சிலைகளை சேதப்படுத்தியமை வன்மையாக கண்டிக்கத்தக்கது

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு

0 648

சிலை­களைச் சேதப்­ப­டுத்­தி­யதை இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து ஜமா­அத்தே இஸ்­லா­மி­யினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் மாவ­னெல்லைப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற புத்தர் சிலை­களைச் சேதப்­ப­டுத்­திய நிகழ்வை இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. இனங்­க­ளுக்­கி­டையில், மதங்­க­ளுக்­கி­டையில் இணக்­கப்­பாட்டைத் தோற்­று­விக்க சமூக நிறு­வ­னங்கள் அய­ராது முயற்­சித்துக் கொண்­டி­ருக்கும் இச் சந்­தர்ப்­பத்தில் இத்­த­கைய இழி­வான செயல்கள் அனை­வ­ராலும் கண்­டிக்­கப்­பட வேண்டும்.

சிலையைச் சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் மாவ­னெல்லைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த பல சமூகத் தலை­வர்­க­ளி­டமும் பிர­மு­கர்­க­ளி­டமும் பொலிஸார் வாக்­கு­மூ­லங்­களைப் பதிவு செய்­துள்­ளனர். அந்த வகையில் மாவ­னெல்­லையில் வசிக்கும் இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்­க­ளி­டமும் வாக்­கு­மூலம் பெற்­றுள்­ளனர்.

இதனைப் பின்­ன­ணி­யாகக் கொண்டு வீண் புர­ளி­களைப் பரப்பும் வேலை­களில் ஒரு சிலர் பொறுப்­பற்­ற­த­ன­மாக ஈடு­ப­டு­வதும் கண்­டிக்­கத்­தக்­கது.
முன்­னெப்­போ­தையும் விட சமூக ஒற்­றுமை, நல்­லி­ணக்கம், சக­வாழ்வு வலி­யு­றுத்­தப்­பட வேண்­டிய இக் கால­கட்­டத்தில் இது போன்ற நாச­கார வேலை­களில் ஈடு­ப­டு­ப­வர்­களை சட்­டத்தின் முன் கொண்­டு­வர சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜமாஅத்தே இஸ்லாமி கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.