சவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

0 542

சவூதி அரே­பி­யாவில் பெண் கைதிகள் சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு, கொடூ­ர­மா­னதும் மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யிலும் அவர்­களை நடத்­து­வ­தாக பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தின் அனைத்­துக்­கட்சி குழு கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

சவூ­தி அரே­பியா மற்றும் சர்­வ­தேச சட்­டங்­களின் அடிப்­ப­டையில் இந்தத் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு அதி­யுச்ச அளவில் சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் பொறுப்­புக்­கூற வேண்­டு­மென தடுப்­புக்­காவல் மீளாய்வு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள விமர்­சன அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வசந்த காலத்­தின்­போது கைது செய்­யப்­பட்ட பெண் செயற்­பாட்­டா­ளர்கள் தூங்­க­வி­டாது தடுத்தல், தாக்­குதல், உயிர் அச்­சு­றுத்தல் மற்றும் தனி­மைச்­சிறை உள்­ளிட்ட வகையில் கடு­மை­யா­கவும் மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யிலும் நடத்­தப்­ப­டு­வ­தாக அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அவர்கள் நடத்­தப்­படும் விதம் சித்­தி­ர­வ­தைக்கு நிக­ரா­னது. அவர்­க­ளுக்கு உட­ன­டி­யாக மருத்­துவ உத­விகள் வழங்­கப்­ப­டா­விட்டால், அவர்­க­ளுக்கு நீண்­ட­கால சுகா­தாரப் பாதிப்­புக்கள் இடம்­பெ­று­மெனத் தெரி­வித்­துள்ள அவ்­வ­றிக்கை, இந்தக் குற்­றங்­களை செய்­வது தொடர்­பாக பொறுப்­புக்­கூற வேண்­டி­யது அதனை நேர­டி­யாக மேற்­கொள்­ப­வர்கள் மாத்­தி­ர­மல்ல, அவற்றைச் சரி காண்­ப­வர்­க­ளும்தான் எனவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கொள்­கையின் அடிப்­ப­டையில் சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் சித்­தி­ர­வதைக் குற்­றங்­க­ளுக்­காக உயர்ந்­த­ளவில் பொறுப்­புக்­கூற வேண்டும்.

எமது இறுதித் தீர்­மானம் எவ்­வித சந்­தே­கங்­களும் அற்­றது என தடுப்­புக்­காவல் மீளாய்வு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழுவின் தலை­வ­ரான பழ­மை­வாதக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கிரிஸ்பின் பிளண்ட் தெரி­வித்தார்.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பெண் செயற்­பாட்­டா­ளர்கள் சித்­தி­ர­வ­தைக்­காக சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை மேற்­கொள்ள வேண்­டிய அள­வுக்கு சமாந்­த­ர­மாக மிக மோச­மாக நடத்­தப்­பட்­டுள்­ளனர் எனவும் பிளண்ட் குறிப்­பிட்டார்.

உரிய மருத்துவ சிகிச்­சை­யினைப் பெறு­வ­தற்கு, சட்ட ஆலோ­சனை பெறு­வ­தற்கு அல்­லது குடும்ப உறுப்­பி­னர்­களைச் சந்­திப்­ப­தற்கு அனு­மதி மறுக்­கப்­ப­டுதல், அவர்­களைத் தனிமைச் சிறையில் அடைத்தல் மற்றும் முறை­யற்ற விதத்தில் அவர்­களை நடத்­துதல் என்­பன சித்­தி­ர­வ­தைக்­கான சர்­வ­தேச வரை­வி­லக்­க­ணத்­திற்கு பொருந்­து­ம­ள­வுக்கு பார­தூ­ர­மான விட­யங்­க­ளாகும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கைது செய்­யப்­பட்­ட­தாக கேள்­விப்­பட்­ட­வுடன் நான் பெரும்­பா­லா­னோரைப் போன்று அதிர்ச்­சி­ய­டைந்தேன். இவ்­வா­றா­ன­தொன்று நடந்திருக்கக் கூடாது எனவும் நினைத்தேன் என குழுவின் உறுப்பினரான லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லைலா மோரன் தெரிவித்தார்.

சித்திரவதை குறிப்பாக, பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதான அச்சுறுத்தல் எந்த வகையிலும் மன்னிக்கப்பட முடியாதவை எனவும் மோரன் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.