கட்டார் நாட்டுக்கு தலிபான் அரசியல் தலைவர் விஜயம்

0 473

கட்­டாரில் அமைந்­துள்ள தலி­பான்­களின் அர­சியல் பணி­ம­னையின் புதிய தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முல்லா அப்துல் கானி பராடார் ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­யாணத் தடைகள் நீக்­கப்­பட்­டதன் பின்னர் தோஹாவை வந்­த­டைந்­த­தாக அமைப்பின் தலைவர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்தார்.

முல்லா பராடார் ஏனைய தலிபான் பேச்­சு­வார்த்­தை­யா­ளர்கள் சகிதம் தோஹாவை வந்­த­டைந்­த­தாக கட்­டா­ரி­லுள்ள சிரேஷ்ட தலிபான் தலைவர் ஒருவர் உறு­திப்­ப­டுத்­தினார்.

அமெ­ரிக்­கா­வுக்கும் தலி­பா­னுக்கும் இடையே இடம்­பெறும் புதிய சுற்றுப் பேச்­சு­வார்த்­தையில் அவர் கலந்து கொள்­வதா இல்­லையா என்­பது தொடர்பில் அவரே தீர்­மா­னிப்பார் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முன்­ன­தாக வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யொன்றில் பேச்­சு­வார்த்தை நடத்தும் குழு­வினை அறி­விக்கும் கூட்­டத்தில் முல்லா பராடார் பேச்­சு­வார்­த­தையில் பங்­கு­பற்­ற­மாட்டார் என அறி­வித்­த­தா­கவும் அமெ­ரிக்­கா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு அக்குழு­வுக்கு அவர் அதிகாரமளித்துள்ளதாகவும் தலிபான் பேச்சாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹித் தெரிவித்திருந்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.