செங்­க­ட­­லுக்கு கப்­பலை அனுப்­பு­வது இலங்கையை பூகோள ஆயுத மோத­லுக்குள் தள்­ளவே வழி­வ­குக்­கும்

40 சிவில் அமைப்­புகள் கூட்­டாக அறிக்­கை

0 120

(ஏ.எச்.ஏ. ஹுசைன்)
இனப்­ப­டு­கொலைக் குற்­றத்தைத் தடுத்தல் மற்றும் தண்­டித்தல் மீதான சம­வா­யத்தின் அரச தரப்பில் ஒன்­றாக, சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் முன் இஸ்­ரே­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களைத் தொடுக்கும் வகையில் தென்­னா­பி­ரிக்­கா­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள விண்­ணப்­பத்தை ஆத­ரிப்­ப­தாக இலங்­கை­யி­லுள்ள சுமார் 40 சிவில் சமூக அமைப்­புகள், வலை­ய­மைப்­புகள் மற்றும் ஒன்­றி­யங்­க­ள் ஆத­ரித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டு­ள்­ளன.

அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வ­து,
இஸ்ரேல் அரசு “காஸா­விலும் அதற்கு எதி­ரா­கவும் மேற்­கொள்ளும் அதன் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும்” எனக் கோரும் இடைக்­கால நட­வ­டிக்­கை­களும் தென்­னா­பி­ரிக்கா சமர்ப்­பித்த விண்­ணப்­பத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

நீதி­மன்­றத்­திற்கு தென்­னா­பி­ரிக்காவினால் வழங்­கப்­பட்ட விரி­வான 84 பக்கங்கள் கொண்ட ஆவணத்­தில், “தென்­னாபி­ரிக்க குடி­ய­ரசும் இஸ்ரேல் அரசும், இனப்­ப­டு­கொலைக் குற்­றத்தைத் தடுத்தல் மற்றும் தண்­டித்தல் மீதான சம­வா­யத்தின் கீழான தங்கள் கடப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக, பாலஸ்­தீன மக்கள் தொடர்பில், இனப்­ப­டு­கொ­லையைத் தடுப்­ப­தற்­காக தங்கள் அதி­கா­ரத்­தினுள் அனைத்து நியா­ய­மான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும்” எனத் தீர்ப்­ப­ளிக்­கு­மாறு நீதி­மன்­றத்தைக் கோரு­கின்­றது.

தென்­னா­பி­ரிக்­காவின் சமர்ப்­பித்தல் மீதான முதற்­கட்ட விசா­ர­ணைகள் 2024 ஜன­வரி 11 மற்றும் 12 ஆம் திக­தி­களில் ஹேக்கில் உள்ள சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நடை­பெற்­றது. நீதிக்­கான சர்­வ­தேச நீதி­மன்றில் காஸா­வுக்­கான தென்­னா­பி­ரிக்­காவின் முன்­னெ­டுப்பு நம்­பிக்கை தரு­கி­றது. இது இலங்­கையில் இழைக்­கப்­பட்ட குற்­றங்­க­ளுக்­கா­கவும் நீதிக்­கான சர்­வ­தேச நீதி­மன்­றத்தை நாடு­வ­தற்கு உதவ வேண்டும்.

காஸாவின் நிலைமை உலகின் மன­சாட்­சியை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. மனி­தா­பி­மான அக்­க­றை­களை நிவர்த்தி செய்­வ­தற்­கான போர் நிறுத்தம் ஒன்றைக் கோரும் சர்­வ­தேச அழைப்­பு­களை இஸ்ரேல் அங்­கீ­க­ரிக்க மறுத்­துள்­ளமை காஸா மக்­களை மிகவும் பாதிப்­பிற்­குள்­ளாகக் கூடிய நிலையில் வைத்­தி­ருப்­பது உறைய வைப்­ப­தாக உள்­ளது.

காஸா மக்கள் மற்றும் பொது­வாக பலஸ்­தீ­னி­யர்­களின் மனித உரி­மை­களை நிலை நிறுத்த மறுத்து, ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் போன்ற பல்­வேறு அர­சாங்­கங்­களும், அர­சு­க­ளுக்­கி­டை­யி­லான அமைப்­பு­களும் தோல்­வி­யுற்­றுள்­ளன.

மனித உரி­மைகள் என்­பது ஒரு “மேற்­கத்­தேய கருத்­த­மைவு” எனப் பெரும்­பாலும் கூறப்­ப­டு­கின்ற போதும், காஸா விட­யத்தில் மனித உரி­மைகள் பிரச்­சி­னையில் மேற்­கத்­தேய அர­சாங்­கங்கள் பெரும்­பாலும் மௌனம் சாதிக்­கின்­றன.

உல­க­ளா­விய தெற்கின் ஓர் அங்­கத்­த­வ­ரான தென்­னா­பி­ரிக்கா இந்தப் பிரச்­சி­னையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்குக் கொண்டு வரு­வதில் துணிச்­சலை வெளிக்­காட்­டி­யுள்­ளது. மியன்­மாரின் ரோஹிங்­கியா மக்­களின் அவல நிலையை நீதி­மன்­றத்­திற்குக் கொண்டு வரு­வதில் காம்­பி­யாவும் இது போன்றே செயற்­பட்­டது.

இலங்­கையும் உல­க­ளா­விய தெற்கின் ஒரு பகு­தி­யாகும். ஆயினும், காஸா நெருக்­கடி தொடர்பில் எமது அர­சாங்கம் வியத்­தகு முறையில் வித்­தி­யா­ச­மான அணு­கு­முறை ஒன்­றினைக் கையி­லெ­டுத்­துள்­ளது. ஐ.நா. பொதுச் சபையில் “உட­ன­டி­யான, நீடித்த மற்றும் நிலை­யான மனி­தா­பி­மான போர் நிறுத்தம்” ஒன்­றிற்கு 120 நாடுகள் வாக்­க­ளித்த நிலையில் அந்தப் பெரும்­பான்­மை­யுடன் இணை­வ­தற்குப் பதி­லாக, இலங்கை வாக்­க­ளிப்­பதைத் தவிர்த்­தது.

மேலும், 10,000 தொழி­லா­ளர்­களை இஸ்­ரே­லுக்கு அனுப்­பு­வ­தற்கு இலங்கை துரி­த­மான நகர்­வு­களை மேற்­கொண்­டுள்­ளது. விவ­சாயத் தொழி­லா­ளர்­க­ளா­கவும், கட்­டு­மானத் தொழி­லா­ளர்­க­ளா­கவும் செல்லும் இந்த மக்கள், மோதல் காணப்­படும் இடை­யக வல­யங்­களில் (buffer zones)பணிக்கு அனுப்­பப்­ப­டு­வ­தற்­கான அதிக சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு, அதிக ஊதியம் என்னும் வாக்­கு­று­தி­யுடன் பொரு­ளா­தார ரீதி­யாக பாதிப்­புறு நிலை­யி­லுள்ள மக்­களின் விரக்­தியை அர­சாங்கம் சுரண்­டு­வது மட்­டு­மன்றி, புலம்­பெயர் தொழி­லா­ளர்­களைப் பாது­காப்­பது தொடர்பில் சிறந்த கடந்­த­காலப் பதி­வு­களைக் கொண்­டி­ராத எமது அர­சாங்­கத்­தினால் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பற்ற உயர் ஆபத்­துள்ள பகு­தி­க­ளுக்கும் அவர்­களை அனுப்­பு­கின்­றது. கொவிட் பெருந்­தொற்றின் போதும் முன்­னைய மோதல்­களின் போதும் (ஈராக் – குவைத் போர், லெப­னானில் இடம்­பெற்ற உள்­நாட்டுப் போர் மற்றும் ஈராக் மீதான அமெ­ரிக்க படை­யெ­டுப்பு ஆகி­ய­வற்றின் போது) பல புலம்­பெயர் தொழி­லா­ளர்கள் எமது அர­சாங்­கத்­தினால் கைவி­டப்­பட்­டனர்.

செங்­க­டலில் கப்பல் போக்­கு­வ­ரத்தைப் பாது­காப்­ப­தற்­கான அமெ­ரிக்­காவின் தலை­மை­யி­லான இரா­ணுவ முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு கப்பல் ஒன்­றினை அனுப்­பு­வ­தற்­கான அர­சாங்­கத்தின் முடிவு இன்னும் அச்­ச­மூட்­டு­வ­தாக உள்­ளது. இது இலங்­கையை ஒரு பாரிய பூகோள அர­சி­யல்சார் ஆயுத மோத­லுக்குள் தள்­ளு­வ­துடன் இதனை முகாமை செய்­வ­தற்­கான கொள்­தி­றனும் எம்­மிடம் போதாது. இலங்கை பாரம்­ப­ரி­ய ­ரீ­தி­யாக அணி­சேரா நாடாக இருந்து வரு­கின்­றது. மத்­திய கிழக்கு நாடு­க­ளுடன் நாம் வலு­வான வணி­க ­ரீ­தி­யான உற­வு­களைக் கொண்­டுள்ளோம் என்­ப­துடன் இந்தத் தவ­றான தீர்­மா­னத்­தினால் இவை அனைத்தும் பாதிப்­பிற்கும் உள்­ளாக்­கப்­படும். மேலும், மக்கள் சந்­திக்கும் அதி­க­ள­வான போஷாக்­கின்மைப் பிரச்­சினை மற்றும் வீழ்ச்­சி­ய­டைந்து வரும் சுகா­தாரத் துறை ஆகி­ய­வற்­று­ட­னான ஒரு பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு மத்­தியில் நாம் வாழும் நிலையில் இலங்­கைக்கு ஒரு மாதத்­திற்கு 500 மில்­லியன் ரூபா இதனால் செல­வாகும்.

ஆழ்ந்த கலக்­கத்தை ஏற்­ப­டுத்தும் இந்தச் சூழ­மைவில், காஸாவில் நிலவும் தீவிர நெருக்­க­டியை நிறுத்தும் முயற்­சியில் தென்­னா­பி­ரிக்க அர­சாங்­கத்தின் துடிப்­பான ஈடு­பாட்­டிற்கு ஆத­ர­வ­ளிக்க நாம் விரும்­பு­கின்றோம். உல­க­ளா­விய மனித உரி­மைகள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் ஆகி­ய­வற்றின் சர்­வ­தே­ச­ ரீ­தி­யான பிர­யோ­கத்தை வலி­யு­றுத்­து­வதன் மூலம் இனப்­ப­டு­கொ­லையைத் தடுப்­ப­தற்­கான தென்­னாபி­ரிக்­காவின் முயற்­சி­க­ளுடன் இலங்கை தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் பின்­வ­ரு­வ­ன­வற்­றிற்­காக இலங்­­கை அர­சாங்­கத்­திற்கு அழைப்பு விடுக்­கின்றோம்:
– உல­க­ளா­விய மனித உரி­மைகள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு, காஸா நெருக்­கடி தொடர்பில் கோட்­பாட்­டு­ரீ­தி­யான அணுகுமுறை ஒன்றினை ஏற்றுக்கொள்ளல்.
– செங்கடலில் இடம்பெறும் ஆயுதமோதலில் ஈடுபடுவதற்கான அதன் தீர்மானத்தை உடனடியாக மீள்பரிசீலனை செய்தல்.
– பாதிப்புறு நிலையிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களைப் பாரதூரமான அபாயத்திற்கு உட்படுத்தும் இந்தக் கொந்தளிப்பான மோதலினுள் அவர்களை அனுப்புவதை மீள்பரிசீலனை செய்தல்.
– இலங்கை மக்கள் சார்பில், சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் முன்­னி­லையில் தென்­னா­பி­ரிக்கா மேற்­கொண்­டுள்ள கோட்­பாட்­டு ­ரீ­தி­யான நிலைப்­பாட்­டிற்கு ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­துடன், இனப்­ப­டு­கொ­லையைத் தடுப்­ப­தற்கு சர்­வ­தேச சமூகம் அனைத்து நியா­ய­மான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ளல் வேண்டும் எனத் தென்­னா­பி­ரிக்­கா­வினால் நீதி­மன்­றத்­திற்கு வழங்கப்பட்ட சமர்ப்பித்தலுக்கும் ஆதரவளித்தல்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.