பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸின் மேன்முறையீடு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

0 519

பாகிஸ்­தானின் முன்னாள் பிர­தமர் நவாஸ் ஷரீப் ஊழல் புரிந்­த­மைக்­காக ஏழு வருட சிறைத் தண்­டனை தொடர்பில் மருத்­துவக் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் விடு­விக்­கு­மாறு சமர்ப்­பிக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்­டினை  அந்நாட்டு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­ற­மொன்று நிரா­க­ரித்­துள்­ளது.

மேன்­மு­றை­யீடு தொடர்­பான விசா­ர­ணைகள் கடந்த வாரம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து இஸ்­லா­மா­பாத்தின் உயர் நீதி­மன்­றத்தின் இரு நீதி­ப­திகள் கொண்ட குழு தனது தீர்ப்­பினை அறி­வித்­தது. முன்னாள் பிர­த­மரின் அணி குறித்த வழக்­கினை உச்ச நீதி­மன்­றத்­திற்குக் கொண்டு செல்­ல­வுள்­ள­தாக ஷரீபின் உத­வி­யா­ள­ரான ஷாஹிட் அப்­பாஸி தெரி­வித்தார்.

வைத்­தி­ய­சா­லையில் சிறை­வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே ஷரீப் தனது இரு­தய நோய்க்­கான சிகிச்­சை­யினைப் பெற்று வரு­கின்றார்.

ஷரீபின் குடும்­பத்­தினர் மீது சுமத்­தப்­பட்ட பல்­வேறு ஊழல் குற்­றச்­சாட்­டுக்­க­ளை­ய­டுத்து கடந்த 2017 ஜுலை மாதம் ஷரீப் பிர­த­ம­ராக பதவி வகிக்கத் தகு­தி­யில்­லா­தவர் என உச்ச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

ஊழ­லுக்கு எதி­ரான நீதி­மன்றம் கடந்த வருடம் மற்­று­மொரு ஊழல் வழக்கில் 10 வருட சிறைத் தண்டனை விதித்தது. மேன் முறையீட்டின் காரணமாக குறித்த தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.