சுதந்திரமான அடிமையற்ற ஊடகத்துறை இருக்குமானால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு பலம் பெறும்

வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச

0 511

சுதந்­தி­ர­மான அடி­மை­யற்ற  ஊட­கத்­துறை இருக்­கு­மானால் நாட்டில் ஜன­நா­யகம் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு அது பலம்­பெ­று­மென வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் வீர­கெ­டிய பிர­தேச செய­லகப் பிரில் நைகல பிர­தே­சத்தில் சக­ல­ருக்கும் நிழல் மீள் எழுச்­சி­பெறும் கம்­உ­தாவ திட்­டத்தின் கீழ் நான்கு உதா­கம மாதிரிக் கிரா­மங்­க­ளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இந்த கிரா­மங்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான லசந்த விக்­கி­ர­ம­துங்க மாதிரிக் கிராமம், உபாலி தென்­னகோன் மாதிரிக் கிராமம்,  கீத் நொயார் மாதிரிக் கிராமம் மற்றும் போத்­தல ஜயந்த மாதிரிக் கிராமம் எனும் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர்­க­ளி­லான மாதிரிக் கிரா­மங்­க­ளாக  நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இக் கிரா­மங்­களில் காணிகள் கிடைக்கப் பெற்ற பய­னா­ளி­க­ளுக்கு வீடு­களை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­காக ஆறு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான வீட­மைப்பு கடனும்  ஒரு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் ரூபா பெறு­ம­தி­யான வீட­மைப்பு உத­வி­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கான காணிகள் தனி­யா­ரி­ட­மி­ருந்து கொள்­வ­னவு செய்­யப்­பட்டு வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வது இந்த கிரா­மங்­களின் விசேட அம்­ச­மாகும்.

வீட­மைப்பு நிர்­மாணத் துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ இங்கு தொடர்ந்தும் உரை­யாற்றும் போது தெரி­வித்­த­தா­வது, உண்­மையைக் கூறி­ய­தால்தான் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்­க­விற்கு தனது உயிரைப் பறி­கொ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அவர் கூறிய உண்மை என்ன? அது மிக் விமான கொள்­வ­னவு தொடர்­பா­னது ஆகும். இவர் மாத்­தி­ர­மன்றி உபாலி தென்­னகோன் பல தட­வைகள் பல தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டார். மேலும் கீத் நொயார், போத்­தல ஜயந்த ஆகிய ஊட­க­வி­ய­லா­ளர்­களும் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாகி உட­லியல் ரீதி­யாக துன்­பு­றுத்­தப்­பட்­டார்கள். இவர்­களை முடி­யு­மான அளவு தாக்கி பிர­தான பாதையில் வடி­கா­னுக்கு அருகில் தூக்கி எறிந்­து­விட்டுச் சென்­றார்கள்.

இவ்­வா­றான மிகவும் கொடூ­ர­மான செயலைச் செய்த அர­சியல் குழுக்கள் இன்று எதிர்க் கட்­சியில் இருந்து கொண்டு ஒன்றும் அறி­யா­த­வர்கள் தெரி­யா­த­வர்கள் போன்று காண்­பிக்க முயற்சி செய்து வரு­கி­றார்கள். இவர்கள் நாட்­டையும் ஜன­நா­ய­கத்­தையும் பாது­காக்க வேண்­டு­மெனக் கூறி வரு­கி­றார்கள்.

இந்த நான்கு கிரா­மங்­களும் வேறெந்த பிர­தேங்­களில் அன்றி வீர­கெ­டி­யவில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வதும் விசேட அம்­ச­மாகும். இந்த நான்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களும் நாட்டு மக்­க­ளுக்கு உண்­மையைத் தெளி­வு­ப­டுத்த முயற்சி செய்­த­தி­னா­லேயே ஒருவர் உயிரை பலி கொடுத்து ஏனைய மூவரும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவர்கள் திருட்டு, ஊழல், இலஞ்சம் மற்றும்  மோசடிகளை ஆதாரங்களுடன் நாட்டிற்கு எடுத்துக் காட்டினார்கள். இந்த ஊடகவியலாளர்க ளுக்காக நாம் எமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.