சூடான் ஆர்ப்­பாட்டம் : இறந்­தோரின் எண்­ணிக்கை 24 ஆக அதி­க­ரிப்பு

0 534

கடந்த மாதம் ஆரம்­ப­மான ஆர்ப்­பாட்­டத்தில் கொல்­லப்­பட்­டோரின் எண்­ணிக்கை 24 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக நாட்டின் உண்­மை­களைக் கண்­ட­றியும் குழுவின் தலைவர் தெரி­வித்­துள்ளார். எனினும், இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­மா­னது என மனித உரிமைக் குழுக்கள் தெரி­வித்­துள்­ளன.

அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்­தின்­போது ஏற்­பட்ட மோதல்கள் கார­ண­மாக குறைந்தது 40 பேர் கொல்­லப்­பட்­ட­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது.

பாண் விலை அதி­க­ரிப்பின் கார­ண­மாக ஆத்­தி­ர­முற்ற மக்­கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டத்தை ஆரம்­பித்­தனர். அதி­லி­ருந்து நாடு முழு­வதும் ஜனா­தி­பதி ஒமர் அல்-­ப­ஷீரை பதவி வில­கு­மாறு கோரி போராட்­டங்கள் நடத்­தப்­ப­டு­வதால் பெரும் பதற்றம் ஏற்­பட்­டுள்­ளது.

பதில் நட­வ­டிக்­கை­யாக கண்ணீர் புகைக் குண்­டு­க­ளையும் உண்­மை­யான துப்­பாக்கி ரவை­க­ளையும் பயன்­ப­டுத்தி பாது­காப்புப் படை­யினர்  ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது தாக்­குதல் நடத்தி வரு­கின்­றனர்.

சூடானின் இரண்­டா­வது பெரிய நக­ரான ஒம்­டுர்­மன்னில் அமைந்­துள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்றின் மீது நோயா­ளி­க­ளையும் வைத்­தி­யர்­களையும் இலக்கு வைத்து துப்­பாக்கித் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கார்­ட்டூமில் உள்ள அல் ஜஸீரா செய்­தி­யா­ள­ரான ஹிபா மோர்கள் தெரி­வித்தார்.

யுத்தக் குற்­றங்­க­ளுக்­காக சர்­வ­தேச நீதி­மன்­றத்­தினால் தேடப்­பட்டு வரும் பஷீர், 1989 ஆம் ஆண்டு இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சி­யினைத் தொடர்ந்து நாட்டை ஆட்சி செய்­து­வ­ரு­கின்றார். சூழ்ச்­சிக்­கா­ரர்­களால் தனது அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­ப­டு­வ­தாக அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

எதிர்­வரும் வாரங்­களில் சூடா­னினால் மேற்­கொள்­ளப்­படும் தீர்­மா­னங்­களும் நட­வ­டிக்­கை­களும் எதிர்­வரும் காலங்­களில் பாதிப்புச் செலுத்தும் என அமெ­ரிக்கா, நோர்வே, கனடா மற்றும் ஐக்­கிய இராச்­சியம் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த வாரம் செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு உட­னடிக் காரணம் பாண் விலை அதி­க­ரிப்­பாக இருந்­த­போ­திலும், சூடான் கடந்த வரு­டத்­தி­லி­ருந்து அதி­க­ரித்த பொரு­ளா­தார நெருக்­க­டி­யினைச் சந்­தித்து வரு­வதே பிர­தான காரணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.