நானும் அண்­மையில் சவூதி அரே­பியா சென்று அந்த நிலை­யங்­களை ஆராய்ந்தோம். இலங்­கை­யி­லி­ருந்து பணிப்­பெண்­க­ளாகச் சென்று சில பிரச்­சி­னைகள் கார­ண­மாக தொழில் செய்த இடங்­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­ய­வர்கள் பெண் நலன்­புரி நிலையம் மற்றும் பாது­காப்பு இல்லம் (Safe House)  என்­ப­வற்றில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அந்த நிலை­யங்­களில் அவர்­க­ளுக்குத் தேவை­யான சகல வச­தி­களும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சு, தொழில் அமைச்சு, சுங்கத் திணைக்­களம், மனித உரி­மைகள் காரி­யா­லயம் ஆகி­ய­வற்றின் கிளைகள் உட்­பட பொலிஸ் நிலை­யமும் அந்த நிலை­யங்­களில் இயங்கி வரு­கின்­றன. இதற்­காக சவூதி அர­சாங்கம் பெரு­ம­ளவு நிதியைச் செல­வி­டு­கி­றது.

எனவே, தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தமக்கு பிரச்­சி­னைகள் ஏதும் ஏற்­ப­டு­மாயின் அந்தக் காரி­யா­ல­யங்­களில் முறை­யி­டலாம். அத்­துடன் நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை உள­வியல் ரீதியில் ஒரு­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத் திட்­டங்­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சுற்­றுலா விசா மூலம் சவூதி அரே­பி­யா­விற்குச் சென்­ற­வர்­களே அதி­க­ளவில் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கின்­றனர். மேலும் திருட்­டுத்­த­ன­மான முக­வர்­க­ளூ­டாக எவரும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்குச் செல்ல முற்­ப­டக்­கூ­டாது.

இதே­வேளை, வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பு­க­ளுக்குச் செல்­வோ­ருக்கு வழங்கும் பயிற்சி நெறியில் சிறி­ய­ளவில் திருத்தம் கொண்டு வரு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்ளோம். அத்­துடன் இலங்கை மற்றும் சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்கம் அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம். இது குறித்து சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நட்புறவுச் சங்கத்தின் மூலம் சவூதி அரேபியாவை இலங்கையில் முதலீடு செய்யச் செய்து நாட்டில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். சுற்றுலாத்துறையையும் இதன் மூலம் அபிவிருத்தியடையச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.