யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது மீண்டும் தாக்குதல்கள் தொடர்கின்றன

0 109

ஏ.ஆர்.ஏ.பரீல்

இஸ்­ரேல்–­ஹமாஸ் தரப்­பி­டையே கடந்த அக்­டோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் ஆரம்­பிக்­கப்­பட்ட யுத்தம் தற்­கா­லி­க­மாக உடன்­ப­டிக்­கை­யொன்றின் கீழ் ஒரு வார­காலம் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீண்டும் யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் ஒரு வார­கால யுத்த நிறுத்­தத்தின் போது சுதந்­தி­ர­மாக மூச்­சு­விட்டுக் கொண்­டி­ருந்த பலஸ்­தீன மக்கள் மீண்டும் யுத்த நெருக்­க­டிக்குள் சிக்கி அல்­ல­லு­று­கின்­றனர்.

தற்­கா­லிக தற்­கா­லிக யுத்த நிறுத்தம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட் கிழ­மை­யுடன் முடி­வுக்கு வந்­தது. இந்த தற்­கா­லிக யுத்த நிறுத்த ஒப்­பந்தம் ஹமாஸ் படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டுக்குள் இருக்கும் இஸ்­ரே­லிய பணயக் கைதி­களில் ஒரு தொகை­யி­னரை விடு­விப்­ப­தற்கும், இஸ்­ரேலில் சிறை­வைக்­கப்­பட்­டி­ருக்கும் பலஸ்­தீன சிறைக்­கை­தி­களில் ஒரு தொகு­தி­யி­னரை விடு­வித்துக் கொள்­வ­தற்கும், காஸா பிர­தே­சத்­துக்குள் மனி­தா­பி­மான உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­மா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டது. கத்தார் நாட்டின் மத்­தி­யஸ்­தத்­து­ட­னான பேச்சு வார்த்­தை­க­ளை­ய­டுத்தே தற்­கா­லிக யுத்த நிறுத்­தத்­திற்கு இஸ்­ரேலும், ஹமாஸ் அமைப்பும் இணங்­கி­யி­ருந்­தனர்.

தொட­ராக மேற்­கொள்­ளப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளை­ய­டுத்து முதற்­கட்­ட­மாக அமு­லுக்கு வந்த 4 நாள் தற்­கா­லிக யுத்த நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீடிக்­கப்­பட்டு இறு­திக்­கட்­ட­மாக மொத்தம் ஏழு நாட்கள் (நவம்பர் 30 வரை வரை) நீடிக்­கப்­பட்­டது.

தற்­கா­லிக யுத்த நிறுத்த ஒப்­பந்தம் முடி­வுக்கு வந்த பின்பு கடந்த முதலாம் திகதி முதல் இஸ்ரேல் காஸா மீதான தாக்­கு­தல்­களை மீண்டும் ஆரம்­பித்­தது. ஹமாஸின் இலக்­குகள் மீது கடந்த வெள்­ளிக்­கி­ழமை தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக இஸ்­ரே­லிய பாது­காப்பு அமைச்சு அறி­வித்­தது. எனினும் இத் தாக்­கு­தலில் 193 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­ட­தாக காஸா சுகா­தார அமைச்சு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

மேலும் காஸாவில் இஸ்ரேல் தாக்­கு­தல்­க­ளினால் பலி­யானோர் தொகை 15900 ஆக அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. இவர்­களில் 6600 பேர் சிறு­வர்­க­ளாவர். உயி­ரி­ழப்­பு­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இது­வரை இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களில் 41500 பலஸ்­தீ­னர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.

கடந்த சனிக்­கி­ழமை மாலை ஹமாஸ் போரா­ளிகள் இஸ்ரேல் டெல்­அவிவ் நகர் மற்றும் அண்­மித்த பகு­தி­களை நோக்கி தொட­ராக ரொக்கட் தாக்­கு­தல்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர்.

‘‘நாங்கள் எங்­க­ளது இலக்­கினை அடையும் வரை இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை தொட­ருவோம். எங்­க­ளது பணயக் கைதிகள் அனை­வ­ரையும் ஹமா­ஸி­ட­மி­ருந்து விடு­வித்துக் கொள்ளும் வரை தாக்­கு­தல்கள் தொடரும்’’ என இஸ்­ரே­லிய பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யாகு தெரி­வித்­துள்ளார். மிகவும் கடி­ன­மான யுத்­தத்தை நாம் எதிர் கொண்­டுள்ளோம் என்றும் அவர் கூறி­யுள்ளார்.
இஸ்ரேல் படை­யினர் கான்­யூனிஸ் மற்றும் ரபா நகர் மற்றும் எகிப்­திய எல்லை பிராந்­தி­யங்கள் மீது பலத்த வான்­வழித் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர். கான் யூனி­ஸி­லுள்ள நாஸர் வைத்­தி­ய­சாலை நோயா­ளி­க­ளி­னாலும், காயப்­பட்­ட­வர்­க­ளி­னாலும் நிரம்பி வழி­கி­றது. நோயா­ளி­க­ளுக்கு தரையில் வைத்தே சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டு­கி­றது.

நான்கு குழந்­தை­களின் தாயான சமீரா ரொய்டர் செய்தி ஏஜன்­சிக்கு கருத்து தெரி­விக்­கையில், ‘‘கான் யூனிஸ் வைத்­தி­ய­சா­லையில் கடந்த 6 வாரங்­க­ளாகத் தங்­கி­யி­ருக்­கிறோம். இந்த ஆறு வாரங்­களில் தற்­போ­துதான் மிகவும் பயங்­க­ர­மான இரவைக் கழிக்­கிறோம். இஸ்­ரே­லிய படை­யினர் இந்த வைத்­தி­ய­சா­லைக்குள் நுழைந்து விடு­வார்கள் என்று பயப்­ப­டு­கிறோம் ’’ என்றார்.
காயங்­க­ளுக்­குள்­ளா­ன­வர்­க­ளினால் கான்­யூனிஸ் வைத்­தி­ய­சாலை நிரம்பி வழி­கி­றது என கான்­யூனிஸ் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து யுனிசெப் பேச்­சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரி­வித்­துள்ளார்.

மீண்டும் யுத்த நிறுத்­தத்­துக்­கான எந்த முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. பேச்­சு­வார்த்­தைகள் முழு­மை­யாக ஸ்தம்­பித்­துள்­ளன என பேச்­சு­வார்த்­தை­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்த பலஸ்­தீன அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.

கட்டார் நாட்டின் மத்­தி­யஸ்­தத்­துடன் இடம்­பெற்று வரும் யுத்த நிறுத்த பேச்­சு­வார்த்­தை­யி­லி­ருந்தும் மொசாட் புல­னாய்வு அதி­கா­ரி­களை விலக்கிக் கொண்­டுள்­ள­தாக இஸ்ரேல் கடந்த சனிக்­கி­ழமை அறி­வித்­துள்­ளது.
இதே­வேளை தற்­போது எந்த பேச்­சு­வார்த்­தையும் இல்லை என கடந்த சனிக்­கி­ழமை ஹமாஸ் அர­சியல் பிரிவின் பிர­தித்­த­லைவர் சாலே அல் அரூரி அல் ஜஸீரா ஊட­கத்­துக்கு தெரி­வித்­துள்ளார். அத்­தோடு யுத்தம் முடி­வுக்கு வரும் வரை இஸ்­ரே­லுடன் கைதிகள் பரி­மாற்றம் இடம் பெற மாட்­டாது எனவும் தெரி­வித்­துள்ளார்.

தற்­கா­லிக போர் நிறுத்த ஒப்­பந்­தத்தின் கீழ் 110 இஸ்­ரே­லிய பண­யக்­கை­திகள் பெண்கள், சிறு­வர்கள் மற்றும் வெளி­நாட்­ட­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் நர­கத்­தி­லி­ருந்து விடு­த­லை­யா­கி­யி­ருக்­கி­றார்கள். அவர்­களை வர­வேற்­கிறேன் என இஸ்­ரே­லிய பிர­தமர் தெரி­வித்­தி­ருக்­கிறார். இதற்கு மாற்­றீ­டாக 240 பலஸ்தீன் பெண்கள் மற்றும் இளைஞர் சிறைக்­கை­தி­களை விடு­தலை செய்­தி­ருக்­கிறோம் என்றும் அவர் கூறினார். மேலும் 140 இஸ்­ரே­லிய பண­யக்­கை­திகள் காஸாவில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இவர்­களில் பெண்­களும், இரா­ணுவ வீரர்­களும் அடங்­கு­கின்­றனர்.
இஸ்­ரேல்-­ ஹ­மா­ஸுக்கு இடை­யி­லான தற்­கா­லிக யுத்த நிறுத்­தத்தை நிரந்­த­ர­மான யுத்த நிறுத்­த­மாக மாற்ற வேண்­டு­மென ஜோர்தான் மன்னர் அப்­துல்லாஹ் கூறி வந்­தாலும் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இதே­வேளை ஜோர்தான் பலஸ்­தீன விவ­கா­ரத்தில் மேற்கு நாடு­க­ளுடன் ஒத்­து­ழைக்க மாட்­டா­ரென ஜோர்தான் மன்னர் கூறி­யுள்ளார். மேலும் ஜோர்­தானும், பஹ்­ரெய்னும் இஸ்­ரே­லி­லி­ருந்து தமது தூது­வர்­களை மீள் அழைத்துக் கொண்­டுள்­ளன. வளை­குடா நாடுகள் தமது தூது­வர்­களை இஸ்­ரே­லி­லி­ருந்து அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழுத்­தங்கள் தற்­போது அதி­க­ரித்து வரு­கின்­றன.

800க்கும் மேற்­பட்டோர் பலி
தற்­கா­லிக யுத்த நிறுத்தம் முடி­வுக்கு வந்­த­தி­லி­ருந்து கடந்த புதன் கிழமை வரை (நேற்று) சுமார் 800 க்கும் அதி­க­மானோர் இஸ்­ரேலின் தாக்­கு­தல்­க­ளினால் காஸா பிராந்­தி­யத்தில் பலி­யா­கி­யுள்­ள­தாக பலஸ்­தீன அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். கடந்த திங்­கட்­கி­ழமை இஸ்ரேல் நடத்­திய குண்டுத் தாக்­கு­தலில் பலஸ்­தீன செம்­பிறைச் சங்­கத்தின் உறுப்­பி­ன­ரான பலஸ்­தீன பிரஜை ஒரு­வரும் உயி­ரி­ழந்­துள்ளார்.

இதே­வேளை இஸ்­ரே­லிய இரா­ணுவம் காஸாவின் கான் யூனிஸ் பிராந்­தி­யத்தில் தாக்­கு­தல்­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது. இப்­ப­கு­தியின் பல்­வேறு மாவட்­டங்­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கு அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு இஸ்ரேல் இரா­ணுவம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. இது தொடர்­பான துண்டுப் பிர­சு­ரங்கள் அப்­ப­கு­தி­களில் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து அப்­ப­குதி மக்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

இஸ்­ரேலின் யுத்த தாங்­கிகள் தென் காஸா நக­ரான கான்­யூ­னி­ஸுக்கு வெளியே வரி­சை­யாக தரித்­தி­ருப்­ப­தாக உள்ளூர் செய்­தி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

வைத்­தி­ய­சா­லை­களில் குவியும் சட­லங்கள்
‘‘வைத்­தி­ய­சா­லைகள் இறந்த உடல்­க­ளினால் நிரம்பி வழி­கின்­றன. இஸ்­ரே­லிய படை­களின் தரை­வ­ழித்­தாக்­கு­தல்கள் தென் காஸாவில் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ள­த­னாலே இந்­நி­லைமை உரு­வா­கி­யுள்­ளது’’ என அல் ஜெஸீரா செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தற்­கா­லிக யுத்த நிறுத்தம் முடி­வுக்கு வந்த பின்பு காஸாவின் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு டசின் கணக்­கான ஜனா­ஸாக்கள் கொண்டு வரப்­ப­டு­கின்­றன. இஸ்ரேல் காஸா பிராந்­தி­யத்தின் மீது தொடர்ச்­சி­யாக வான்­வழித் தாக்­கு­தல்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கி­றது.

‘‘இஸ்ரேல் படை­யி­னரின் தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு எங்­க­ளது வைத்­தி­ய­சா­லைகள் மூலம் எத்­த­கைய உத­வி­க­ளையும், சிகிச்­சை­க­ளையும் வழங்க முடி­யா­துள்­ளது. எங்­க­ளது வைத்­தி­ய­சா­லை­களின் அனைத்து வைத்­திய உப­க­ர­ணங்­களும் இஸ்­ரே­லிய படை­க­ளினால் தாக்கி அழிக்­கப்­பட்­டுள்­ளன’’ என காஸாவின் சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர் நாயகம் முனீர் அல் புர்ஸ் தெரி­வித்தார்.

காயங்­க­ளுக்­குள்­ளான பலஸ்­தீனர் ஒரு­வரை அல் அவ்தா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்ற சுகா­தார ஊழியர் ஒரு­வரும் இஸ்­ரே­லிய படை­யி­னாரால் சுடப்­பட்­டுள்ளார்.

காயங்­க­ளுக்­குள்­ளான 40 ஆயிரம் பேரில் 400 பேர் மாத்­தி­ரமே காஸாவின் தென்­ப­குதி ரபா எல்­லையைக் கடந்து சிகிச்­சை­க­ளுக்­காக கொண்டு செல்­லப்­பட்­டனர். எதி­ரி­களின் இலக்கு மக்­களை கொலை செய்­வதே என்றும் அவர் கூறினார்.

கிழக்கு காஸா நிக­ரான சுஜய்யா மீது தாக்­குதல் மேற்­கொண்ட இஸ்ரேல் படை­யினர் அங்கு 50 க்கு மேற்­பட்ட வீடு­களைத் தாக்கி அழித்­துள்­ள­தாக பலஸ்தீன் வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இங்கு நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் தாக்­கு­தலில் பலி­யா­கி­யுள்­ள­தா­கவும் பலஸ்தீன் வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

‘‘இஸ்ரேல் யுத்­தத்தைத் தொடர்­வ­தற்கு அமெ­ரிக்கா பச்சை விளக்கு காட்­டி­யுள்­ளது. அத­னாலே இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கி­றது’’ என பட்ட கற்­கை­க­ளுக்­கான தோஹா கல்வி நிலை­யத்தின் உதவி பேரா­சி­ரியர் தமர் கார்மொன்ட் தெரி­வித்­துள்ளார். ‘‘அவர்கள் அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து செயற்­ப­டு­கி­றார்கள். என்­றாலும் இஸ்­ரே­லி­யர்­க­ளிடம் அவர்­க­ளுக்கு சொந்­த­மான திட்­ட­மி­ருக்­கி­றது. அமெ­ரிக்கா பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கி­றது. ஆனால் யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்­கான அழுத்­தங்­களை இஸ்ரேல் மீது பிர­யோ­கிக்­க­வில்லை’’ எனவும் அவர் தெரி­வித்தார்.

சுரங்­கப்­பா­தை­களை கடல் நீரால் மூழ்­க­டிக்கத் திட்டம்
ஹமாஸ் படை­யி­னரை தோற்­க­டிக்க முடி­யாத நிலையில் இஸ்ரேல் காஸாவில் ஹமாஸ் படை­யி­னரின் இர­க­சிய சுரங்­கப்­பா­தை­க­ளுக்குள் கடல் நீரை நிரப்ப திட்­ட­மிட்­டுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.
மத்­திய தரைக்­க­டலில் இருந்து நிலத்­தடி வலை­ய­மைப்பு மூலம் நீரை சுரங்­கப்­பா­தை­க­ளுக்கு அனுப்­ப­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதற்­கென ஒவ்­வொரு மணி நேரத்­திற்கும் ஆயி­ரக்­க­ணக்­கான லீட்டர் தண்­ணீரை நிலத்­த­டிக்கு அனுப்பும் திறன் கொண்ட ஐந்து மோட்­டார்­களை இஸ்ரேல் வடி­வ­மைத்­துள்­ள­தாக இஸ்ரேல் பாது­காப்புப் பிரிவு உறுதி செய்­துள்­ளது. வடக்கு காஸாவில் அல்­ஷாதி அக­திகள் முகா­முக்கு வடக்கே ஒரு மைல் தூரத்தில் இந்த பம்­புகள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத்­திட்­டத்தை இஸ்ரேல் நிறை­வேற்­றினால் காஸா பகு­தியில் உள்ள நன்னீர் மாச­டை­வ­தோடு இதன் கார­ண­மாக மேலும் பல அபா­ய­க­ர­மான அழி­வுகள் ஏற்­படும் என நிபு­ணர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர். இத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் அமெ­ரிக்கா நட்பு நாடுகள் மற்றும் உலக நாடு­களின் எதிர்ப்பை இஸ்ரேல் எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும் எனவும் கூறப்­ப­டு­கி­றது.
இதே­வேளை ஹமாஸின் 800 க்கும் மேற்­பட்ட சுரங்­கங்­களில் 500 க்கும் அதி­க­மா­ன­வற்றை தாம் அழித்து விட்­ட­தாக இஸ்ரேல் ஏற்­க­னவே கூறி­யுள்­ளது. எனினும் ஹமாஸ் இதனை முற்­றக மறுத்­துள்­ளது..

என்ன நடக்கப் போகி­றது?
தற்­கா­லிக யுத்த நிறுத்த காலத்தில் இஸ்­ரே­லிய பணயக் கைதிகளின் விடுதலையோடு, ஹமாஸின் மறைவிடங்கள், சுரங்கப் பாதைகள், ஆயுதக்களஞ்சிய சாலைகள் போன்ற விபரங்களை நிச்சயம் இஸ்ரேல் திரட்டியிருக்கும். அதனைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தல்­களை மேலும் உக்­கி­ரப்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதே­போன்று இக் காலப்­ப­கு­திக்குள் ஹமாஸும் தன்னை பல வழி­க­ளல் தயார்­ப­டுத்­தி­யி­ருக்கும் என­ நம்­பப்­ப­டு­கி­றது. எனவே நிரந்தர யுத்த நிறுத்தத்தை இப்­போ­தைக்கு எதிர்பார்க்க முடியாது.
இஸ்ரேல் தற்போது தெற்கு காஸா பகுதியில் கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே வட பகுதியில் தாக்குதல் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்பட்டு விட்டன. தெற்கு பகுதியிலிருக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவித்துள்ளது. செல்ல இடமின்றி மக்கள் தவிக்கின்றனர். அங்கு நிலவும் குளிரான காலநிலை அப்பகுதி மக்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்கியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் நவீன ஆயுதங்கள் மூலம் வான்வழி, தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. காஸாவை முழுமையாக அழிப்பதே இஸ்ரேலின் இலக்கு இந்நிலையில் காஸா மக்­களைப் பாது­காப்­ப­தற்­கான எந்­த­வித ஆக்­க­பூர்­வ­மான திட்டங்­க­ளையும் அரபு நாடு­க­ளி­ட­மி­ருந்து காண­வில்லை. அம்­மக்­க­ளுக்­காக பிரார்த்­திப்­­போம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.