பாகிஸ்தான் விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்களை இனங்காணும் பணிகள் ஆரம்பம்

0 522

தென்­மேற்கு பாகிஸ்­தானில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற விபத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களை அடை­யாளம் காணும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில், உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்கள் கராச்­சி­யி­லுள்ள பிண­வ­றைக்கு நேற்று கொண்டு வரப்­பட்­டன.

பாகிஸ்­தானின் பலூ­சிஸ்தான் மாகா­ணத்தில் நேற்­று­முன்­தினம் இரவு டிரக் வண்­டி­யுடன் மோதி பேருந்து தீப்­பி­டித்­ததில் இவ்­வி­பத்து சம்­ப­வித்­தது. விபத்தில் 26 பேர் உயி­ரி­ழந்­த­துடன், 14 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

பலர் உடல் கருகி உயி­ரி­ழந்த நிலையில், மர­பணு பரி­சோ­த­னை­களின் மூலமே சட­லங்­களை அடை­யாளம் காண முடி­யு­மென மீட்பு நட­வ­டிக்­கைக்குப் பொறுப்­பான அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

அதன்­படி அடை­யாளம் காணும் பணிகள் நிறை­வ­டைந்­ததும் அர­சாங்­கத்தின் ஆலோ­ச­னைக்­க­மைய சட­லங்கள் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­மென அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

சுமார் 40 பய­ணி­க­ளுடன் கராச்­சி­யி­லி­ருந்து பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள நகரொன்றை நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
-Vidiveli

Leave A Reply

Your email address will not be published.