வெடி­பொருள் விவ­காரம்: கொழும்பு எம்.பி.யொருவர் மூடி மறைப்­ப­தற்கு முயற்சி

பியல் நிஷாந்த எம்.பி. குற்­றச்­சாட்டு

0 529

புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கைப்பற்றப்பட்ட வெடி­பொருள் விவ­கா­ரத்­தினை கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர்  மூடி­ம­றைக்க முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றார். அவர் யார் என்­பதை வெகு விரைவில் அம்­ப­லப்­ப­டுத்­துவேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பியல் நிஷாந்த டி சில்வா தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­முன தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் இன்று தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான நிகழ்­வுகள் மாத்­தி­ரமே இடம் பெறு­கின்­றன. விடு­தலைப் புலிகள் காலத்தில் வடக்கு, கிழக்கில் மாத்­தி­ரமே மக்கள் அச்­சத்­துடன் வாழ்ந்­தனர். ஆனால் இன்று நாட்டில் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் வன்­முறை சம்­ப­வங்கள் பகி­ரங்­க­மாக இடம்­பெ­று­கின்­றன. பாதாள உலகக் குழு­வி­ன­ரது மோதல்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றன. புத்­தளம், வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கைப்­பற்­றப்­பட்­டுள்ள வெடி­பொ­ருட்கள் தொடர்பில் அர­சாங்கம் மந்­த­க­ர­மான முறை­யிலே செயற்­ப­டு­கின்­றது.

வெடி­பொருள் விவ­கா­ரத்தின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீ­டுகள் நிச்­சயம் காணப்­படும் என்ற சந்­தேகம் தற்­போது எழுந்­துள்­ளது. இவ்­வி­ட­யத்தை மூடி­ம­றைக்க கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றார். அவர் யார் என்­பதை வெகு­வி­ரைவில் பகி­ரங்­கப்­ப­டுத்­துவோம்.

கடந்த காலங்­களில் நாட்டில் இடம்­பெற்ற இனக் கல­வ­ரங்­களின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களின் செல்­வாக்கு காணப்­பட்­டது.

பேரு­வளை பிர­தே­சத்தில் இடம்பெற்ற இனக்­க­லவ­ரத்­திற்கு மூல­கா­ரணம் யார் என்­பதை நாங்கள் பாரா­ளு­மன்­றத்­திலும், பொது இடங்­க­ளிலும் பகி­ரங்­கப்­ப­டுத்­தினோம். ஆனால் அர­சாங்கம் அவ்­வி­டயம் தொடர்பில் எவ்­வித முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­களும் எ­டுக்­க­வில்லை. இது­ரையில் வன்­முறை சம்­ப­வத்­திற்கு யார் காரணம் என்ற விடயம் முழு­மை­யாக அர­சாங்­கத்­தி­னாலே மூடி மறைக்­கப்­பட்­டு­விட்­டது. இக்­க­ல­வரத்தில் பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­க­ளுக்கு எவ்­வி­த­மான நியா­யமும் கிடைக்­க­வில்லை.

தற்­போது நாட்டில் இடம்­பெ­று­கின்ற ஒவ்­வொரு சம்­ப­வமும் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் விடுப்­ப­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. பாதாள உலகக் குழுவினரது மோதல்கள் சாதாரணமாகவே இடம் பெறுகின்றன. இவ்விடயத்தில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் மீட்பு இவ்விடயங்களுக்கு விரைவில் தீர்வு காணாவிடின் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
-VIdivelli

Leave A Reply

Your email address will not be published.