அம்பாறையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0 85
  • சேனநாயக்க சமுத்திர வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
  • தாழ்நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன

ஏ.எல்.எம்.ஷினாஸ்

அம்­பாறை மாவட்­டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக மாவட்­டத்தின் தாழ்­நில பிர­தே­சங்­களில் வெள்­ளநீர் பெருக்­கெ­டுத்து வரு­கின்­றன. சேன­நா­யக்க சமுத்­தி­ரத்தின் நீர்­மட்டம் 105 அடிக்கு மேல் உயர்­வ­டைந்­ததால் 5 வான் கத­வுகள் திறக்­கப்­பட்­ட­தாக மாவட்ட நீர்ப்­பா­சன திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

சேன­நா­யக்க சமுத்­தி­ரத்தின் வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டதை அடுத்து அதன் கீழ் உள்ள கல்­லோயா குடி­யேற்ற விவ­சாய கிரா­மங்­களில் வெள்­ளநீர் பெருக்­கெ­டுத்து வரு­கி­றது. இதனால் விவ­சா­யிகள் செய்­வதறி­யாது சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். மாவட்­டத்தின் தாழ்­நில கரை­யோர பிர­தே­சங்­க­ளான அக்­க­ரைப்­பற்று, இறக்­காமம், வரிப்­பத்­தான்­சேனை, பொத்­துவில், திருக்­கோயில், ஆலை­ய­டி­வேம்பு, அட்­டா­ளைச்­சேனை, ஒலுவில், பால­முனை, நிந்­தவூர், காரை­தீவு, கல்­முனை, பாண்­டி­ருப்பு, மரு­த­முனை, பெரி­ய­நீ­லா­வணை, நாவி­தன்­வெளி போன்ற குடி­யி­ருப்பு பிர­தே­சங்கள் மற்றும் வயல் நிலங்­களில் வெள்­ளநீர் நிரம்­பி­யுள்­ளன.

அம்­பாறை – காரை­தீவை இணைக்கும் பிர­தான வீதியில் மாவ­டிப்­பள்­ளியை அண்­மித்த பிர­தான வீதி மற்றும் அம்­பாறை – சம்­மாந்­துறை பிர­தான வீதியின் வளத்­தாப்­பிட்டி பிர­தே­சத்தை குறுக்­க­றுக்கும் பிர­தான வீதி ஊடாக வெள்­ளநீர் பாய்ந்து ஓடு­வ­தனால் குறித்த வீதி­யு­டான போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கல்­முனை – நாவி­தன்­வெ­ளியை இணைக்கும் பிர­தான வீதியின் கிட்­டங்கி பாலத்­திற்கு மேலால் வெள்­ளநீர் பாய்ந்­தோ­டு­வ­தனால் குறித்த வீதி ஊடான போக்­கு­வ­ரத்து தடை­பட்­டுள்­ள­துடன், வீதியை பயன்­ப­டுத்தும் பொது­மக்கள் பல்­வேறு அசெள­க­ரி­யங்களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். இதே­வேளை சொறிக்­கல்­முனை – சம்­மாந்­துறை பிர­தான வீதி, நாவி­தன்­வெளி – வெல்­லா­வெ­ளியை இணைக்கும் பிர­தான பாதை­யிலும் வெள்­ளநீர் பாய்ந்து ஓடு­வ­தனால் மக்கள் தமது அன்­றாட பணி­களை மேற்­கொள்­வதில் சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

மாவட்ட செய­லாளர்:
அம்­பாறை மாவட்­டத்தின் சேன­நா­யக்க சமுத்­திர நீர்­மட்டம் உயர்­வ­டைந்­துள்­ளதால் ஐந்து வான் கத­வு­களை சமுத்­தி­ரத்தின் தாழ்­நிலப் பிர­தே­சங்­களில் வாழும் மக்­க­ளுக்கு பாதிப்பு இல்­லாத வகையில் திறந்­துள்ளோம். இதனால் அம்­பாறை, தமன அக்­க­ரைப்­பற்று, அட்­டா­ளைச்­சேனை, காரை­தீவு போன்ற தாழ்­நிலை பிர­தே­சத்தில் வாழும் பொது­மக்­க­ளுக்கு பாதிப்­புகள் ஏற்­படும் இடத்து அவர்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களை செய்­வ­தற்கு மாவட்ட செய­ல­கத்தின் ஊடாக முன் ஆயத்த நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. வெள்­ளநீர் பெருக்­கெ­டுத்து ஓடு­வதால் ஆறுகள் குளங்­களில் மீன் பிடிப்­பதை தவிர்த்துக் கொள்­ளு­மாறு கேட்டுக் கொள்­கிறேன் அதே போன்று வெள்ள­நீரில் விளை­யா­டு­வ­தையும் தவிர்த்துக் கொள்­ளு­மாறு சகல பொது­மக்­க­ளையும் கேட்டுக் கொள்­கிறேன் என்று தெரி­வித்­துள்ளார்.

அனர்த்த மத்­திய நிலையம்:
தற்­போது அம்­பாறை மாவட்­டத்தில் பெய்து வரும் அடை­மழை மற்றும் கால­நிலை மாற்­றத்தின் கார­ண­மாக அனர்த்த ஆபத்­தி­லி­ருந்து பொது­மக்­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறோம். தாழ்­நிலப் பிர­தே­சங்­களில் வாழும் பொது­மக்கள் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறு கேட்டுக் கொள்­வ­துடன் தேவை­யான அனைத்து முன்­னேற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அம்­பாறை மாவட்­டத்தில் தற்­போது பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக இது­வரை 5848 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 2749 குடும்­பங்கள் பாது­காப்­பான இடங்­களை நோக்கி நகர்ந்­துள்­ளனர். 88 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­துடன் சம்­மாந்­துறை பிர­தே­சத்தில் கடந்த 31 ஆம் திகதி வீசிய மினி­சூ­றா­வளி மற்றும் கன­மழை கார­ண­மாக 4 நபர்கள் காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர் என்று தெரி­வித்தார்

தொடர்ந்து மாவட்­டத்தின் பல்­வேறு பிர­தே­சங்­களில் கால­நிலை மாற்றம் காணப்­ப­டு­வ­தோடு மாலை வேைளகளில் இடி­யுடன் கூடிய மழை பெய்து வரு­கி­றது. சம்­மாந்­துறை அல்- அஸ்றக் மகா வித்­தி­யா­ல­யத்தில் பாரிய மரம் குடை­சாய்ந்து விழுந்­த­தனால் கட்­ட­டங்­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ளது.
பொத்­துவில் பிர­தே­சத்தில் அதி­கூ­டிய 101 மில்லி மீட்டர் மழை (2) பதி­வா­கி­யுள்­ளது. பிர­தே­சத்தின் பல்­வேறு தாழ்­நி­லங்கள் ஊடாக வெள்­ளநீர் பெருக்­கெ­டுத்­துள்­ளதால் முத­லைகள், பாம்­புகள் போன்­றன ஆற்று நீர் ஊடாக பிர­தே­சங்­க­ளுக்குள் ஊடு­ருவும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் பொது­மக்கள் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

சேன­நா­யக்க சமுத்­திர வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டதை அடுத்து ரம்­புக்­கன நீர்த்­தேக்­கத்தின் வான் கத­வு­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் அல்­பிட்­டிய, விபுல போன்ற பிர­தே­சங்­க­ளிலும் வெள்­ளநீர் வழிந்­தோ­டு­கி­றது. இதனால் பொது­மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். இதே­வேளை மாவட்­டத்தின் கரை­யோர பிர­தே­சங்­களில் உள்ள மீன­வர்கள் கட­லுக்குச் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. கடல் கொந்­த­ளிப்­போடு காணப்­ப­டு­வ­தனால் வள்­ளங்கள், தோணிகள் மற்றும் மீன்­பிடி உப­க­ர­ணங்கள் என்­பன கரையில் இருந்து நீண்ட தூரத்­திற்கு அப்பால் பாது­காப்­பாக தரித்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் மீன்­பிடி தொழில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மீன­வர்கள் தெரி­விக்­கின்­றனர். கரை­யோ­ரத்தின் பல பிர­தே­சங்கள் கடல் அலை­க­ளினால் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளது. சில பிர­தே­சங்­களில் கட்­டட இடி­பா­டுகள் நிகழ்ந்­துள்­ள­துடன் கரை­யோ­ரத்தில் நின்ற தென்னை மரங்கள் கட­லுக்குள் விழுந்­துள்­ளன.

கடலை நோக்கி பல்­வேறு முகத்­து­வா­ரங்கள் ஊடாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் கடற்கரை பிரதேசங்கள் எங்கும் பிளாஸ்டிக் போத்தல்கள், ஆற்றுவாழைகள் என இதர கழிவு பொருட்களால் கரையோரம் சேதமடைந்துள்ளன. அதிகளவிலான பாம்புகளின் நடமாட்டமும் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வெள்ளநீர் தேங்கி கிடப்பதால் டெங்கு உட்பட பல்வேறு நோய்களை பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனினும் பல பிரதேசங்களில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் ஊடாக வெள்ளநீர் வழிந்தோடும் வடிகான்கள் துப்புரவு செய்யப்படும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.