புத்தளம் அருவக்காடு குப்பை பிரச்சினையை ஒரு தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்

0 571

புத்­தளம் அரு­வக்­காடு பிரச்­சி­னை­யா­னது புத்­த­ளத்­திற்­கான ஒரு பிரச்­சி­னை­யல்ல அது ஒரு தேசிய பிரச்­சி­னை­யாகும்.

இப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க  அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க  உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்து, இங்கு குப்பை கொண்­டு­வ­ரு­வ­தனை நிறுத்த வேண்­டு­மென நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரி­வித்தார்.

புத்­தளம் அரு­வக்­காடு பகு­தியில் குப்பை கொட்டும் அர­சாங்­கத்தின் திட்­டத்தை எதிர்த்து, கடந்த வெள்­ளிக்­கி­ழமை (15) புத்­தளம் கொழும்­பு­முகத் திடலில் ‘க்ளீன் புத்­தளம்’ ஏற்­பாட்டில் இடம்­பெற்ற மக்கள் போராட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

போரா­டு­கின்ற மக்கள் ஒரு போதும் பின்­வாங்க வேண்டாம்.

அர­சி­யல்­வா­திகள் மக்­க­ளுக்கு பணி செய்ய வந்­த­வர்­களே தவிர, மக்­களின் எஜ­மா­னர்கள் கிடை­யாது. மக்­களின் கோரிக்­கை­களை சிர­மேற்­கொண்டு செய்­வதே அர­சி­யல்­வா­தி­களின் பணி­யாகும்.

பல நாடு­களில் இவ்­வா­றான பிரச்­சி­னை­களை மனித உரிமைப் பிரச்­சி­னை­யாக மாற்றி, அந்த நாடு­க­ளுக்கு அழுத்தம் கொடுப்­ப­தனைப் பர­வ­லாக நாம் காணலாம்.

நுரைச்­சோலை பிரச்­சி­னை­யாக இருக்­கலாம் அல்­லது கந்­த­ல­கம, ரத்­து­பஸ்­வெல, சம்பூர் பிரச்­சி­னை­யாக இருக்­கலாம் இவை யாவும் மக்கள் போராட்­ட­மாக இருந்த போதும் கடைசி வரை அர­சாங்கம் அதற்கு நட­வ­டிக்கை எடுக்­கா­ம­லே­யேதான் இருந்­தது.

இந்தப் போராட்டம் தொடர வேண்டும். நாங்கள் உங்­க­ளோடு இருப்போம். சுத்­த­மான குடி­நீ­ருக்­காக ரது­பஸ்­வெல மக்கள் தங்­க­ளது உயிரைக் கொடுத்து போரா­டி­னார்கள். இங்கு நாங்கள் வெயி­லையும் பொருட்­ப­டுத்­தாது போராடிக் கொண்­டி­ருக்­கின்றோம்.

இது உரி­மைக்­கான போராட்டம், வாழ்­வ­தற்­கான போராட்டம், ஆரோக்­கிய வாழ்­விற்­கான பேராட்டம். இது ஒரு மக்கள் போராட்டம்.

இந்த மக்கள் போராட்டம் ஒரு­போதும் தோற்றுப் போய்­விடக் கூடாது. அதனை நாங்கள் மதிக்­கின்றோம்.

அதே­போன்று புத்­தளம் நக­ர­ச­பை­யிலே இப்­பி­ரச்­சி­னைக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு எங்­க­ளது உறுப்­பினர் அமீன் அவர்­களும் ஆத­ர­வ­ளித்து, எங்­களால் முடி­யு­மான ஒரு முயற்­சியை செய்­தி­ருக்­கின்றோம்.

தற்­போது நடை­பெற்றுக் பெற்றுக் கொண்­டி­ரு­கின்ற பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் 1000 ரூபா சம்­பள உயர்வுப் போராட்­ட­மா­னது, பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் போராட்­ட­மாக மட்டும் இருக்­கப்­போ­வ­தில்லை.

தொழிற்­சங்­கங்கள், மக்கள் அமைப்­புக்கள், அர­சியல் கட்­சிகள், மாணவர் அமைப்­புக்கள் மற்றும் நீதி­யையும், நியா­யத்­தையும் மதிக்­கின்ற மக்கள் அனை­வ­ரி­னதும் போராட்­ட­மாகும் என அதன் ஏற்­பாட்­டா­ளர்கள் கூறி­யி­ருக்­கின்­றார்கள்.

அவர்­க­ளுக்­கான ஆதரவினை நாங்கள் தெரிவிக்கின்றோம். அதேபோன்று இது புத்தளத் திற்குரிய பிரச்சினையல்ல, இதனை கொழும்பிலும் வந்து பேசுங்கள், கிழக்கு மாகாணத்திற்கும் வந்து பேசுங்கள். இது ஒரு தேசியப் பிரச்சினையாகும். என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.