ஹஜ் யாத்திரை 2019: குறுந் தகவல்கள் மூலம் அறிவுறுத்தல்

0 532

இவ்­வ­ருடம்  ஹஜ்­க­ட­மையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய, கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் குறுந்­த­க­வல்கள் மூலம் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

13282 வரை­யி­லான பதி­வி­லக்­கங்­களைக் கொண்ட விண்­ணப்­ப­தா­ரிகள் இவ்­வ­ருட ஹாஜ் கட­மைக்­காக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய, கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்­கான விழிப்­பு­ணர்வுக் கருத்­த­ரங்கு, பய­ணத்தை உறுதி செய்யும் கடி­தங்­களைக் கைய­ளிக்கும் நிகழ்வும் நாட­ளா­விய ரீதியில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஹஜ் தொடர்­பான விழிப்­பு­ணர்வுக் கருத்­த­ரங்கும், ஹஜ் பய­ணத்தை உறுதி செய்யும் கடி­தங்கள் வழங்கும் நிகழ்வும் பின்­வ­ரு­மாறு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் மார்ச் 2 ஆம் திகதி காலை 9 மணிக்கு கிண்­ணியா– வாசி­க­சாலை மண்­டபம் மற்றும் காலை 9 மணிக்கு அட்­டா­ளைச்­சேனை பெரிய பள்­ளி­வாசல். பிற்­பகல் 3 மணிக்கு காத்­தான்­குடி – ஹிஸ்­புல்லாஹ் கலா­சார நிலையம். மற்றும் கல்­முனை –மஹ்மூத் மகளிர் வித்­தி­யா­லயம்.

மார்ச் 3 ஆம் திகதி காலை 9 மணிக்கு சம்­மாந்­துறை– அப்துல் மஜீத் நகர மண்­டபம்.

மார்ச் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு குரு­நாகல்– சாஹிரா கல்­லூரி.  காலை 10 மணி மாவ­னெல்லை ராலியா வர­வேற்பு மண்­டபம். பிற்­பகல் 3 மணி புத்­தளம் பிர­தேச செய­லாளர் காரி­யா­லய மண்­டபம். பிற்­பகல் 3 மணி மட­வளை மதீனா தேசிய பாட­சாலை.

மார்ச் 14 ஆம் திகதி காலை 9.30 முதல் பிற்­பகல் 3 மணி­வரை, கொழும்பு மாவட்டம்– தபால் மத்­திய நிலையம் கேட்போர் கூடம்.

மார்ச் 17 ஆம் திகதி காலி, மாத்தறை, வெலிகம அரபா தேசிய பாடசாலை. பிற்பகல் 4 மணி பேருவளை ஹுமைசரா தேசிய பாடசாலை.
(மாற்றங்களுக்கு இடமுண்டு.)

Leave A Reply

Your email address will not be published.