சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல்

இலங்கை பலஸ்தீன் விடுதலை இயக்கம் பாராட்டு

0 79

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இஸ்ரேல் காஸாவில் மேற்­கொண்டு வரும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொ­லை­க­ளுக்கு எதி­ரா­கவும், அந்­நாட்­டுக்கு எதி­ராகவும் உரிய சர்­வ­தேச சட்ட நட­வ­டிக்­கை­களை மெற்­கொள்­ளு­மாறும் தென் ஆபி­ரிக்க அரசு சர்­வ­தேச நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­துள்­ள­மையை இலங்கை பலஸ்தீன் விடு­தலை இயக்கம் பாராட்­டி­யுள்­ள­துடன் நன்­றி­களைத் தெரி­வித்­துள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை பலஸ்தீன் விடு­தலை இயக்­கத்­தினர் கொழும்­பி­லுள்ள தென்­னா­பி­ரிக்க உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்­துக்கு விஜயம் செய்து தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு தங்கள் நன்­றி­களைத் தெரி­வித்­த­துடன் பிரதி உயர்ஸ்­தா­னி­க­ரிடம் கடித­மொன்­றி­னையும் கைய­ளித்­தனர். நிகழ்வில் இலங்­கைக்­கான பலஸ்தீன் தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா சயிட்டும் கலந்து கொண்­டி­ருந்தார்.

கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, நீதியைப் பெற்றுத் தரு­வ­தற்­காக தென்­னா­பி­ரிக்கா முன்­வந்­துள்­ள­மையை இலங்கை மக்கள் பாராட்­டு­கின்­றனர். பலஸ்­தீ­னர்­களின் மீதான படு­கொ­லைகள், அவர்­க­ளது வாழ்­வி­டங்கள் மற்றும் வாழ்­வ­தற்­கான சூழ்­நி­லை­யினை அழித்­துள்­ளமை, பலஸ்­தீ­னர்­களின் பொரு­ளா­தார வளங்கள், கலா­சா­ரங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளமை என்­பன இஸ்­ரேலின் சட்ட விரோத செயல்­க­ளாகும்.

இஸ்ரேல் அமெ­ரிக்கா, ஐக்­கிய இராச்­சியம் மற்றும் ஐரோப்­பிய யூனியன் நாடு­களின் ஒத்­து­ழைப்­புடன் இவற்றை மேற்­கொண்டு வரு­கி­றது.
இந்தப் படு­கொ­லைகள் ஒரு நாள் அல்­லது வாரம் அல்ல. நான்கு மாதங்­க­ளாகத் தொடர்­கின்­றன. முழு உல­கமும் பார்த்­தி­ருக்க இந்த அநி­யா­யங்கள் தொடர்­கின்­றன.

பலம் பொருந்­திய மேற்­கு­லக நாடு­களின் ஆத­ர­வுடன் இந்த படு­கொ­லைகள் தொடர்­வ­துடன் இதற்­காக அந்­நா­டுகள் நிதி­யு­தவி, இரா­ணுவ உதவி மற்றும் இரா­ஜ­தந்­திர உத­வி­களை வழங்கி வரு­கின்­றன.
ஐக்­கிய நாடுகள், ஜெனீவா பிர­க­டனம், சர்­வ­தேச நீதிக் கட்­ட­மைப்பு அனைத்தும் மீறப்­பட்­டுள்­ளன.

அந்­நியர் ஆட்­சியை நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேற்றி தென்­னா­பி­ரிக்கா அங்கு தேசிய நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்தி ஆட்­சி­ய­மைத்­துள்­ளமை பெரும் வர­வேற்பைப் பெற்­றது.

சியோ­னிய இஸ்­ரேலின் ஆதிக்­கத்­தினால் பலஸ்­தீன மக்கள் தமது சொந்த நிலத்தில் நீண்ட கால­மாக இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­கி­றார்கள்.
தென்­ஆ­பி­ரிக்­காவில் போன்று இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் மக்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

தென்­னா­பி­ரிக்­காவின் முயற்­சி­யினால் இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்­சி­னைக்கு நீதி மூலம் தீர்வு கிட்ட வேண்டும். மேலும் உயிர்ப்­ப­லிகள், அழி­வுகள் இடம்­பெ­று­வ­தற்கு முன்பு தென்­னா­பி­ரிக்கா சர்­வ­தேச நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பலஸ்தீன் விடு­த­லைக்­கான இயக்­கத்தின் உறுப்­பினர் டெஸி தஹ­லானை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­யது. அவர் தெரி­விக்­கையில், ‘இஸ்ரேல் பலஸ்­தீ­னர்கள் மீது மேற்­கொண்­டு­வரும் தொட­ரான தாக்­கு­தல்கள் இனப்­ப­டு­கொ­லைகள் வாழ்­வி­டங்­களை நிர்­மூ­ல­மாக்­கி­ய­மைக்கு எதி­ராக இஸ்ரேலுக்கு எதிராக எந்­த­வொரு நாடும் களத்தில் இறங்­க­வில்லை. தென்­னா­பி­ரிக்கா மாத்­தி­ரமே சர்வதேச நீதிமன்றினை நாடியுள்ளது.

தென்னாபிரிக்கா இஸ்ரேலிலிருந்த தனது தூதுவராலயத்தை மூடியது. தென்னாபிரிக்காவிலிருந்த இஸ்ரேல் தூதுவரை திருப்பியனுப்பியது.
எந்தவோர் அச்சுறுத்தலுக்கும் பயப்படாது தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேலுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளமை பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.