மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட வேண்டும்

காஸிமிய்யா முதல்வர் அப்துல்லாஹ் ஆலிம் கோரிக்கை

0 90

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பாட­சா­லை­களில் இஸ்லாம் மத பாடம் போதிப்­ப­தற்கு மெள­லவி ஆசி­ரி­யர்கள் இல்­லா­தி­ருக்­கி­றார்கள். நீண்­ட­ கா­ல­மாக மெள­லவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டா­மையே இதற்குக் காரணம். எமது முஸ்லிம் அர­சியல் தலைவர்கள் இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யிட்டு தாம­தி­யாது மெள­லவி ஆசி­ரியர் நிய­ம­னங்­களைப் பெற்றுத் தர வேண்டும். ஜனா­தி­ப­தி­யிடம் இது தொடர்பில் கலந்­து­ரை­யாட வேண்டும் என புத்­தளம் காஸி­மிய்யா அரபுக் கல்­லூ­ரியின் முதல்­வரும் புத்­தளம் மாவட்ட ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­வ­ரு­மான அஷ்ஷெய்க் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கோரிக்கை விடுத்தார்.

புத்­தளம் காஸி­மிய்யா அரபுக் கல்­லூ­ரி­யி­லி­ருந்து 2024ஆம் ஆண்­டிற்கு சவூதி மதீனா இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வா­கி­யுள்ள 8 மாண­வர்­களை கெள­ர­விக்கும் நிகழ்வு கல்­லூரியில் இடம்­பெற்­றது. நிகழ்வில் உரை நிகழ்த்­து­கை­யிலேயே அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் இவ்­வாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில்,காஸி­மிய்யா அரபுக் கல்­லூ­ரியின் பாடத்­திட்டம் சவூதி மதீனா இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மா­கவே காஸி­மிய்யா மாண­வர்கள் உயர்­கல்­வி­யினை சவூ­தியில் பெறு­வ­தற்குத் தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள்.

இங்­கி­ருந்து உயர்­கல்­விக்­காக செல்­கின்ற மாண­வர்கள் கல்­லூ­ரியின் பெள­தீக வளங்­களை முன்­னேற்­று­வ­தற்­காக உழைக்க வேண்டும். அத்­தோடு தங்­க­ளது ஆளு­மையை விருத்தி செய்து கொள்­வ­தற்கு மதீ­னாவில் உயர்­கல்வி கற்­கின்ற காலத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் எம்.எச்.எம்.நியாஸ், எக்­ஸலன்ஸ் பாட­சா­லையின் அதிபர் எச்.அஜ்மல், வாமி நிறு­வ­னத்தின் முன்னாள் இலங்­கைக்­கான ஸ்தாபக பணிப்­பாளர் அஷ்ஷெய்க் ஹிப்சுர்­ரஹ்மான் புஹாரி, பஹன மீடி­யாவின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் முஜீப் ஸாலிஹ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் இறுதியில் மதீனா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.