ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூடப்படின் எமது எதிர்காலம் என்னவாகும்?

இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் கவலை

0 115

நா.தனுஜா

இலங்­கை­யி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்தை மூடு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக நாட்­டி­லுள்ள ரோஹிங்­கிய அக­திகள் நேற்று முன்­தினம் செவ்­வாய்­க்கி­ழமை கொழும்­பி­லுள்ள அவ்­வ­லு­வ­ல­கத்­துக்கு முன்­பாகக் கவ­ன­யீர்ப்­புப்­போ­ராட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தனர்.

அது­மாத்­தி­ர­மன்றி பிறி­தொரு நாட்டில் தமக்­கு­ரிய நிரந்­தர தீர்வைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு உத­வு­மாறும், இது­வரை காலமும் தமக்கு வழங்­கப்­பட்­டு­வந்த மாதாந்தக் கொடுப்­ப­னவை நிறுத்­த­வேண்டாம் எனவும் வலி­யு­றுத்தி அவர்கள் ஐக்­கிய நாடுகள் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்­திடம் மக­ஜ­ரொன்­றையும் கைய­ளித்­துள்­ளனர்.

மியன்­மாரில் 2017 ஆம் ஆண்­ட­ளவில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைகள் மற்றும் ‘முஸ்லிம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான இன­வ­ழிப்பு’ என வர்­ணிக்­கப்­படும் படு­கொ­லைகள் போன்­ற­வற்றால் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட ரோஹிங்­கிய அக­திகள், பங்­க­ளா­தே­ஷுக்குச் சென்­றனர். இருப்­பினும் பங்­க­ளாதேஷ் அகதி முகாம்­களின் மிக­மோ­ச­மான நிலை கார­ண­மாக அங்­கி­ருந்து தப்­பிய அக­திகள் இலங்கைக் கடற்­பி­ராந்­தி­யத்­துக்கு அண்­மையில் கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்டு நாட்­டுக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டனர்.
அவர்கள் இலங்­கையில் தற்­கா­லி­க­மாகத் தங்­கு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவர்­க­ளுக்­கு­ரிய மாதாந்த செல­வு­களைப் பூர்த்­தி­செய்­யக்­கூ­டி­ய­வ­கை­யி­லான மாதாந்­தக்­கொ­டுப்­ப­ன­வொன்று கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்­தினால் வழங்­கப்­பட்­டு­வந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் அண்­மையில் அவ்­வ­லு­வ­ல­கத்தை மூடப்­போ­வ­தாக அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து இலங்­கை­யி­லுள்ள ரோஹிங்­கிய அக­திகள் ஏற்­க­னவே கவ­ன­யீர்ப்­புப்­போ­ராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அதன் தொடர்ச்­சி­யாக நேற்று முன்­தினம் (2) முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டத்தில் கலந்­து­கொண்ட அக­திகள், கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­லகம் மூடப்­பட்டால் தமக்கு என்ன நேரு­மெனத் தெரி­ய­வில்லை என்று கவலை வெளி­யிட்­டனர்.

‘எமக்­கான உணவு, தங்­கு­மிடம், உடைகள், தொடர்­பாடல், போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யத்­தே­வை­களைப் பூர்த்­தி­செய்­து­கொள்­வ­தற்கு அவ­சி­ய­மான மாதாந்­தக்­கொ­டுப்­ப­னவை ஐ.நா அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­லகம் வழங்­கி­வந்­தது’ என்று சுட்­டிக்­காட்­டிய அவர்கள், அவ்­வ­லு­வ­லகம் மூடப்­படின் பிறி­தொரு நாட்டில் தாம் குடி­யே­று­வ­தற்­கான வாய்ப்போ அல்­லது தமக்­கான நிரந்­தர தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வாய்ப்போ கேள்­விக்­குள்­ளாகும் எனவும் தெரி­வித்­தனர்.

மேலும் மியன்மார் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தம்மை மீண்டும் அந்­நாட்­டுக்கு அனுப்­பி­வைக்­க­வேண்டும் அல்­லது இலங்கை அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இந்­நாட்டுப் பிர­ஜா­வு­ரி­மையைப் பெற்­றுத்­த­ர­வேண்டும் அல்­லது தாம் புதிய வாழ்வைத் தொடங்­கக்­கூ­டி­ய­வ­கையில் தம்மை மேற்­கு­லக நாடொன்­றுக்கு அனுப்­பி­வைக்­க­வேண்டும் எனவும், இம்­மூன்றில் ஏதே­னு­மொரு தீர்வைப் பெற்­றுத்­த­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் போராட்­டத்தில் ஈடு­பட்ட ரோஹிங்­கிய அக­திகள் வலி­யு­றுத்­தினர். அத்­தோடு இவ்­வி­ட­யங்­களை வலி­யு­றுத்தி ஐ.நா அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலுவலகத்திடம் அவர்கள் மகஜரொன்றையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.