காஸாவில் 22 ஆயிரம் பேர் பலி 2024 இலும் தொடரும் மோதல்

0 101

ஏ.ஆர்.ஏ.பரீல்

இஸ்­ரே­லுக்கும், ஹமாஸ் குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான போர் கடந்த அக்­டோபர் மாதம் 7ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இஸ்­ரேலின் யுத்த விமா­னங்கள், யுத்த டாங்­கிகள், பீரங்­கிகள் நடாத்­தி­வரும் தாக்­கு­தல்கள் கார­ண­மாக இது­வரை காஸா பிராந்­தி­யத்தில் ஏற்­பட்­டுள்ள அழி­வுகள் சரி­யாக மதிப்­பி­டப்­ப­ட­ முடி­யா­த­வை­யாக மாறி­யுள்­ள­ன.

இஸ்­ரேலின் காட்டுமிராண்­டித்த தன­மான தாக்­கு­தல்கள் சர்­வ­தேச நாடு­க­ளினால் கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளன. என்­றாலும் இஸ்ரேல் எதற்கும் கட்­டுப்­ப­டாமல் தனது இலக்கை எய்­து­வ­தற்கு முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கி­றது.
யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து இது­வரை காஸாவில் 21800 பலஸ்­தீ­னர்கள் இஸ்­ரே­லினால் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இந்த எண்­ணிக்­கையை ஹமாஸின் சுகா­தார அமைச்சு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இது­வரை 56,165 பலஸ்­தீ­னர்கள் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தா­கவும் ஹமாஸின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

திறந்த வெளியில் வாழும் அவலம்
பெரும் எண்­ணிக்­கை­யி­லான இடம்­பெ­யர்ந்த காஸா பிராந்­திய மக்கள் திறந்­த­வெ­ளியில் பூங்­காக்­களில் வாழ்ந்­து­கொண்­டி­ருப்­ப­தாக பலஸ்தீன் அக­தி­க­ளுக்­கான ஐ.நா. வின் நிவா­ரண முக­வ­ர­மைப்­பு தெரி­வித்­துள்­ளது.

சுமார் ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் ரபா எல்­லைக்­கு இடம்பெயர்ந்­துள்­ளனர். காஸாவின் தென்­ப­கு­தியில் எகிப்து எல்­லைக்­க­ரு­கிலேயே ரபா அமைந்­துள்­ளது. குறிப்­பிட்ட அளவு உத­வி­களை வழங்­கு­வ­தற்கே பலஸ்தீன் அக­தி­க­ளுக்­கான ஐ.நா.வின் நிவா­ரண முக­வ­ர­மைப்­புக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது என அதன் அதி­காரி டவுமா தெரி­வித்­துள்ளார். ஆனால் காஸாவின் மனி­தா­பி­மான தேவைகள் பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளன எனவும் அவர் சுட்டிக் காட்­டி­யுள்ளார். இந்தப் பகு­தி­க­ளுக்கு எமது அதி­கா­ரிகள் செல்­வது கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை மனி­தா­பி­மான நிவா­ரண உத­விகள் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் உத­விகள் விநி­யோ­கத்­திலேயே பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன என இஸ்ரேல் தெரி­வித்­துள்­ளது.

இஸ்ரேல் காஸா மீது யுத்­தத்தை ஆரம்­பித்­த­தி­லி­ருந்து 41 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 10 கிலோ மீட்டர் அக­ல­மான பரப்­புக்குள் மனி­தா­பி­மான உத­விகள் வழங்­கப்­ப­டு­வதை இஸ்ரேல் மிகவும் இறுக்­க­மாக கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளது.
பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக இஸ்ரேல் தனது இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை முதலில் காஸாவின் வடக்குப் பகு­தி­யி­லேயே பலப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் அண்­மையில் தென் காஸா பகு­தியின் கான் யூனிஸ் மீது தனது தாக்­குதல் நட­வ­டிக்­கை­களை அதி­க­ரித்­துள்­ளது. கான்­யூனிஸ் பகு­தியை ஹமாஸின் பலம்­வாய்ந்த தள­மாகக் கரு­தியே அங்கு தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

யுத்தம் பல மாதங்­க­ளுக்குத் தொடரும்
இஸ்ரேல் அனைத்து முனை­க­ளி­லி­ருந்தும் தாக்­கு­தல்­களைத் தொடரும் என இஸ்ரேல் பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யாகு தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் தோன்றி தெரி­வித்­துள்ளார். யுத்தம் மேலும் பல மாதங்­க­ளுக்குத் தொடரும் என இஸ்­ரேலின் இரா­ணுவத் தள­பதி தெரி­வித்­துள்ள கருத்­தினை இஸ்­ரே­லியப் பிர­தமரும் உறுதி செய்­துள்ளார்.

எங்­க­ளது பணயக் கைதி­களை ஹமா­ஸி­ட­மி­ருந்து விடு­தலை செய்து கொள்ளும் வரையும் ஹமா­ஸினை இல்­லா­தொ­ழிக்கும் வரையும் யுத்தம் தொடரும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் நக­ரத்தில் பாது­காப்­பினை எதிர்­பார்க்­கி­றார்கள் என பலஸ்­தீன அக­தி­க­ளுக்­கான ஐ.நா.வின் நிவா­ரண ஏஜன்­சியின் காஸா­வுக்­கான பணிப்­பாளர் டொம் வைட் ரபா நக­ரி­லி­ருந்து தெரி­வித்­துள்ளார். காஸா அக­திகள் பாட­சா­லை­களில் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு இடம் பெயர்­வ­தற்கு முடி­யா­துள்­ளது எனவும் அவர் கூறி­யுள்ளார்.
ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தங்­கு­மி­ட­மின்றி திறந்த வெளியில் பொலித்தீன் கூடா­ரங்­களில் தங்­கி­யி­ருக்­கி­றார்கள் எனவும் அவர் கூறினார். சன நெருக்­கடி பாரிய பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது.

யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வரை 1.9 மில்­லியன் மக்கள் காஸா பிராந்­தி­ய­மெங்கும் இடம் பெயர்ந்­துள்­ளனர். தற்­போது ரபா பகு­தியை நோக்­கியே மக்கள் இடம்­பெ­யர்­கின்­றனர். காஸாவின் கான்­யூனிஸ் மற்றும் பல பகு­தி­களில் இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையில் கடு­மை­யான யுத்தம் இடம்­பெற்று வரு­கின்­ற­மையே ரபாவை நோக்கி மக்கள் இடம்­பெ­யர்­கின்­ற­மைக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது. நுசைரத் அகதி முகாம் அல்­பு­ரைஜ்ஜிக் மக்­ஹாசி பகு­தி­க­ளிலும் மோதல்கள் ஆரம்­பித்­துள்­ளன.

நோய்த்­தொற்று அதி­க­ரிப்பு
இடம்­பெ­யர்ந்­துள்ள காஸா மக்கள் மத்­தியில் நோய்த் தொற்­றுகள் அதி­க­ரிக்­கலாம் என உலக சுகா­தார ஸ்தாபனம் (WHO) எச்­ச­ரித்­துள்­ளது. கடந்த அக்­டோபர் மாத மத்­தியி­லி­ருந்து டிசம்பர் மத்­தி ­வரை காஸா­வெங்கும் நோய்த் தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் தலைவர் டாக்டர் டெட்ரொஸ் அட்­நொம் செப்­பிரி யஸ்சுஸ் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா.வின் புக­லி­டங்­களில் தங்­கி­யி­ருக்கும் மக்­களில் 136400 பேர் வயிற்றுப் போக்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 55,400 பேர் பேன் மற்றும் சிரங்­குக்கு உள்­ளா­ன­வர்­க­ளா­கவும் 126 பேர் மூளை மற்­றும் தண்­டு­வடம் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­க­ளா­கவும் மாறி­யி­ருப்­ப­தாக உலக சுகா­ராத ஸ்தாப­னத்தின் தலைவர் தெரி­வித்­துள்ளார்.

தொடரும் உயிர்­ பலிகள்
மத்­திய காஸா பிராந்­தி­யத்தில் இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தல்­களில் கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்பு 24 மணி நேரத்தில் சுமார் 64 பேர் பலி­யா­ன­துடன் 186 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இதே­வேளை இஸ்­ரே­லிய பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யாகு காஸா­வுக்கு எதி­ரான போரை ஹமாஸ் குழு­வி­னரை அழித்து வெற்றி கொள்ளும் வரை தொட­ரப்­போ­வ­தாக அறி­வித்­துள்ளார். இந்­நி­லையில் இஸ்ரேல் அமைச்­ச­ரவை ஹமாஸ் குழு­வி­னரால் பணயக் கைதி­க­ளாகப் பிடித்து வைத்­துள்ள இஸ்­ரே­லி­யர்­களை எவ்­வாறு விடு­விப்­பது என்­பது குறித்து ஒன்று கூடி ஆரா­ய­வுள்­ளது.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடனின் அர­சாங்­கமும் இஸ்ரேல் பிர­த­மரின் நிலைப்­பாட்­டி­னையே கொண்­டுள்­ளது. இஸ்ரேல் யுத்­தத்தை வெற்றி கொள்­வ­தற்­காக அமெ­ரிக்கா மேலும் ஆயு­தங்­களை விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. அமெ­ரிக்க ஜனா­தி­பதி காஸா மீதான தாக்­கு­த­லுக்கு தொடர்ந்தும் ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றமை தேர்­தலில் அவ­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம் என அர­சியல் அவ­தா­னிகள் தெரி­வித்­துள்­ளனர்.

அர­சியல் பகுப்­பாய்­வா­ள­ரான அடெல் அப்துல் கபார் தெரி­விக்­கையில், ‘ஜோ பைடன் மக்கள் மத்­தி­யி­லான பிர­ப­லத்தை இழந்து வரு­கிறார். கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­புகள் அவர் ஜன­நா­யக கட்­சியைச் சேர்ந்த இளம் வாக்­கா­ளர்கள் மத்­தியில் ஆத­ரவை இழந்து வரு­வதைக் காண்­பிப்­ப­தாக உள்­ளது’ என்று கூறி­யுள்ளார்.

இஸ்ரேல் தாக்­கு­தல்­களில் காஸா நகரில் ஒமர் அல்­முக்தார் வீதி­யி­லுள்ள ஹம்மாம் அல் சம்ரா என்ற 800 ஆண்­டுகள் பழ­மை­யான வர­லாற்று முக்­கியம் வாய்ந்த ஸ்தல­மொன்று சேத­ம­டைந்­துள்­ளது. காஸாவில் இஸ்­லா­மிய சகாப்­தத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த ஒமர் பள்­ளி­வா­சலும் அழி­வ­டைந்­துள்­ளது.

அத்­தோடு 13 ஆம் நூற்­றாண்டு காலத்தைச் சேர்ந்த அல் பஹா மாளி­கையும் தரைமட்­ட­மா­கி­யுள்­ளது. இம்­மா­ளி­கையில் கிரேக்க ரோமன் மற்றும் இஸ்­லா­மிய சகாப்­தங்­களைச் சேர்ந்த கலைப்­ப­டைப்­புகள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அருங்­காட்­சி­ய­க­மொன்றும் அமைந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

2024 ஆம் ஆண்டில் யுத்தம் தொடர்ந்து நடக்கும்
பலஸ்­தீ­னத்­துக்கு எதி­ரான யுத்­தத்தை 2024 ஆம் ஆண்­டிலும் தொடர்ந்து நடத்­து­வதற்கும் அதற்­கேற்றவாறு இரா­ணு­வத்­தி­னரை பணியில் அமர்த்­து­வதற்கும் இஸ்ரேல் இரா­ணுவம் ஒழுங்­கு­ப­டுத்­த­ப்ப­ட­வுள்­ளது என இஸ்ரேல் பாது­காப்பு படையின் பேச்­சாளர் டானியல் ஹகாரி தெரி­வித்­துள்ளார்.

இதற்­க­மை­வாக தற்­போது கட­மை­யி­லுள்ள ரிசர்வ் இரா­ணு­வத்­தினர் ஒரு தொகை­யி­னர் திருப்­பி­ய­ழைக்­கப்­ப­டு­வ­துடன் அவர்கள் மீள ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு யுத்த முனை­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

காஸாவில் உள்ள இஸ்ரேல் ரிசர்வ் இரா­ணு­வத்­தினர் விரைவில் இவ்­வாரம் அங்­கி­ருந்தும் வெளி­யே­று­வார்கள். ெவளி­யேறும் அவர்கள் ஊக்­க­ம­ளிக்­கப்­பட்டு சுறு­சு­றுப்­பாக போர் புரிவ­தற்கு சக்­தி­ய­ளிக்­கப்­பட்டு மீண்டும் காஸா­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளார்கள் என்றும் இஸ்ரேல் அறி­வித்­துள்­ளது.
இத­னி­டையே ஹமாஸின் அர­சியல் பிரிவின் பிரதித் தலைவர் சாலிஹ் அல் அரூரி இஸ்­ரேலின் ஆளில்லா விமானத் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டுள்ளார்.

 

லெப­னானின் பெய்­ரூத் நகரில் அமை­ந்துள்ள ஹமாஸ் அலு­வ­ல­கத்தின் மீது நடாத்­தப்­பட்ட தாக்­கு­த­லி­­லேயே இவர் ஏழு ஹமாஸ் உறுப்­பி­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். லெனா­னானில் ஹிஸ்­புல்லா இயக்­கத்தின் கோட்­டை­யாகக் கரு­தப்­படும் பகு­தி­யி­லேயே இத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.
இத­னை­ய­டுத்து ஹமாஸ் மற்றும் ஹிஸ்­புல்லாஹ் இயக்கங்கள் இணைந்து இஸ்­ரே­லுக்கு எதி­ரான பதி­ல­டியைத் தீவி­ரப்­ப­டுத்தக் கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

57 வய­தாக சாலிஹ் அல் அரூ­ரி ஹமாஸின் ஆயுதப் பிரி­வான கஸ்­ஸஸாம் படை­ய­ணியின் ஸ்தா­ப­கர்­களுள் ஒரு­வராவார். இவர் 15 வரு­டங்கள் இஸ்­ரே­லினால் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்தார். இதன் பின்னர் பலஸ்­தீ­னி­லி­ருந்து வெளி­யேறி லெப­னானில் வசித்து வந்தார். இவரை தாம் இலக்கு வைத்­துள்­ள­தாக ஒக்டோபர் 7 ஆம் திக­திக்கு முன்னரே இஸ்ரேல் பிர­தமர் நெதன்­யாஹு அறி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இத் தாக்­கு­தலை தாம் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­த­ாக லெப­னானின் இடைக்­கால அரசின் பிர­தமர் நஜீப் மிகா­தி தெரி­வித்­துள்ளார். ‘‘இது இஸ்­ரேலின் புதிய குற்றம்’’ என்றும் அவர் சாடி­யுள்­ளார்.

லெப­னானின் தலை­நகர் மீது நடாத்­தப்­பட்ட இந்தத் தாக்­கு­த­லுக்கு கடும் பதி­லடி வழங்­கப்­படும் என ஹிஸ்­புல்லாஹ் இயக்கம் எச்­ச­ரித்­துள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.