அக்குறணை வெள்ள அனர்த்தங்க­ளை முகாமை செய்ய விசேட பிரி­வு உத­யம்

0 100

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அக்­கு­றணை நகர் தொடர்ச்­சி­யாக எதிர்­கொண்டு வரு­கின்ற வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்­களின் போது களத்தில் உத்­தி­யோ­க­பூர்வ ஒழுங்கில் பணி­யாற்­று­வ­தற்­காக அனர்த்த முகா­மைத்­துவ பிரிவு ஒன்று அக்­கு­ற­ணையில் நிறு­வப்­பட்­டுள்­ளது.

இப்­பி­ரிவு ஆரம்பக் கட்­ட­மாக எதிர்­வரும் ஞாயிற்றுக் கிழமை அக்­கு­றணை நகரை ஊட­றுத்துச் செல்லும் ஆற்­றினை சிர­ம­தான அடிப்­ப­டையில் சுத்தம் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.
வெள்ள அனர்த்­தத்தை முகா­மைத்­துவம் செய்­வது தொடர்­பான ஆரம்­பக்­கட்ட விழிப்­பு­ணர்வு கூட்­டங்கள் அக்­கு­ற­ணையில் ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

அனர்த்த முகா­மைத்­துவ பிரி­வினை நிறுவும் கூட்டம் அண்­மையில் அஸ்னா பள்­ளி­வா­சலில் இடம்­பெற்­றது. இக்­கூட்­டத்தில் அக்­கு­றணை ஜம்­இய்­யத்துல் உலமா, மஸ்­ஜி­துகள் சம்­மே­ளனம், அக்­கு­றணை வர்த்­தகர் சங்கம் ,கலா­சார குழு, முச்­சக்­கர வண்டி சார­திகள் சங்கம், தஃவா அமைப்­புகள் மற்றும் வெள்ளம் ஏற்­ப­டக்­கூ­டிய பிர­தே­சங்­களை அண்­மித்­துள்ள மஸ்­ஜி­துகள் என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

குறிப்­பிட்ட அனர்த்த முகா­மைத்­துவ பிரிவு மூன்று பிர­தான பகு­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக செயற்­ப­ட­வுள்­ளது. இப்­பி­ரிவு முன்­னேற்­பா­டுகள் எதிர்­கொள்ளல் மற்றும் மீள்தல் எனும் மூன்று பிர­தான பகு­தி­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.
மழைக்­கா­லத்தில் ஆற்­றுக்கு வந்து சேர்­கின்ற நீரைக் குறைப்­ப­தற்­கான வழி­காட்­டல்­களை மேற்­கொள்­ளுதல் ,வெள்ள அபாய பகு­தி­க­ளுக்கு முன்­னெச்­ச­ரிக்கை விடுத்தல், நிர்­மாணப் பணி­களை மேற்­கொள்­ப­வர்கள் மற்­றும் சூழலை மாசுப்­ப­டுத்தல் குறித்து பொது மக்­க­ளுக்கு விழிப்புணர்­வூட்டல் போன்ற செயற்­றிட்­டங்கள் முன்­னேற்­பா­டுகள் உப குழு­வி­னூ­டாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

அத்­தோடு வெள்ள அனர்த்­தங்­களின் போது களத்தில் இருந்து வழி­காட்­டல்­களை மேற்­கொள்­ளுதல் உரி­ய­ அ­தி­கா­ரி­க­ளுடன் தொடர்­பு­களை பேணுதல், மாற்று வீதி ஒழுங்­கு­களை வகுத்து நெறிப்­ப­டுத்தல், நோயா­ளர்கள் மற்றும் அவ­சர நிலை­மை­க­ளுக்குத் தேவை­யான ஒழுங்­கு­களை மேற்­கொள்­ளுதல் போன்ற பணிகள் எதிர்­கொள்ளல் உப குழு­வினால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
மேலும் துப்­பு­ரவுப் பணி­களை மேற்­கொள்­ளுதல், தொண்டர் படை­ய­ணியை வழி­காட்­டுதல் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உணவு, குடி நீர் வச­தி­களை ஏற்­பாடு செய்தல் மற்றும் இழப்­புகள் பற்றி தக­வல்­களைத் திரட்டி உரிய நிறு­வ­னங்­க­ளுக்கு பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்தல் போன்ற நட­வ­டிக்­கை­களை ‘மீள்தல்’ உப­கு­ழு­வி­னூ­டாக முன்­னெ­டுக்கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

பின்­வ­ருவோர் அனர்த்த முகா­மைத்­துவ பிரிவின் நிர்­வா­கி­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். தலைவர்:எம். வை.எம்.ரம்ஸான், உப தலை­வர்கள்: அஷ்ஷெய்க் ஏ.எம்.சியாம், ஜே.பைரூஸ் முஹம்மத், செயலாளர்: ஏ.சி.எம்.பஸ்லான் உப செயலாளர்: நஸ்லான் ரஷீத், பொருளாளர்: எம்.எஸ்.எம்.ரஸ்லான். ‘முன்னேற்பாடுகள்’ உபகுழு பொறுப்பாளர்: அஷ்ஷெய்க் வை.எம்.மாஹிர், எதிர்கொள்ளல் உபகுழு பொறுப்பாளர்: ரியாஸ் ஷஹீத், ‘மீள்தல்’ உப குழு பொறுப்பாளர்: எம்.ரீ.அரூஸ் முஹம்மத் என்போராவர்.

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.