சதகத்துல்லாஹ் மெளலவியின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

0 529

கண்டி மாவட்­டத்தின் முன்­னணி உல­மாக்­களில் ஒரு­வ­ரான ஏ.சி.எம். சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியின் மறைவு ஆழ்ந்த கவ­லை­ய­ளிப்­ப­தா­கவும், அவ­ருக்கு மேலான சுவன வாழ்வு கிட்­ட­வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவ­ரது மறைவு குறித்து விடுத்­துள்ள அனு­தாபச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

அமைச்­சரின் அனு­தாபச் செய்­தியில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது;

கடந்த மார்ச் மாதம் திகன, அக்­கு­றணை உள்­ளிட்ட கண்டி மாவட்­டத்தின் சில பிர­தே­சங்­களில் நடை­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத வன்­செ­யல்­க­ளின்­போது பஸ் வண்­டியில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் காடையர் கும்­ப­லினால் தாக்­கப்­பட்டு படு­கா­ய­ம­டைந்து, நீண்­ட­கா­ல­மாக சிகிச்சை பெற்­று­வந்த நிலையில் ஏ.சி.எம். சத­கத்­துல்லாஹ் மெள­லவி கால­மான செய்­தியைக் கேட்டு அனை­வரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

சன்­மார்க்க அறி­ஞர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாகத் திகழ்ந்த ஏ.சி.எம். சதக்­கத்­துல்லாஹ் மெள­லவி பன்­முக ஆளுமை கொண்­டவர். மூதூர் நத்­வதுல் உலமா அரபுக் கல்­லூ­ரியில் சன்­மார்க்க கல்­வி­கற்ற அன்னார், ஆசி­ரி­ய­ரா­கவும், கல்வி அதி­கா­ரி­யா­கவும், சன்­மார்க்க போத­க­ரா­கவும், சிட்டி ஜம்­இய்­யத்துல் உல­மாவின் முன்னாள் உப தலை­வ­ரா­கவும், காதி நீதி­ப­தி­யா­கவும், சர்­வ­மத அமைப்பின் இணைத் தலை­வ­ரா­கவும் பல்­வேறு மட்­டங்­களில் பணி­யாற்­றி­யுள்ளார்.

இனங்­க­ளுக்கு மத்­தியில் நல்­லு­ற­வையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முன்­னின்று உழைத்த மர்ஹூம் ஏ.சி.எம். சதக்­கத்­துல்லாஹ் மெள­லவி, இன­வா­தி­க­ளாளின் ஈனச்­செ­ய­லுக்கு இலக்­காகி தனது இன்­னு­யி­ரையே இழக்க நேர்ந்­தமை முஸ்லிம் சமு­தா­யத்­துக்கு ஏற்­பட்ட பாரிய இழப்பு என்றே கரு­த­வேண்டும்.

அன்­னாரின் மறை­வினால் துய­ர­முற்­றுள்ள அவ­ரது குடும்­பத்­தினர், உற்றார், உற­வினர், தெல்­தோட்டை பிர­தேச மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது மறுமை வாழ்வில் மேலான சுவன வாழ்வு கிடைக்கவும் அனைவரும் பிரார்த்திப்போம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.