சிறுநீரக சத்திர சிகிச்சையின் போதான சிறுவன் ஹம்தியின் மரணம் : விசாரணை சி.ஐ.டி. சிறப்பு பிரிவினரிடம்

சத்திர சிகிச்சை செய்த வைத்தியர் நவீன் அவுஸ்திரேலியாவிலிருந்து வீடியோ காணொளியில் வாக்கு மூலம் வழங்க கோரிக்கை

0 91

(எப்.அய்னா)
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் தொடர்பிலான பூரண விசாரணைகள், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்புப் பிரிவிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இது­வரை பொரளை பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள், தற்­போது சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மாஅதி­பரின் கீழ் செயற்­படும் கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள படு­கொலை, திட்­ட­மி­டப்­பட்ட குற்­றங்கள் மற்றும் கொலை தொடர்பில் விசா­ரணை செய்யும் சிறப்புப் பிரிவின் (Homicide & Organized Crime Investigation and Murder) பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஆர்.ஏ.டி.ஈ.எல். ரந்­தெ­னி­யவின் நேரடி கட்­டுப்­பாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி சிறுவன் ஹம்­தியின் பெற்­றோ­ரிடம் வாக்கு மூலம் பெற்­றுள்ள குறித்த சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்கள், லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர், ஏனைய வைத்­தி­யர்­களை விசா­ரணை செய்­யவும், ஆவ­ணங்­களைப் பெற்­றுக்­கொள்­ளவும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

இது­வரை குறித்த சிறு­வனின் சத்­திர சிகிச்­சை­யுடன் தொடர்­பு­பட்ட அனைத்து மூல ஆவ­ணங்­களும் விசா­ர­ணை­யா­ளர்­களின் கைக­ளுக்கு கிடைக்­காத நிலையில், அவற்றைப் பெற்று மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று (15) சிறப்பு விசா­ரணைப் பிரி­வினர் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லி சிறு­நீ­ரக சத்­தி­ர­சி­கிச்­சையின் பின் கடந்த 2023 ஜூலை 28 ஆம் திகதி உயி­ரி­ழந்­தி­ருந்தார். சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்­ன­ரான தொற்று பரவல் மர­ணத்­துக்கு காரணம் என லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் அப்­போது குறிப்­பிட்ட நிலையில், பாரிய மருத்­துவ தவ­றொன்று அல்­லது மனித உறுப்பு வர்த்­தக நட­வ­டிக்கை ஒன்று ஹம்­தியின் மர­ணத்தின் பின்­ன­ணியில் இருக்­கலாம் என சிறு­வனின் குடும்­பத்தார் சார்பில் குற்றம் சுமத்­தப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இது தொடர்பில் பொரளை பொலிசார், கொழும்பு 2 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய முன்­னி­லையில் அறிக்கை சமர்ப்­பித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இந்த விசா­ர­ணை­யே சிறப்பு பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. இத­னி­டையே சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்ட வைத்­தியர் நவீன் விஜேகோன் அவுஸ்­தி­ரே­லி­யாவுக்கு சென்ற நிலையில் இவ்­வி­சா­ர­ணைகள் மேலும் மந்­த­ம­டைந்­தன.
அதன்­படி இது குறித்த வழக்கு நேற்றும் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது பாதிக்­கப்­பட்ட தரப்­பான ஹம்­தியின் குடும்­பத்தார் சார்பில் சட்­டத்­த­ரணி வைத்­தியர் யூசுப் ஆஜ­ரானார். சிறப்பு விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரி­களும் மன்றில் ஆஜ­ரான நிலையில், அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள வைத்­தியர் நவீன் விஜே­கோ­னுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் பிர­சன்­ன­மானார்.

இதன்­போது மன்றில் விஷேட விடயம் ஒன்­றினை முன் வைத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், தனது சேவை பெறுநர் உரிய முறையில் உரிய அனு­ம­தி­யு­ட­னேயே அவுஸ்­தி­ரே­லியா சென்­ற­தா­கவும், விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்க தனது சேவை பெறுநர் தயார் எனவும், அதனால் வீடியோ காணொளி ஊடாக சாட்­சியம் அல்­லது வாக்கு மூலம் வழங்க அனு­ம­திக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

எனினும் அதற்கு பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி வைத்­தியர் யூசுப் ஆட்­சே­பனை முன் வைத்தார். வைத்­திய நிபுணர் மலிக் சம­ர­சிங்­கவின் வாக்கு மூலம் மற்றும் ஏனைய சாட்­சிகள் பிர­காரம் வைத்­தியர் நவீன் விஜேகோன் மீது பிர­தான சந்­தேகம் இவ்­வி­வ­கா­ரத்தில் எழு­கின்­றது. அவ்­வா­றி­ருக்­கையில் அவரை சந்­தேக நப­ராக கருதி செயற்­பட்டு அவரை நாட்­டுக்கு அழைக்­காது, விஷேட வரப்­பி­ர­சாதம் வழங்க சட்­டத்தில் இட­முள்ளதா? என வைத்­தியர் யூசுப் கேள்வி எழுப்­பினார்.

இதன்­போது நீதி­மன்­றுக்கு விசா­ர­ணைகள் தொடர்பில் அறிக்­கை­யிட்ட சிறப்பு விசா­ரணைப் பிரிவு, விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அனைத்து மூல ஆவ­ணங்­க­ளையும் பரீட்­சித்த பின்னர் மேல­திக சாட்­சி­யங்­களின் பின்னர் அடுத்த கட்டம் தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­படும் என குறிப்­பிட்­டனர்.

இத­னை­ய­டுத்து இது தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் எதிர்­வரும் ஜூலை 3 ஆம் திக­திக்கு ஒத்திவைக்­கப்­பட்­டது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.