வேட்­பாளர் யார் என்­பதை இந்த வருடம் அறி­விப்போம்

புதிய ஜனா­தி­ப­தியை தெரிவு செய்ய தயார் என்­கிறார் பசில்

0 489

இந்த ஆண்டு முடி­வ­டைய முன்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி  தலை­மை­யி­லான  கூட்­ட­ணியின்  சார்பில்  புதிய ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை தெரி­வு­செய்ய  தாம் தயா­ராக உள்­ள­தாவும், புதிய ஜனா­தி­ப­தியின் தலை­மைத்­து­வத்தில் வீழ்ச்சி கண்­டுள்ள நாட்­டினை மீட்­டெ­டுக்க சக­ல­ரதும் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தேசிய அமைப்­பாளர் பசில் ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். அடுத்த தேர்­தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்து ஏனைய 19 மாகா­ணங்­க­ளையும் தாம் கைப்­பற்­று­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

மஹர பிர­தே­சத்தில்  நேற்று நடை­பெற்ற  ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் இளைஞர் அமைப்­பு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். இதன்­போது அவர் கூறி­யுள்­ள­தா­வது,

நாம் அர­சியல் ரீதியில் பல­மான கட்­சி­யாக உள்ளோம், நாம் கட்­சி­யாக செயற்­பட ஆரம்­பித்த ஒரு ஆண்­டு­கா­லத்தில் 72 ஆண்­டு­கால அர­சியல் வர­லாற்றைக் கொண்ட ஐக்­கிய தேசியக் கட்­சி­யையும், 67 ஆண்­டு­கால வர­லாற்றைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யையும், 53 ஆண்­டு­கால அர­சியல் வர­லாற்றைக் கொண்ட மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யையும் ஏனைய சிறிய கட்­சி­க­ளையும் பின்­தள்ளி எமது வெற்­றியை மிகப் பல­மாக பதிவு செய்­துள்ளோம். அடுத்து நடக்கும் தேர்­தல்­களில் 19 மாகா­ணங்­க­ளிலும் நாம் முன்­ன­ணியில் வெற்­றியை தக்­க­வைத்­துக்­கொள்ள  முடியும்.

அதேபோல்  51 நாட்கள் அர­சியல் நெருக்­க­டியில் நாம் அர­சாங்­கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றோ அல்­லது ஆட்­சியைக் கொண்­டு­செல்ல வேண்டும் என்றோ எந்த முன்­னா­யத்­தமும் இருக்­க­வில்லை. ஆட்­சியை நடத்த இட­ம­ளிக்­கவும் இல்லை. இப்­போது எமக்கு ரணில், சஜித், நவீன் கூட்­ட­ணியை விடவும் சர்­வ­தே­சத்­துடன் போட்­டி­யிட்டே எமது வெற்­றியை தக்­க­வைத்துக் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது.

எனினும் இந்த ஆண்டு இறு­திக்குள் எமது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­மையில் உரு­வாகும் கூட்­ட­ணிக்­கட்சி தமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்து அடுத்த கட்ட அர­சியல் போராட்­டத்தில் கள­மி­றங்கும். அதில் இளைஞர் அணியின் முழு­மை­யான ஆத­ரவும் செயற்­பாடும் அவ­சி­ய­மாக இருக்கும். அதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். புதிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் வீழ்ச்சி கண்டுள்ள நாட்டினை மீட்டெடுக்க சகலரதும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.