யார் குற்றம்?

0 125

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

முன்னுரை

கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கும் மேலாக பலஸ்­தீனம் அழி­கி­றது. ஆயி­ரக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்கள் பெண்கள், குழந்­தைகள், வயோ­திபர், நோயா­ளிகள் என்ற பேத­மின்றி இஸ்­ர­வேலின் கொலை­வெ­றிக்குப் பலி­யா­கின்­றனர். அதன் கல்­விக்­கூ­டங்கள், வைத்­தி­ய­சா­லைகள், வணக்­கஸ்­த­லங்கள், வீடுகள், பொது­நிர்­வாக அலு­வ­ல­கங்கள் யாவுமே இஸ்­ர­வேலின் குண்­டு­வீச்­சுக்கு ஆளாகி குறிப்­பாக காசா நகரும் அதன் சுற்றுப் பிர­தே­சமும் ஒரு மயா­ன­பூ­மி­யாக மாறி­விட்­டது. அமெ­ரிக்க ஆயு­தங்­க­ளு­டனும் மந்­திர ஆலோ­ச­னை­யு­டனும் மேற்­கு­நாட்டுச் செய்தி நிறு­வ­னங்­களின்; திட்­ட­மிட்ட இஸ்­ரவேல் சார்­பான பிரச்­சா­ரத்­து­டனும், அவை எல்­லா­வற்­றிற்கும் மேலாக வளை­குடா நாடு­களின் கேவ­ல­மான மௌனத்­து­டனும் பலஸ்­தீனம் இஸ்­ர­வேலின் பிடிக்குள் சிக்கித் தவிக்­கின்­றது. தமிழ் சினி­மா­விலே இடை­வேளை வரு­வ­துபோல் கத்தார் அரசின் சம­ரச முயற்சி ஹமாஸ் சிறை­பி­டித்த இஸ்­ர­வே­லர்­களை விடு­விக்கும் வரை­யி­லேயே நீடித்­தது. அவர்கள் விடு­த­லை­யா­னதும் ஹமா­ஸின்மேல் அமெ­ரிக்­காவும் இஸ்­ர­வேலும் பழியைச் சுமத்தி போரின் அடுத்த கட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளன. இவற்­றுக்கு மத்­தியில் துருக்­கியும் ஈரானும் இஸ்­ர­வே­லுக்­கெ­தி­ராக வாய்­கி­ழியக் கர்­ஜித்­த­போதும் ஆன­பயன் ஒன்றும் இல்லை. இந்;த நிலை ஏன் குறிப்­பாக அர­பு­ல­குக்கும் பொது­வாக முஸ்லிம் உல­குக்கும் ஏற்­பட்­டது?

இந்த வினா­வுக்­கான விடையை வர­லாற்றுப் பின்­ன­ணி­யுடன் ஆரா­யு­முன்னர் இவ்­வி­டை­யுடன் சம்­பந்­தப்­பட்ட எனது இரண்டு ஆங்­கில ஆய்வுக் கட்­டு­ரை­களை வாச­கர்­களின் கவ­னத்­துக்கு அறி­மு­கப்­ப­டுத்த விரும்­பு­கிறேன். ஒன்று, Journal of Muslim Minority Affairs என்ற ஆங்­கில மொழி ஆய்வுச் சஞ்­சி­கையில் 2007ல் வெளி­வந்த இதழ் ஒன்றில் இடம்­பெற்ற முஸ்­லிம்­களின் சிந்­தனைத் தேக்கம்; என்ற தலைப்பில் எழு­தப்­பட்­டது. மற்­றது, International Journal of Islamic Thought  என்ற இன்னோர் ஆய்வுச் சஞ்­சி­கையில் 2018 இல் வெளி­வந்த முஸ்லிம் உலகு நழு­வ­விட்ட சந்­தர்ப்பம் என்ற பொருளில் எழு­தப்­பட்­டது. அந்தக் கட்­டுரை துருக்கி மொழி­யிலும் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு வெளி­யா­கி­யது. இந்த இரண்டு கட்­டு­ரை­க­ளுக்கும் இன்று பலஸ்­தீ­னத்தில் நடக்கும் சம்­ப­வங்­க­ளுக்கும் நேர­டி­யான எந்தத் தொடர்பும் இல்­லை­யெ­னினும் இன்று அர­பு­லகும் முஸ்லிம் உலகும் அனு­ப­விக்கும் இழி­நி­லையை விளங்­கு­வ­தற்கு அக்­கட்­டு­ரைகள் இரண்டும் கட்­டியம் கூறு­கின்­றன எனலாம்.

உல­கத்­தையே வியப்பில் ஆழ்த்தி, புதிய நாக­ரிகம் ஒன்­றையும் தோற்­று­வித்து, அறி­வு­லகின் எல்­லை­யிலே நின்­று­கொண்டு அந்த எல்­லை­யையும் தொடர்ந்து விஸ்­த­ரித்து, உலகின் ஏனைய இனங்­க­ளையும் ஆட்­சி­யி­ன­ரையும் தன்­கா­ல­டிக்குக் கொண்­டு­வந்து, செல்வச் செழிப்­புடன் விளங்­கிய அர­பு­லகு இன்று ஏன் அதே உல­கத்தால் ஒதுக்­கப்­பட்டு, உலக அரங்கில் ஊமை­யாகி, அறி­வு­லகின் ஓரத்­திலே நின்­று­கொண்டு, தன்­னையும் தன்னை நம்­பி­ய­வர்­க­ளையும் காப்­பாற்ற முடி­யாமல் படைத்­த­வன்மேல் பாரத்­தைப்­போட்டுக் கையேந்தி நிற்­கி­றது? இந்த நிலை­மைக்குப் படைத்­தவன் பழியா? அல்­லது படைத்­தவன் வகுத்த பாதையைத் தவ­ற­விட்டு அதனை மீண்டும் அடை­வ­தற்கு அவன் அளித்த சந்­தர்ப்­பங்­க­ளையும் விர­ய­மாக்­கிய அவ­னது படைப்­பு­களின் தவறா? இதற்­கான விடை­யைத்தான் எனது அன்­றைய இரு கட்­டு­ரை­களும் ஆராய்ந்­தன. அந்த அடிப்­ப­டை­யி­லேதான் இக்­கட்­டு­ரையும் இன்­றைய நிலை­மையை விளக்க விரும்­பு­கி­றது.

வர­லாற்றில் ஓர் அதி­சயம்

முதலில் ஒரு சுவை­யான வர­லாற்றுச் சம்­பவம். அது நடந்­தது 871ஆம் ஆண்டு. அப்­பா­சியர் ஆட்­சியில் பஸ்­ரா­விலே வாழ்ந்த இப்னு வஹ்ப் என்ற சுற்­றுலா வேட்கை கொண்ட ஒரு முஸ்லிம். பதி­னான்காம் நூற்­றாண்டில் மொரொக்­கோ­விலே வாழ்ந்த வர­லாற்றுப் புகழ்­பெற்ற பயணி இப்னு பத்­துத்தா போன்ற ஒரு­வ­ரென இவரை கரு­தலாம். இப்னு வஹ்ப் சீனா சென்­ற­போது அங்கே சீனப் பேர­ர­சனின் அரச ஊழி­யர்கள் அவரை தகுந்த மரி­யா­தை­க­ளுடன் அர­ச­னின்முன் கொண்டு நிறுத்­தினர். இப்னு வஹ்ப் அப்­பா­சியர் ஆட்­சியின் ஒரு பிரஜை என அறிந்­ததும் சீன அரசன் அவ­ரிடம் கேட்ட முத­லா­வது கேள்வி உலக அர­சர்­களை நீங்கள் எவ்­வாறு வரி­சைப்­ப­டுத்­து­கி­றீர்கள் என்­ப­தாகும். அதற்­கான விடை தனக்குத் தெரி­யாது என்றார் அந்தப் பயணி. உடனே சீன அரசன் அந்த வினா­வுக்கு அளித்த பதில் இதோ: “உலகின் மிகப்­பெரும் பகு­தியை ஆட்சி புரி­பவர் உங்கள் அரசர். அவர்தான் உலக அர­சர்­களுள் மத்­தியில் இருக்­கிறார். மற்­ற­வர்கள் அவரைச் சுற்­றியே இருக்­கி­றார்கள். அவரை நாங்கள் அர­சர்­க­ளுக்­கெல்லாம் அரசர் என்போம். அவ­ருக்கு அடுத்­த­தாக நான். மூன்றாம் இடத்தில் துருக்­கியின் அரசன். அதற்­க­டுத்து இந்­தி­யாவின் அரசன். அதற்­க­டுத்து பைசாந்­திய அரசன்”. அரபு மக்­களின் புகழ் எந்த இடத்தில் அன்று இருந்­தது என்­ப­தற்கு இச்­சம்­பவம் ஒரு சிறிய உதா­ரணம். பொரு­ளா­தா­ரத்­திலும் பக்­தாதின் தினார் நாணயம் இன்­றைய அமெ­ரிக்க டொலா­ராக இருந்த காலம் அது. அதனால் ஈர்க்­கப்­பட்ட இங்­கி­லாந்து அரசன் ஒபா 774 இல் இங்­கி­லாந்தின் நாண­யத்தின் ஒரு பக்­கத்தில் உரோம எழுத்­துக்­க­ளினால் தலை­கீ­ழாக முகம்மத் ரசூ­லுல்லாஹ் என்ற வாக்­கி­யத்­தையும் பொறித்­தி­ருந்தார்! இந்தப் புகழ் முஸ்லிம் உல­குக்கு எங்­கி­ருந்து வந்­தது, அதற்கு என்ன ஆனது வாச­கர்­களே?

குர்ஆன் செய்த புரட்சி

அரபு மக்­களை வர­லாற்­றுக்குள் நுழைத்­ததே குர்ஆன். பெரு­மா­னாரும் குர்­ஆனும் இல்­லை­யென்றால் அரபு மக்கள் வர­லாற்றின் புழு­திக்குள் மேலும் பல நூற்­றாண்­டுகள் புதை­யுண்டு கிடந்­தி­ருப்பர். அவ்­வாறு குர்ஆன் செய்த புரட்­சிதான் என்­னவோ? அதனை இரண்­டொரு வரி­க­ளுக்குள் சுருக்கி விடலாம். ‘இறை­வ­னைத்­த­விர வேறு எதற்­குமோ யாருக்­குமோ நீங்கள் அடி­ப­ணியத் தேவை இல்லை. இயற்கை உங்கள் கால­டியில். அது உங்­க­ளுக்குப் பொது­வு­டமை. அறிவு மட்­டுமே உங்­களின் தனி­யு­டமை. இரண்­டையும் உங்­க­ளுக்கு நான் அமா­னிதச் சொத்­தாகத் தந்­தி­ருக்­கிறேன். இறு­தியில் எனக்கு நீங்கள் பொறுப்புக் கூற வேண்டும்’: குர்­ஆனின் இந்தத் தாரக மந்­தி­ரத்தை பெரு­மா­னாரின் வழி­காட்­ட­லின்கீழ் அன்­றைய அரபு மக்கள் புரிந்­து­கொண்டு அரே­பியப் பாலை­யை­விட்டும் கிளர்ந்­தெ­ழுந்­தனர். அந்தக் கிளர்ச்­சியின் வெளிப்­பாடே அவர்கள் அமைத்த பேர­ர­சு­களும், கலை­யு­லகும், கலா­சா­ரமும், பொரு­ளு­லகும். அந்த மந்­தி­ரத்­துக்கு இன்று என்ன நடந்­தது? கஸ்­ஸாலி இமாம் குர்­ஆ­னைப்­பற்றி விமர்­சிக்கும் போது அதை இறை­வ­னிடம் இருந்து பெரு­மானார் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கும் அவர்கள் மூலம் மனித சமு­தா­யத்­துக்கும் வந்த ஒரு கடிதம் என்றார். ஒரு கடி­தத்தை வாசித்­து­விட்டு அதன்­படி ஒழு­கு­வதைத் தவிர்த்து அந்தக் கடி­தத்­தையே பல ராகங்­களில் வாசித்து வாசித்து மனப்­பாடம் பண்­ணி­விட்டால் அந்தக் கடி­தத்தின் செய்­தியை நடை­மு­றைப்­ப­டுத்தி விட்­ட­தாகக் கருத முடி­யுமா? குர்­ஆனின் செய்­தியை விளங்கி அதன் தாரக மந்­தி­ரத்தை நடை­முறைப் படுத்­தி­யதால் அன்­றைய முஸ்­லிம்­களின் கால­டியில் உல­கமே சர­ண­டைந்­தது. அந்த மந்­தி­ரத்தை முஸ்­லிம்கள் மறந்த நிலையில் அதை முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து மற்­ற­வர்கள் கற்று அதன்­படி செயற்­பட்­டதால் இன்று மற்­ற­வர்­களின் கால­டியில் அரே­பி­யரும் முஸ்­லிம்­களும் சர­ண­டைந்து கிடக்­கி­றார்கள். முஸ்­லிம்­களோ அன்று வந்த கடி­தத்தை இன்னும் வாசித்­துக்­கொண்டே இருக்­கி­றார்கள். அதன் விளை­வைத்தான் இன்று பலஸ்­தீனம் உணர்த்­து­கி­றது.

நழு­வ­விட்ட ஒரு சந்­தர்ப்பம்

இந்­தி­யாவின் முக­லா­ய­ராட்­சிக்கு 1857ல் முற்­றுப்­புள்ளி வைத்து, அதனைத் தொடர்ந்து ஐரோப்­பா­வையே கதி­க­லங்கச் செய்த உது­மா­னியப் பேர­ர­சையும் திட்­ட­மிட்டுச் சின்­னா­பின்­ன­மாக்கி, அப்­பே­ர­ர­சுக்கு ஐரோப்­பாவின் நோயாளி என்ற பட்;டமும் சூட்டி, அந்தப் பேர­ரசின் நிழலில் வாழ்ந்த இனங்­க­ளி­டையே தேசியம் என்ற போர்­வையில் பிரி­வி­னை­வா­தத்தை வளர்த்து, ஒன்­று­பட்­டி­ருந்த இனங்­களை வேறு­வே­றாக்கி, தனிப்­பட்ட நாடு­களை தனது விருப்­பத்­திற்­கேற்ப எல்லை வகுத்து உரு­வாக்கி, பின்னர் அந்த நாடு­க­ளையே கைப்­பற்றித் தனது குடி­யேற்ற நாடு­க­ளாக்­கிய பிரித்­தா­னியா மீண்டும் ஓர் இஸ்­லா­மியப் பேர­ரசு உலகில் எங்­கா­வது தோன்­று­வதைத் தடுத்­தாக வேண்டும் என்ற நோக்கில் மத்­திய கிழக்கில் அர­பு­மக்­களின் மத்­தியில் 1948ல் அறி­மு­கப்­ப­டுத்­தி­யதே இஸ்­ரவேல். அதே நோக்­கம்தான் இன்­று­வரை ஐரோப்­பிய அமெ­ரிக்க பிரித்­தா­னிய ஆத­ரவை இஸ்­ர­வே­லுக்குத் திரட்­டிக்­கொ­டுத்துக் கொண்­டி­ருக்­கி­றது. 1979ல் ஈரானில் ஏற்­பட்ட புரட்­சியைத் தொடர்ந்து தோன்­றிய இஸ்­லா­மிய விழிப்­பு­ணர்வும் புதிய முஸ்லிம் உலக ஒழுங்­கொன்று அமைக்­கப்­படல் வேண்டும் என்ற தாகமும் செயல்­வ­டி­வு­பெறா வண்ணம் இன்­று­வரை அமெ­ரிக்­காவும் ஐரோப்­பாவும் அவற்றின் நேச நாடு­களும் செயற்­பட்டு வரு­கின்­றன. இந்தச் சதித்­திட்­டத்தின் ஓர் அங்­க­மா­கவே இன்று நடை­பேறும் பலஸ்­தீனப் பேரையும் கருத வேண்டும்.

இஸ்­ர­வேலின் வளர்ச்­சி­யையும் அதன் பலத்­தையும் கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மானால் அதன் அண்டை அரபு நாடு­களுள் ஏதா­வ­தொன்று இஸ்­ர­வே­லுக்குச் சம­மான பலத்­துடன் வள­ர­வேண்டும். அந்த எண்ணம் எகிப்தின் அன்­றையத் தலைவன் அப்துல் நாச­ருக்கு இருந்­தது. ஆனால் எகிப்து ஒரு வறிய நாடு;. அதனால் நாசரின் எண்ணம் கைகூட வாய்ப்­பி­ருக்­க­வில்லை. மற்­றைய நாடு­களின் உத­வியை நம்பி எந்த ஒரு வறிய நாடும் வள­முள்ள பல­சா­லி­யாக மாற முடி­யாது. எனவே முதலில் வறுமை விரட்­டப்­படல் வேண்டும். அவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பமே 1980களில் அரபு எண்­ணெய்­வள நாடு­க­ளுக்குக் கிட்­டி­யது. தமது நாடு­களின் பாலை­வ­னங்­களை பொன்னால் செப்­ப­னி­டப்­பட்ட தரை­க­ளாக மாற்­று­வ­தற்குச் செல­விட்­டாலும் தீhhத அள­வுக்கு பணம் கொட்­டோ­கொட்­டென இந்­நா­டு­களில் கொட்­டி­யது. ஆனால் அந்தப் பணத்தை என்ன செய்­தார்கள்? தமது நாடு­களை அன்­னி­யரின் தொழில்­நுட்­பத்­து­டனும் ஆலோ­ச­னை­க­ளு­டனும், வறிய நாடு­களின் தொழி­லாளர் வியர்­வை­யு­டனும் உல்­லா­ச­பு­ரிக மாற்றி அன்று ஆயி­ரத்தோர் இர­வு­க­ளாக உரைக்­கப்­பட்ட கன­வு­களை நன­வாக்க முனைந்­தார்­க­ளே­யன்றி இஸ்­ர­வே­லுக்கு ஈடாக தம்மை ஒரு பல­சாலி நாடாக மாற்ற வேண்­டு­மென்ற எண்­ணத்தில் அவை எது­வுமே செயற்­ப­ட­வில்லை. இந்த ஏமாற்­றத்தை மேலும் விப­ரிக்­காமல் அதே காலப்­ப­கு­தியில் வறு­மையால் பீடிக்­கப்­பட்டுக் கிடந்த வேறு இரு நாடு­களின் மாற்­றத்­துடன் ஒப்­பிட்­டுப்­பார்ப்­பது பொருத்­த­மா­னது.

சீனாவும் இந்­தி­யாவும் 1970கள் முடி­யும்­வரை வறு­மைக்கு இலக்­க­ண­மாகக் கரு­தப்­பட்ட நாடுகள். சீனா தனது பொது­வு­டமைக் கொள்­கையை கைவிட்டு சந்தைப் பொரு­ளா­தா­ரத்தைத் தழு­வி­யது. இந்­தி­யாவும் தனது சம­வு­டமை கொன்­கை­களைக் கைவிட்டு திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கையைக் கடைப்­பி­டித்­தது. அந்த நாடுகள் இரண்டும் விஞ்­ஞான வளர்ச்­சி­யிலும் தொழில்­நுட்­பத்­தி­ற­னிலும் கல்வி மேம்­பாட்­டி­லு­மாக தமது செல­வி­னங்­களை முடக்கி பிராந்­திய வல்­ல­ர­சு­க­ளாகத் தம்மை மாற்றிக் கொள்ளும் முயற்­சியில் போட்­டி­போ­டுட்டுக் கால்­வைத்­தன. இன்று அமெ­ரிக்­கா­வுக்குச் சவா­லாகச் சீனாவும், சீனா­வுக்குச் சவா­லாக இந்­தி­யாவும் வளர்ந்­துள்­ளதை யார்தான் மறுக்­க­மு­டியும்? இவற்­றுடன் அரபு நாடு­களின் மாற்­றத்­தையும் ஒப்­பிட்டு அவர்­க­ளிடம் இத்­தனை செல்­வமும் இருந்தும் இன்னும் அமெ­ரிக்­கா­வி­னதும் மேற்கு நாடு­க­ளி­னதும் அடி­வ­ரு­டி­க­ளாக வாழ்ந்­து­கொண்டு பலஸ்­தீனம் இஸ்­ர­வேலால் அழிக்­கப்­பட்டுப் படிப்­ப­டி­யாகப் பறி­போ­வதைத் தடுக்­க­மு­டி­யாமல் மௌனி­க­ளாக இருக்கும் நிலையைப் பார்த்துக் கண்ணீர் வடிக்­காமல் இருக்க முடி­யுமா? இஸ்­ர­வே­லுக்கு ஈடாக மாறக்­கூ­டிய ஓர் அரிய வாய்ப்­பினை கைந­ழுவ விட்­ட­பின்னர் அல்­லாஹ்­விடம் கையேந்­து­வதில் ஏதும் பய­னுண்டா முஸ்­லிம்­களே? அல்லாஹ் இயக்­கு­பவன் அல்ல உத­வுவன். உங்­களை நீங்­களே மாற்றிக் கொள்­ளா­த­வரை இறையும் உங்­களை மாற்­றாது என்ற திரு­வ­ச­னத்தை மறந்­தது ஏனோ?

யார் குற்றம்?

இஸ்­ரவேல் உரு­வா­கிய நாளில் இருந்தே அந்த உரு­வாக்­கத்தின் அந்­த­ரங்க நோக்­கத்தை அரபு நாடுகள் உணர்ந்­தி­ருக்க வேண்டும். அது அரபு நாடு­க­ளுக்கு எதி­ராக மட்­டு­மல்ல, இஸ்­லா­மிய சமு­தா­யமே மீண்டும் தலை­தூக்­காத வண்ணம் அந்தச் சமு­தா­யத்­துக்குச் சாவு­மணி அடிக்கும் வகையில் அன்­றய வல்­ல­ர­சினால் தீர்­மா­னிக்­கப்­பட்ட ஒரு சூழ்ச்­சியே இஸ்­ரவேல். இரண்­டா­வது உல­க­மகா யுத்­தத்தின் பின்னர் கைத்­தொழில் நாக­ரிகம் அமெ­ரிக்­காவின் தலை­மையில் வள­ரத்­தொ­டங்கி அந்த நாக­ரி­கத்தின் உயிர்­நா­டி­யாக எண்­ணெய்­வளம் மாறி­ய­வுடன் அந்த வளத்தைத் தனது பிடிக்குள் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக எண்ணெய் வள­நா­டு­களைத் தனது வலைக்குள் சிக்­க­வைக்கும் அதே வேளையில்  அந்த நாடு­களுள் எங்­கா­கிலும் அமெ­ரிக்­கா­வுக்­கெ­தி­ரான புரட்­சித்­தாகம் தலை­யெ­டுத்தால் அதனை நசுக்­கு­வ­தற்கு உடந்­தை­யாக இஸ்­ர­வேலை வளர்த்­தெ­டுக்கும் நோக்­கி­லுமே அமெ­ரிக்க ராஜ­தந்­திரம் இன்­று­வரை செயற்­பட்டு வரு­கின்­றது.

இந்த நோக்­கி­லேதான் அன்று ஈரானை முறி­ய­டிக்க ஷீயா சுன்னி என்ற மதப் பிரி­வி­னையை அமெ­ரிக்கா முன்­னின்று வளர்த்­தது. அதன் பின்னர் இஸ்­லா­மிய அரசு என்ற கோஷத்தில் உரு­வா­கிய முஸ்லிம் இயக்­கங்­களை எல்லாம் பயங்­க­ர­வாதம் என்ற போர்­வைக்குள் உள்­ள­டக்கி அவற்­றிற்­கெ­தி­ரான வன்­மு­றை­களை அமெ­ரிக்கா அவிழ்த்­து­விட்­டது. அரபு நாடு­களின் ஜன­நா­ய­க­மற்ற அர­சு­களை அகற்­ற­வென்று 2011ல் மலர்ந்த அரபு வசந்­தத்­தையும் பழ­மை­வா­தத்­துக்கு ஆத­ரவு வழங்கி அமெ­ரிக்­காவே அந்த வசந்­தத்­தையும் ஒரு பனி­யுறை கால­மாக மாற்­றி­யது. இப்­போது சுதந்­திர தாகத்­தினால் பலஸ்­தீன ஹமாஸ் போரா­ளிகள் இஸ்­ர­வேலின் அடிமைச் சங்­கி­லியைத் தகர்த்தெறி­ய­வென ரொக்­கட்­டு­களை வீசத் தொடங்­கவே அதற்குப் பதி­லாக பலஸ்­தீ­னத்­தையே இஸ்ரவேலுக்குச் சொந்தமாக்க அமெரிக்கா முழு ஆதரவையும் வழங்குகிறது. அந்த நிலையில் இஸ்ரவேல் அப்பாவிப் பலஸ்தீனர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யவேண்டும் என்று அமெரிக்கா கூறுவது தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுவதுபோல் இல்லையா? என்ன பம்மாத்து இது? இதனிடையே அரபு நாடுகளோ மௌனமாய் நிற்கின்றன. இந்த அவலத்தை என்னென்று வருணிப்பதோ? உலக மனச்சாட்சியின் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஜோ பைடனும் நெத்தன்யாகுவும் மட்டுமல்ல அரபு நாட்டுத் தலைவர்களும்தான்.

1961ல் இஸ்ரவேலின் விமானம் ஒன்றை யாசிர் அறபாத்தின் பலஸ்தீன விடுதலை முன்னணி கடத்திச்சென்று குண்டுவீசித் தகர்த்தபின்னர் அறபாத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்ததை நான் கேட்டேன். அந்தப்பதிலில் இஸ்ரவேலுக்குள் அவர்களின் இயக்கம் நுழைவது நேரடியாகவல்ல அரபு நாடுகளின் ஊடாகவே என்றார். இன்றோ ஹமாஸ் போராளிகள் தமது உயிரைப் பணயம்வைத்து அச்சமின்றி அமெரிக்க-இஸ்ரவேல் இனச்சுத்திகரிப்பை எதிர்த்துப் போராடுகின்றனர். பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனப் பாலகர்களும் பெண்களும் நோயாளிகளும் முதியவர்களும் இஸ்ரவேலின் குண்டுகளுக்கு இரையாகினாலும் உலகநீதியும் உலக மக்களின் ஆதரவும் பலஸ்தீனப் போராளிகளின் பக்கமே நிற்கின்றது. அந்த ஆதரவு இஸ்ரவேல் மக்களையும் அதன் பக்கம் ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. பலஸ்தீனத்தின் சாம்பலில் இருந்தாவது ஒரு புதிய வசந்தம் அரபுலகில் மலருமா? – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.