மத்திய கிழக்கு பதற்றம்: அரபு நாடுகளின் தூதுவர்களிடம் ரணில் கூறியது என்ன?

0 135

ஏ.ஆர்.ஏ.பரீல்

செங்­கடல் பகு­தியில் ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் மேற்­கொண்டு வரும் சரக்குக் கப்­பல்கள் மீதான தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து செங்­கடல் பாது­காப்பு பணி­க­ளுக்­காக இலங்­கையின் கடற்­ப­டையை ஆனுப்பும் அர­சாங்­கத்தின் தீர்­மானம் இலங்­கையில் உள்ள இஸ்­லா­மிய அரபு நாடு­களை அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. அரபு நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரிகள் கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

இலங்­கையின் இந்த தீர்­மானம் இலங்கை மறை­மு­க­மாக இஸ்­ரே­லுக்கு உதவும் வகையில் இருப்­ப­தா­கவும் அவர்கள் இரா­ஜ­தந்­திர ரீதியில் தெரி­வித்­தி­ருந்­தனர். செங்­கடல் பாது­காப்­புக்­காக இலங்­கை­யி­லி­ருந்து அனுப்­பப்­படும் கப்­பலும், கடற்­ப­டை ­வீ­ரர்­களும் அப்­பி­ராந்­தி­யத்தில் வேறோர் நாடுடன் இணைந்தே பாது­காப்பு கட­மை­களில் ஈடு­பட வேண்­டி­யுள்­ளது. அந்த வேறொரு நாடு இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வான நாடா­கவே இருக்­கு­மென்­பதால் அது இல­ங்­கையின் அணி சேரா கொள்­கையை மீறு­வ­தாக இருக்­கு­மெ­னவும் அரபு நாடு­களின் தூது­வர்கள் தெரி­வித்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

ஜனா­தி­பதி ரணில் அரபு நாடு­களின்
தூது­வர்­க­ளு­டன் சந்­திப்பு
இலங்­கை­யி­லுள்ள அரபு நாடு­களின் தூது­வர்கள் செங்­கடல் பாது­காப்பு பணி­க­ளுக்கு இலங்கை கடற்­ப­டையை அனுப்­பு­வது தொடர்பில் அதி­ருப்­தியை வெளி­யிட்­ட­தை­ய­டுத்து நிலை­மையைச் சமா­ளிக்க ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ­ச­ர­மாக கொழும்பில் அரபு நாடு­களின் தூது­வர்­களை கடந்த வாரம் சந்­தித்தார்.

இந்தச் சந்­திப்பு மத்­திய கிழக்கு நாடு­களைப் பிர­தி­நி­தித்­துவப் டுத்தும் 10 நாடு­களின் தூது­வர்­க­ளுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடையில் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. ஜனா­தி­பதி செய­லகம் இச்­சந்­திப்பு தொடர்பில் ஊடக அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டது.

பலஸ்­தீன பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்­டத்தை சாத்­தி­ய­மாக்­கு­வ­தற்­காக இலங்கை அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்தச் சந்­திப்பின் போது குறிப்­பிட்டார். மேலும் அவர் நிலை­யா­னதும் செய­லூக்­க­மா­ன­து­மான பலஸ்­தீன அர­சாங்­கத்தை நிறுவி மேற்குக் கரை பகு­தி­களில் தஞ்சம் புகுந்­தி­ருப்­ப­வர்­களை நிரந்­த­ர­மாகக் குடி­ய­மர்த்த அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை அதி­கா­ரிகள் முன்­னெ­டுக்க வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்திக் கூறினார்.

மேலும் ஒரு நாட்டை நிறுவி இரு நாடு­க­ளுக்கு தீர்வு வழங்க முடி­யா­தெ­னவும், ஹமாஸ் அமைப்பின் பயங்­க­ர­வாதத் தாக்­குதல் மற்றும் காஸா எல்­லைகள் மீது இஸ்ரேல் தொடர்ச்­சி­யாக மேற்­கொண்­டு­வரும் குண்­டு­த் தாக்­கு­தல்­களை நியா­யப்­ப­டுத்த முடி­யா­தெ­னவும் அவர் கூறினார்.

காஸா­வுக்கு இலங்கை உத­வி­களை வழங்­க­வி­ருப்­ப­தாக உறு­தி­ய­ளித்த ஜனா­தி­பதி அப்­ப­கு­திக்கு மனி­தா­பி­மான உத­விகள் தொடர்ச்­சி­யாக வழங்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தினார்.

பலஸ்­தீன மக்­களின் துய­ரங்கள் தொடர்பில் தனது கவ­லையை வெளி­யிட்ட ஜனா­தி­பதி அங்கு போர் நிறுத்தம் விரை­வாக உறுதி செய்­யப்­பட வேண்டும் என்றார்.

செங்­க­டலின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். செங்­கடல் பிராந்­தி­யத்தின் ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் சரக்கு கப்பல்கள் மீது மேற்­கொண்டு வரும் தாக்­கு­தல்­களை ரணில் விக்­கி­ர­ம­சிங்க கண்­டித்தார். இந்­நி­லை­மை­யினால் இலங்கை பொரு­ளா­தா­ரத்­திற்கு ஏற்­ப­டக்­கூ­டிய சவால்­களை ஜனா­தி­பதி விளக்­கினார். இந்­நி­லையில் கடல்­வழி போக்­கு­வ­ரத்தில் இருக்க வேண்­டிய சுதந்­தி­ரத்தைப் பாது­காப்­பது எமது கடமை. அத­ன­டிப்­ப­டை­யிலே இலங்கை செங்­கடல் பாது­காப்­புக்கு பங்­க­ளிப்புச் செய்ய தீர்­மா­னித்­தது என்­ப­த­னையும் ஜனா­தி­பதி விளக்­கினார்.

அத்­தோடு மேற்­கு­லக நாடு­க­ளு­ட­னான தொடர்­பு­க­ளுக்கு மேல­தி­க­மாக ஆசியா, ஆபி­ரிக்கா, மேற்கு ஆசியா, மத்­திய கிழக்கு உள்­ளிட்ட வல­யங்­க­ளு­ட­னான தொடர்­பு­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

இதன்­போது சந்­திப்பில் பங்­கு­கொண்­டி­ருந்த மத்­திய கிழக்கு நாடு­களின் தூது­வர்கள் பலஸ்தீன் மற்றும் காஸா மீது ஜனா­தி­பதி வழங்­கி­வரும் ஒத்­து­ழைப்­புக்கு நன்றி தெரி­வித்­தனர்.

இச்­சந்­திப்பில் இலங்­கை­கக்­கான பலஸ்­தீன தூது­வரின் தலை­மையில் லிபியா, ஈரான், குவைத், ஓமான், சவூதி அரே­பியா, ஈராக், எகிப்து, கட்டார், ஐக்­கிய அரபு இராச்­சியம் ஆகிய நாடு­களின் தூது­வர்கள் பங்­கு­கொண்­டி­ருந்­தனர்.
இலங்­கையின் சார்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க, வெளி­நாட்டு அமைச்சின் செய­லாளர் அருணி விஜே­வர்­தன, ஜனா­தி­ப­தியின் வெளி­நாட்டு அலு­வல்கள் பணிப்­பாளர் தினுக் கொலம்­பகே, ஜனா­தி­ப­தியின் ஊடக பிரிவின் பணிப்­பாளர் நாயகம் தனுஷ்க ராம­நா­யக்க ஆகியோர் உட்­பட மேலும் பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல்
ரணில் எந்தப் பக்கம்?
பலஸ்தீன் – இஸ்ரேல் நெருக்­கடி நிலைமை நூறு நாட்­க­ளையும் கடந்து தொடர்­கி­றது. காஸாவில் தினமும் இனப்­ப­டு­கொ­லைகள் நடந்­தே­று­கின்­றன. ஆயி­ரக்­க­ணக்கில் பெண்கள், குழந்­தைகள் என கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

மத்­திய கிழக்கு நாடு­களின் உத­வி­க­ளையும், வேலை­வாய்ப்­பு­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அரபு நாடு­க­ளி­னது பகை­மையை தவிர்த்துக் கொள்­வ­தற்­கா­கவே கொழும்பில் அவ­ச­ர­மாக அரபு நாடு­களின் தூது­வர்­களை சந்­தித்­தி­ருக்­கிறார். ஆனால் அவர் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தொடர்பில் அளித்­துள்ள விளக்­கங்கள் தெளி­வா­ன­தாக இல்லை.

நாட்டில் பலத்த எதிர்ப்­புகள் வெளி­யிடப்பட்டுள்ள நிலையில் செங்­கடல் பாது­காப்­புக்­காக இலங்கை கடற்­படை கப்பல் அனுப்பி வைக்­கப்­ப­டு­வது இஸ்­ரேலை ஆத­ரிப்­ப­தா­கவே தெரி­கி­றது. செங்­கடல் பாது­காப்­புக்­காக மாதம் 500 மில்­லியன் ரூபா செலவு செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. நாட்டில் பொரு­ளா­தார பின்­ன­டைவு, சுகா­தார துறையில் சீர்­கே­டுகள் மற்றும் பொது மக்கள் வாழ்­வ­தற்­காக நடத்­திக்­கொண்­டி­ருக்கும் போராட்டம் என்­ப­ன­வற்­றுக்கு மத்­தியில் இத்­த­கைய பெரும் செல­வினம் அவ­சியம் தானா? என்று வினவத் தோன்­று­கி­றது.

எமது நாடு அணி­சேரா வெளி­நாட்டுக் கொள்­கைளை பின்­பற்றும் நாடு. மத்­திய கிழக்கு நாடு­களின் உற­வு­களைப் பேணி­வரும் இலங்கை அணி­சேரா கொள்­கை­யி­லி­ருந்தும் பிறழ்ந்து இஸ்­ரேலின் பக்கம் சாய்ந்து வரு­வது நாட்டின் நன்­மையை நிச்­சயம் பாதிப்­புக்­குள்­ளாக்கும்.

மேலும் இலங்கை 10 ஆயிரம் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப தீர்மானித்திருக்கிறது. இந்த எண்ணிக்கையில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிர்மாண மற்றும் விவசாய பண்ணைகளில் இலங்கை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். அத்தோடு இஸ்ரேலில் மோதல் காணப்படும் இடையக வலயங்களில் இவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமை நிச்சயம் இலங்கை மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

அத்தோடு செங்கடலுக்கு இலங்கை கடற்படை அனுப்பி வைக்கப்படுவது பூகோள அரசியல்சார் ஆயுதமோதலொன்றுக்குள் தள்ளப்படுவதற்கு காரணமாய் அமைந்துவிடலாம்.

ஜனாதிபதியின் இவ்வாறான நகர்வுகள் மத்தியகிழக்கு நாடுகளுடனான உறவில் விரிசல்களை ஏற்படுத்தலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.